Quran

இந்த வீட்யோவைப்பாருங்கள் ஒரு துளி கண்ணீர் வரவில்லை என்றால் நான்...


Jasakallah,..... Shajiams Mohammed Shajahan

Indian Freedom - Muslims



KFC ஃப்ரைடு சிக்கன் / KFC Fried Chicken



அனைவருக்கும் பிடித்தமான KFC ஃப்ரைடு சிக்கன் வீட்டிலே செய்யலாம்.. 

தேவையான பொருட்கள்:சிக்கன் கால் பகுதி - (பேபி சிக்கன்என்றால் நல்லாயிருக்கும்) 4. (இதனை நன்றாக சுத்தம் செய்து முள் கரண்டி வைத்து அங்கங்கே குத்தி வைக்கவும்) கத்தி வைத்து கீற வேண்டாம்.
எலுமிச்சை சாறு - 1/2 மூடி
மிளகுத்தூள் - 5ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

சிக்கனுடன் எலுமிச்சை சாறு , மிளகுத்தூள் , மிளகாய்த்தூள் , உப்பு சேர்த்து விரவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிரட்டி வைக்க::

மைதா - 1 கப்,
ரஸ்க்தூள் -1/2 கப்,
அரைத்த வெங்காயம் - 3ஸ்பூன்,
பூண்டு பேஸ்ட் - 2ஸ்பூன்,பெப்பரிக்க பவுடர் - 1/2ஸ்பூன்
மிளாகாய்த்தூள் - 1/2ஸ்பூன்
மிளகுத்தூள் - 2ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு
எண்னெய் - பொறிக்க தேவையான அளவு
முட்டை - 2
பால் - 2ஸ்பூன்

ஒரு பவுலில் முட்டையும் பாலையும் கலந்து நன்றாக மிக்ஸ் செய்து வைக்கவும்

மேலே பிரட்டி வைக்க வேண்டிய பொருட்களை எல்லாம் வேறு ஒரு பவுலில் கலந்து தனியாக வைக்கவும்.

பிரட்டி வைத்த மைதா கலவையில் ஊற வைத்த சிக்கனை நன்றாக பிரட்டி எடுக்கவும்.

பிறகு அதே சிக்கனை முட்டை கலவையில் முக்கவும்

மீண்டும் இதனை மைதா கலவையில் பிரட்டவும் இப்படியே எல்லா சிக்கனும் பிரட்டி தனியாக ஒரு 10 நிமிடம் வைக்கவும்.

ஒரு வாணலியில் நன்றாக எண்ணெய் சூடு ஆன பின்பு ஓவ்வொரு சிக்கனாக போட்டு மிதமான தீயில் நன்றாக பொறிய விடவும்.

கரண்டியால் திருப்பி போட்டு வேக விடவும்.

குறைந்தது 10- 12 நிமிடங்கள் மிதமான தீயில் பொறிய விடவும்.

அதிக தணலில் வைத்தால்சிக்கனும் கருகி விடும். உள்ளேயும் சிக்கன் வேகாது.

Family Card


Jewels

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ..

 


"நபி (SAL) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்தார் .. அவர்களுடைய கையில் அவருடைய மகள் இருந்தாள் .. அவளுடைய கையில் இரண்டு தங்க வளையங்கள் இருந்தன .. நபி (SAL) அந்தப் பெண்மணியிடம் " நீ இதற்கு ஜகாத் கொடுத்துவிட்டயா ?" என்று கேட்டார்கள் .. அதற்கு அவர் "இல்லை " என்றார் .. "மறுமையில் அல்லாஹ் இதற்குப் பதிலாக நெருப்பினால் ஆன இரண்டு வளையங்கள் அணிவிப்பதை விரும்புகிறாயா ?" என்று கேட்டார்கள் .. (இதைக் கேட்டவுடன் ) அவள் அவற்றைக் கழற்றிக் கொடுத்துவிட்டார் என்று அமீர் இப்னு ஷு ஐ பு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார் ... (ஆதாரம் : அபூ தாவூத் , நசயீ , திர்மிதி ... இது ஹாகிமில் சஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது ....)

என் அருமை சகோதரிகளே !!!! தங்கம் வைத்திருப்பதோ , அணிவதோ தப்பில்லை .. ஆனால் அதற்கு முறையான ஜக்காத் கொடுத்து விடுங்கள் .. இல்லையேன்றால் மறுமையில் உங்களுக்கு ஏற்படும் நிலையை சந்திக்க தயாராக இருங்கள் ..

