Showing posts with label உவைசி. Show all posts
Showing posts with label உவைசி. Show all posts

பார்லிமண்ட்டில் மோடிக்கு சவால் விட்ட ஹைதராபாத் எம்.பி – உவைசி பேச்சின் தமிழாக்கம்!

Post by பஷீர் மைதீன்.

முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் குறித்து முஸ்லிம்கள் அறிஞர்கள் தங்களது சொற்பொழிவுகளில் பேசி வந்த கர்ஜனைகளை ஹைதராபாத் எம்.பி அசத்துன் உவைசி அவர்கள் நேற்று பார்லிமண்டில் மோடி மற்றும் நூற்றுக் கணக்கான பா.ஜ.க எம்பிக்களுக்கு முன்னால் பேசி பார்லிமண்டையே ஆச்சரிப்பட வைத்துவிட்டார்.
அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத பி.ஜே.பி எம் பிக்கள் இடையில் அவரை மறித்து கூச்சலிட்டனர். இருந்த போதிலும் அவர்களை சமாலித்து அசத்து உவைசி பேசியது குறிப்பிடதக்கது.
ஒரு கட்டத்தில் பி.ஜே.பி எம்.பி ஒருவர் அவரது பேச்சை நிறுத்தச் சொல்லும் போது ”உன் தம்பிக்கு போய் சொல்லிக்கொடு என்ன பேசனும் ன்னு எனக்கு நீ சொல்லாத எதுவா இருந்தாலும் சபா நாயகர் கிட்ட சொல்லு எனக்கு நான் என்ன பேசுறேன்னு தெரியும்”  என்றார்.
அவர் பேசிய உரையின் தமிழாக்கம்… (சுருக்கம்)
இந்தியாவில் நான்கு சம்பங்கள், இந்த நாட்டின் அடித்தளத்தை ஆட்டும் அளவிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலாவது காந்தி படுகொலை, இரண்டாவது சீக்கியர்கள் படுகொலை, மூன்றாவது பாபர் மசூதி இடிப்பு, நான்காவது குஜராத் இஸ்லாமிய இன அழிப்பு.
இந்த சம்பவங்களையும், இதற்கு காரணமானவர்களையும், மனிதன்மை இருக்கும் வரை யாரும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.
இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையை பார்த்தால், காந்தியை கொன்ற கோட்செவிற்கு பாரத ரத்னா அல்லது வீர் சக்ர விருது கிடைத்து விடும் போலிருக்கிறது.
மொடியின் வெற்றி ஒரு சோககரமான வெற்றி.
இந்திய அரசியலமைப்பை காப்பாற்ற உறுதியெடுத்து, நாட்டுமக்களின் மேன்பாடு அனைத்து எம்.பி க்களும் பேசுகின்றார்கள்.
நாட்டுமக்கள் என்பது அனைவரையும், அனைத்து சமுதாயாததையும் உள்ளடுக்கியதாக இருக்க வேண்டும்.
உங்களது (மோடியை பார்த்து) அமைச்சர் முதல் நாளிலேயே முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லை, பாரிசீகள் மட்டும்தான் சிறுபான்மையினர் என்கிறார், என்பதாயிரம் பாரிசிகளுக்காகவா ஒரு மத்திய அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சீக்கிக்கியர்கள், புத்தர்கள், கிறிஸ்த்துவர்களின் நிலை என்ன?
நாலரை சதவிகித இட ஒதுக்கீட்டில் இந்த அரசின் நிலை என்ன?
பிரதமர் மோடி சமபங்கு, சம உரிமை என பேசுகிறார். அக்ஷாதம் விஷயத்தில், உச்சநீதி மன்றம் தற்போதைய பிரமரும், அன்று குஜராத்தின் உள்ள துறை அமைச்சருமாக இருந்த மோடியை கண்டித்துள்ளது. இதற்கு இந்த மோடி அரசு மன்னிப்பு கேட்குமா?
நான் இங்கு பாதிக்கப்பட்டவர்களின் சொந்தக்காரணாக, பேசமுடியாதவர்களின் கூறலாக கேட்கிறேன், அநீதி இழைக்கப் பட்டோருக்கும், குஜராத்தில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி ஆத்மாக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
மோடி அரசு வந்ததும் இந்த நாட்டில் என்ன நடக்கிறது ? புணே உட்பட நாட்டில் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இதற்கு காரணமான இயக்கங்களையும், அபினவ் பாரத் உட்பட அனைத்து இயக்கங்களும் தடை செய்ய வேண்டும் என்று கர்ஜித்த குரலில், பல இடைமரியல்களுக்கு மத்தியில் சலிக்காமல் சமாலித்து பதிலது கொடுத்து பார்மன்ட்டில் பேசியுள்ளார் அசத்துன் உவைசி!
அவரது பேச்சின் வீடியோ:

Thanks to :http://www.appadiaa.com/asaddun-uvasi-speech-in-perliment-2014/