Showing posts with label Kayalpatnam. Show all posts
Showing posts with label Kayalpatnam. Show all posts

Kayalpatnam - கறி மசாலாத்தூள்


தேவையான பொருட்கள்:
சிகப்பு வத்தல் - 1 கிலோ
மல்லி - 750 கிராம்
மஞ்சள் - 200 கிராம்
சீரகம் - 100 கிராம்
பெருஞ்சீரகம் - 50 கிராம்
இவற்றை நன்றாக காயவைத்து தூசி எதுவும் இல்லாமல் சுத்தம் செய்து இதனை அரவை மிசினில் கொடுத்து பட்டுபோல் தூளாக அரைத்துக் கொள்ளவும். காரம் அதிகம் வேண்டுமெனில் மல்லியை குறைத்துக் கொள்ளவும். காரம் குறைவாக வேண்டுமெனில் மல்லியை அதிகப்படுத்திக் கொள்ளவும்.
காயல்பட்டணம் கறி மசாலா தூள் மிகவும் மணமானது, சுவையானது. எல்லா வகையான கார உணவுகளுக்கும் இந்த மசாலைவை தான் நாங்கள் பயன்படுத்துவோம். மற்ற ஊர்களில் உள்ளது போல் மீனுக்கு என்று தனியாக, இறைச்சிக்கு என்று தனியாக மசாலா தூள் நாங்கள் பயன்படுத்துவது இல்லை.
என்றும் நட்புடன் உங்கள்
ஃபாயிஷாகாதர்
காயல்பட்டிணம்

Thanks Source:http://kpmsamayal.blogspot.in/2014/02/blog-post_9035.html

Kayalpatnam Recipe - காயல் ஸ்பெஷல் ரசம்( புளியாணம்)


இந்த ரசம் உடலுக்கு ரொம்ப நல்லது. தினமும் இந்த ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஜீரனம் ஏற்படும்.
தேவையானப் பொருட்கள்
சீரகம்- 1ஸ்பூன்
சோம்பு- 1ஸ்பூன்
மிளகு- 1ஸ்பூன்
ப.மிளகாய்- 1
சி.மிளகாய் - 2
கருவேப்பிலை- ஒரு கொத்து
பூண்டு- 1
தக்காளி-1
சி.வெங்காயம் - 2
மஞ்சள்த்தூள்- 1/2ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய்- 2துண்டு
எண்ணெய் - 2ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
செய்முறை:
சீரகம், சோம்பு,மிளகு போட்டு பாதியாக மிக்சியில் அடிக்கவும்
வெங்காயம், ப.மிளகாய், வத்தல், தேங்காய்துண்டு, க.பிலை,பூண்டு போட்டு மீண்டும் ஒரு சுற்று சுற்றுவும்
புளி தண்ணீரில் தக்காளியினை பிசைந்துவிட்டு அதில் மஞ்சள்த்தூள் மற்றும் அரைத்த கலவையினையும் உப்பும் சேர்க்கவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கபிலை போட்டு தாளிக்கவும் அதில் அரைத்து வைத்த கலவையில் சிறிது போட்டு லேசாக வதக்கி புளி கரசலை ஊற்றவும். 1 கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
இது ஜீரனத்திர்ககு மிகவும் நல்லது
என்றும் நட்புடன் உங்கள்
ஃபாயிஷாகாதர் - காயல்பட்டினம்


Source: http://kpmsamayal.blogspot.in/2014/02/blog-post_7602.html

Periya Nesavu Theruvil...... Video!!!!