He won First Round!!!!.........Second Round!

URL:https://www.facebook.com/meriyaadein/app_389154644520207

He won FIRST ROUND!!!!!! Congrats!!!
Now, he is in 4th Position.

Please vote for my baby in the photo contest by Meri Yaadein Studios.
Steps to Vote: 1. Go to the following url and Like the page https://www.facebook.com/meriyaadein/app_389154644520207
2. Scroll down and see the photo was uploaded by preethi janet raj
3. Check the Vote checkbox It will ask for confirmation. To Confirm click OK. Then your vote will counted.





BJP, RSS behind all terror acts from Godhra to Patna

Source: http://www.indianexpress.com/news/-bjp-rss-behind-all-terror-acts-from-godhra-to-patna-/1194332/





Leader of Opposition in the state Assembly and former chief minister Shankersinh Vaghela on Tuesday alleged that the BJP and RSS were involved in all the terror incidents right from Godhra to Patna BJP rally, including communal riots in Muzaffarnagar in western UP and blasts in Bodhgaya.
Addressing mediapersons on Tuesday, he said, "There was one common strategy running from Godhra to Patna, that is to engineer killing of Hindus and Muslims for political polarisation."
"BJP is conspiring to divide society for political gains," he alleged.
"It does not bother them whether those being killed are Hindus or Muslims if it helps them grabbing power," said Vaghela, who also has roots in the RSS.
Stating that the terrorists behind serial blasts at Patna BJP rally had now been found to be Hindus, not Muslims, Vaghela said, "RSS and BJP are financing Indian Mujahideen for carrying out terror acts."
He further said, "RSS is financing members of Qadianis for terror blasts. It's a group who claim themselves to be Muslims, but according to mainstream Muslims, they don't belong to the community."
Regarding Patna blasts, he alleged, "I feel Gujarat hand behind it, because the watch recovered from the blast site had evidence of having been manufactured in Morbi and the plastic bags found from there was also manufactured at Halol. It shows that it was all planned in Gujarat."
"I also suspect the involvement of RSS and BJP hand in serial bomb blasts in July 2008 in Ahmedabad, including the blasts at Civil Hospital and LG Hospital, leading to killing of scores of people," the Congress leader added.
Asked if he could substantiate the allegations, he said, "I have been with them and I know them and their strategies." He also criticised Modi for not visiting the families of the Gujarat policemen killed on their way to his programme in UP, because it would not have yielded political dividends. But Modi flew to Bihar to visit the family members of those killed in Patna blasts as it gave him political publicity.

ஐசன் வால்நட்சத்திரம் தப்பித்ததா?

ஐசன் வால்நட்சத்திரம் (COMET ISON; C/2012 S1) - சூரியனுக்கு மிக அருகாமை நிலையை (PERIHELION)நேற்றிரவு (நவம்பர் 28) அடைந்தது.

ஆரம்ப தகவல்கள் - சூரியனின் வெப்பமும், அதன் ஈர்ப்பு சக்தியும், ஐசன் வால்நட்சத்திரத்தை முழுமையாக அழித்துவிட்டதாக தெரிவித்தன.

தப்பிக்கவில்லை என வெளியான BBC செய்தி...



தப்பிக்கவில்லை என வெளியான FOXNEWS செய்தி...



இருப்பினும் - பின்னர் வெளியான படங்களும், தகவல்களும் - ஐசன் வால்நட்சத்திரம், குறிப்பிடும்படியான அளவில் தப்பித்திருக்கலாம் என தெரிவிக்கின்றன.

தப்பித்ததாக வெளியான டிவிட்டர் செய்தி...



ஐசன் வால்நட்சத்திரம் சூரியனின் வெப்பம், ஈர்ப்பை விட்டு வெளியில் வருவதாக காட்டும் காட்சி ...