இதை அதிகமாக SHARE செய்து மற்ற சகோதரிகளுக்கு தெரியப்படுத்துங்கள் ..

Al-Quran


Dua - Al-Quran


Dua


Yuvan Shankar Raja - Revert to Islam





யுவன் சங்கர் ராஜா ஒரு வருடமாக இஸ்லாத்தை பின்பற்றுகிறாராமே!


சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு ஆண்டு காலமாக இஸ்லாத்தை பின்பற்றுவதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை பின்பற்றுவது பற்றி தான் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை பார்த்து இஸ்லாத்தை பின்பற்றுகிறாரோ என்று ஃபேஸ்புக், ட்விட்டரில் விவாதம் நடக்கிறது.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/yuvan-practises-islam-a-year-now-193274.html

ஒரு முஸ்லிம், அதற்காக பெருமைப்படுகிறேன், அல்ஹம்துலில்லாஹ்: யுவன்சங்கர் ராஜா


சென்னை: நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதுகுறித்து செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது யுவனே தனது டிவிட்டர் தகவலில் இதை உறுதிப்படுத்தியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் இந்த டிவிட்டர் தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. அதேசமயம், தான் 3வதாக யாரையும் திருமணம் செய்யவில்லை என்றும் யுவன் மறுத்துள்ளார்

பிசியான இசையமைப்பாளர் கோடம்பாக்கத்தின் பிசியான இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. அவர் தற்போது அஞ்சான் படத்திற்கு இசை அமைத்துக் கொண்டிருக்கிறார்.

மதம் மாறினாரா... இந்நிலையில் யுவன் முஸ்லிமாக மாறிவிட்டதாகக் கூறப்பட்டது. 
யுவன் சொல்வது என்ன... 
 இது குறித்து யுவன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.


குடும்பத்தினர் ஆதரவு 
 என் முடிவை எனது குடும்பத்தார் ஆதரிக்கின்றனர். எனக்கும் என் தந்தைக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.


யுவன் சங்கரின் மாற்றத்துக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு! 

இரண்டு நாட்களாக ஊடகத் துறையில் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டது யுவன் சங்கர் ராஜாவின் மன மாற்றத்தைப் பற்றியே! இவர் ஒரு பவுத்தராகவோ அல்லது கிறித்தவராகவோ மாறியிருந்தால் இந்த அளவு எதிர்ப்புகளை சம்பாதித்திருக்க மாட்டார். ஆனால் அவர் இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தது இந்துத்வாவாதிகளை ரொம்பவுமே கொதிப்படைய வைத்துள்ளது. தினமலரும் தனது பங்குக்கு இதை ஊதி பெரிதாக்க அந்த செய்தியை முதல் பக்கத்தில் போட்டது. ஆனால் நினைத்ததற்கு மாற்றமாக இந்துக்களின் பிறபடுத்தப்பட்ட மக்களில் பெரும்பாலோர் அவரது மாற்றத்தை வரவேற்றுள்ளது தினமலருக்கு திகைப்பை ஏற்படுத்தியிருக்க வெண்டும்.

உடனே மறு செய்தியாக சில நண்பர்கள் மூலம் கிடைத்ததாக ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் மலேசியாவில் ஒரு பெண்ணை மணந்து கொள்வதற்காக இஸ்லாத்துக்கு மாறியுள்ளதாகவும், கொலு வைப்பது சம்பந்தமாக தந்தை இளையராஜாவோடு தகறாரு வந்ததாகவும் எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு செய்தியை வெளியிட்டு தனது அரிப்பை தீர்த்துக் கொண்டது தின மலர்.

தமிழகத்தின் பிரபல பத்திரிக்கையான தினமலர் சம்பந்தப்பட்ட யுவனே வதந்திகள் என்று மறுத்தும் சில நண்பர்கள் கூறினார்கள் என்ற பெயரில் பொய்களை பிரசுரித்து தான் 'தினமலம்' தான் என்பதை நிரூபித்துள்ளது.

மேலும் படிக்க....
http://suvanappiriyan.blogspot.com/2014/02/blog-post_11.html

இஸ்லாம் என்னை தேர்ந்தெடுத்துள்ளது : யுவன் சங்கர் ராஜா

சென்னை : பிறரின் கட்டாயத்தின் பேரிலோ அல்லது திருமணத்திற்காகவோ தான் இஸ்லாத்துக்கு மாறவில்லை என்றும்

தன்னுடைய ஆய்வின் அடிப்படையிலேயே இஸ்லாத்துக்கு மாறியதாக யுவன் சங்கர் ராஜா பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இளையராஜாவின் மகனும் பிரபல தமிழ் இசை அமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்துக்கு மாறியதாக செய்தி வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று டெக்கான் க்ரோனிக்கல் எனும் ஆங்கில பத்திரிகைக்கு யுவன் பேட்டியளித்துள்ளார்.

அப்பேட்டியில் தான் கண்ட கனவுகள் மற்றும் தன்னுடைய கேள்விகளுக்கு விடை தேடிய போது அவை குர்ஆனில் கிடைத்ததாக கூறியுள்ள யுவன், தான் ஒன்றரை வருடத்திற்கு மேலாக இஸ்லாத்தை ஆய்வு செய்தே இம்முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். மேலும், ஊடகங்களில் வெளியாவதை போல் இயக்குநர் அமீர் உள்ளிட்ட யாருக்கும் இதில் எவ்வித பங்குமில்லை என்று கூறிய யுவன் இஸ்லாம் தன்னை தேர்ந்தெடுத்துள்ளது என்றே தாம் உணர்வதாக கூறியுள்ளார்.

மேலும், தன் தந்தை இளையராஜா முதலில் அதிர்ச்சியடைந்தாலும் பின் முழு மனதுடன் தன் மத மாற்றத்தை ஏற்று கொண்டதாகவும் தன் வீட்டில் ஊடகங்கள் குறிப்பிடுவது போல் எவ்வித பிரச்னையுமில்லை என்றும் கூறினார். தன் நண்பனின் திருமணம் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை போட்டு தான் முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக வந்த செய்தி தவறு என்றும் யுவன் கூறினார். ஏ. ஆர். ரஹ்மானின் வழியை பின்பற்றி தாம் இஸ்லாத்திற்கு வரவில்லை என்றும் தன் ஆன்மாவின் முடிவு என்றும் யுவன் குறிப்பிட்டுள்ளார்.

http://www.inneram.com/news/tamilnadu/5156-islam-chosen-me-yuvan-shankar-raja.html









Kayalpatnam - கறி மசாலாத்தூள்


தேவையான பொருட்கள்:
சிகப்பு வத்தல் - 1 கிலோ
மல்லி - 750 கிராம்
மஞ்சள் - 200 கிராம்
சீரகம் - 100 கிராம்
பெருஞ்சீரகம் - 50 கிராம்
இவற்றை நன்றாக காயவைத்து தூசி எதுவும் இல்லாமல் சுத்தம் செய்து இதனை அரவை மிசினில் கொடுத்து பட்டுபோல் தூளாக அரைத்துக் கொள்ளவும். காரம் அதிகம் வேண்டுமெனில் மல்லியை குறைத்துக் கொள்ளவும். காரம் குறைவாக வேண்டுமெனில் மல்லியை அதிகப்படுத்திக் கொள்ளவும்.
காயல்பட்டணம் கறி மசாலா தூள் மிகவும் மணமானது, சுவையானது. எல்லா வகையான கார உணவுகளுக்கும் இந்த மசாலைவை தான் நாங்கள் பயன்படுத்துவோம். மற்ற ஊர்களில் உள்ளது போல் மீனுக்கு என்று தனியாக, இறைச்சிக்கு என்று தனியாக மசாலா தூள் நாங்கள் பயன்படுத்துவது இல்லை.
என்றும் நட்புடன் உங்கள்
ஃபாயிஷாகாதர்
காயல்பட்டிணம்

Thanks Source:http://kpmsamayal.blogspot.in/2014/02/blog-post_9035.html

Kayalpatnam Recipe - காயல் ஸ்பெஷல் ரசம்( புளியாணம்)


இந்த ரசம் உடலுக்கு ரொம்ப நல்லது. தினமும் இந்த ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஜீரனம் ஏற்படும்.
தேவையானப் பொருட்கள்
சீரகம்- 1ஸ்பூன்
சோம்பு- 1ஸ்பூன்
மிளகு- 1ஸ்பூன்
ப.மிளகாய்- 1
சி.மிளகாய் - 2
கருவேப்பிலை- ஒரு கொத்து
பூண்டு- 1
தக்காளி-1
சி.வெங்காயம் - 2
மஞ்சள்த்தூள்- 1/2ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய்- 2துண்டு
எண்ணெய் - 2ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
செய்முறை:
சீரகம், சோம்பு,மிளகு போட்டு பாதியாக மிக்சியில் அடிக்கவும்
வெங்காயம், ப.மிளகாய், வத்தல், தேங்காய்துண்டு, க.பிலை,பூண்டு போட்டு மீண்டும் ஒரு சுற்று சுற்றுவும்
புளி தண்ணீரில் தக்காளியினை பிசைந்துவிட்டு அதில் மஞ்சள்த்தூள் மற்றும் அரைத்த கலவையினையும் உப்பும் சேர்க்கவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கபிலை போட்டு தாளிக்கவும் அதில் அரைத்து வைத்த கலவையில் சிறிது போட்டு லேசாக வதக்கி புளி கரசலை ஊற்றவும். 1 கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
இது ஜீரனத்திர்ககு மிகவும் நல்லது
என்றும் நட்புடன் உங்கள்
ஃபாயிஷாகாதர் - காயல்பட்டினம்


Source: http://kpmsamayal.blogspot.in/2014/02/blog-post_7602.html

Dua


தன்னம்பிக்கையை அதிகரிக்க !!!




1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள். 

2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம். 

3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள். நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள் செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.

4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாகட்டும்.

5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் உத்தரவில் குண்டுவெடிப்புகள் நடத்தினோம்: சுவாமி அசீமானந்த் தகவல்


அம்பாலா: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தற்போதைய தலைவரான மோகன் பகவத் உத்தரவைத் தொடர்ந்தே நாட்டில் பல குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்தினோம் என்று சிறையில் இருக்கும் ஹிந்து தீவிரவாதி சுவாமி அசீமானந்த் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 2006ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் டெல்லியில் இருந்து பாகிஸ்தான் சென்ற சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் தாக்குதல், மலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்டவையும் அடங்கும். இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் முதன்மை குற்றவாளியாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஆதிவாசிகள் அமைப்பின் தலைவர் சுவாமி அசீமானந்த் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் தேசிய செயற்குழு உறுப்பினரான பிரக்யா சிங் தாகுர், மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் முன்னாள் தலைவர் சுனில் ஜோஷி உளிட்ட 31 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் சுவாமி அசீமானந்தை caravanmagazine.in என்ற இணைய தள ஊடக நிர்வாகத்தினர் 20011ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை பல்வேறு சூழல்களில் அம்பாலா சிறையில் சந்தித்து பேசினர். அப்போது அசீமானந்தா தெரிவித்த தகவல்களை இந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் அசீமானந்த் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதன் சுருக்கம்: மகாத்மா காந்தி படுகொலையைத் தொடர்ந்து நாதுராம் கேட்சோ, நாராயண் அப்தே ஆகியோர் 1949ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு புதைக்கப்பட்ட சிறைதான் இந்த அம்பாலா சிறை. இந்த வழக்கில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டு 18 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தவர் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே. அவர் அடைக்கப்பட்டிருந்த அதே செல்லில்தான் இப்போது நான் இருக்கிறேன். அது எனக்கு பெருமையாக இருக்கிறது. ஹிந்துக்களின் நன்மை கருதியே குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினோம். இதற்காக நான் பெருமைப்படுகிறேன். என்னை யாரும் துன்புறுத்தியது இல்லை.. அனைத்து விசாரணை அதிகாரிகளிடமும் நான் ஒப்புதல் வாக்குமூலம்தான் கொடுத்திருக்கிறேன். 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதாவது குஜராத்தின் சூரத்தில் ஆர்.எஸ்.எஸ். மாநாடு முடிவடைந்த பின்னர் அப்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச்செயலராக இருந்த தற்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினர் இந்தரேஷ் குமார் ஆகியோர் குஜராத்தின் டாங்க்ஸ் பகுதியில் என்னை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது சுனில் ஜோஷியும் உடனிருந்தார். இந்தியா முழுவதும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தும் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது மோகன் பகவத் என்னிடம், நீங்கள் சுனில் ஜோஷியுடன் இணைந்து இதை செய்யுங்கள்.. நாங்கள் நேரடியாக தலையிட முடியாது.. இப்படி குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவது ஒன்றும் குற்றமும் அல்ல.. இது நமது தத்துவ சிந்தனையுடன் தொடர்புடையது. ஹிந்துக்களுக்கு முகவும் முக்கியமானது. தயவு செய்து இதை நீங்கள் செய்யுங்கள்.. உங்களுக்கு எங்களது ஆதரவு எப்போதும் உண்டு என்று தெரிவித்தார். இவ்வாறு சுவாமி அசீமானந்த் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தே குண்டுவெடிப்புகளுக்கு உத்தரவிட்டார் என சுவாமி அசீமானந்த் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/india/saffron-terror-attacks-swami-aseemanand-implicates-rss-chief-mohan-192804.html