வாஷிங்டன்: சூரியனை நோக்கி படு வேகமாக பாய்ந்து சென்ற ஐசான் வால் நட்சத்திரம், சூரியனை சுற்றிச் சென்ற பின்னர் மாயமாகி விட்டது. அனேகமாக அது சிதறுண்டு ஆவியாகிப் போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், விறுவிறுப்பான எதிர்பார்ப்பையம் ஏற்படுத்திய ஐசான் வால் நட்சத்திரம், சூரியனை நெருங்கிய அடுத்த சில நிமிடங்களில் காணப்படவில்லை.
ஐசானை மீண்டும் பார்க்கவில்லை என்று நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே ஐசான் சிதறுண்டு சூரியனின் வெப்ப அலையில் சிக்கி பொசுங்கி ஆவியாகிப் போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அதேசமயம், சூரியனை நெருங்கி மாயமான பின்னர் ஐசானின் சிதறல் தப்பிப் பிழைத்துள்ளதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது. இதனால் ஐசான் முழுமையாக பொசுங்கிப் போய் விட்டதா அல்லது அதன் சிதறலில் சில தப்பிப் பிழைத்ததா என்ற விவாதம் எழுந்துள்ளது..


சூரியனை நெருக்கத்தில் சுற்றிய ஐசான்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஐசான் வால் நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகே போய் அதைக் கடந்து செல்ல முற்பட்டது


கடந்த வேகத்தில் மாயமானது

ஆனால் சூரியனை கடந்த சில நிமிடங்களிலேயே அதைக் காணவில்லை. மாயமாகி விட்டது.

சிதறுண்டதாக விஞ்ஞானிகள் கருத்து

சூரியனைக் கடந்த அடுத்த சில விநாடிகளிலேயே ஐசான் சிதறுண்டு போனதாக பெரும்பாலான விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் பார்க்கவில்லை - நாசா

நாசா விஞ்ஞானிகள் இதுகுறித்துக் கூறுகையில், ஐசான் வால் நட்சத்திரம் சூரியனைக் கடந்த பின்னர் மீண்டும் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். அனேகமாக அது சிதறுண்டு ஆவியாகியிருக்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிதறல் தப்பியதாக புதிய தகவல்

ஆனால் ஐசான் வால்நட்சத்திரம் முழுமையாக அழிந்து போகவில்லை. அதன் சிதறலின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்துள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளதால், ஐசான் முழுமையாக அழியவில்லையோ என்ற விவாதம் எழுந்துள்ளது

தப்பிப் பிழைத்த ஐசானின் பகுதியை மீண்டும் காண முடியும் என்ற நம்பிக்கையிலும் இவர்கள் உள்ளனர். இந்த சிதறல் தப்பிப் பிழைத்தது உண்மை என்றால் டிசம்பர் மாதத்திலும் ஐசானின் ஒரு பகுதியைக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும் என்பது இவர்களின் கருத்தாகும்.

நாசாவின் ஐசான் வால் நட்சத்திரத்தைக் கண்காணிக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த கார்ல் பாட்டம்ஸ் என்ற விஞ்ஞானியின் புதிய கருத்தும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், பெரிஹீலியனில் நுழைந்து மாயமான ஐசான் முழுமையாக அழியவில்லை. அதன் ஒரு பகுதி தப்பிப் பிழைத்துள்ளது....

மிக மிகச் சிறிய துண்டு தப்பியது...

கார்ல் மேலும் கூறுகையில், நாசாவின் சோஹோ தொலைநோக்கியின் லாஸ்கோ சி2 கேமராவின் பதிவின்படி ஐசானின் மிக மிக சிறிய தூசி மண்டலத் துண்டு தப்பியுள்ளதாக நம்புகிறேன்.

மீண்டும் ஒளிர்கிறது

மேலும், லாஸ்கோ சி3 அனுப்பியுள்ள படங்களைப் பார்க்கும்போது மீண்டும் ஒளிப் பிரகாசமான பகுதியைக் காண முடிந்துள்ளது. இது ஐசானின் தப்பிப் பிழைத்த பகுதியாக இருக்கலாம் என்று நம்புகிறேன். நிச்சயம் இது ஐசானின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும்.

என்ன நடந்தது தெரியுமா...

சூரியனை நோக்கி வேகமாக பாய்ந்து வந்த ஐசான், சூரியனின் சுற்று வட்டத்தை நெருங்கியதும் மாயமாகிப் போனது. அதன் மிகப் பெரிய வால் பகுதியைக் காண முடியவில்லை. அது சுருங்கிப் பொசுங்கிப் போயிருக்கக் கூடிய வாய்ப்புகளை மறுக்க முடியாது.

ஆனால் சிறிது நேரத்திற்குள்ளாகவே அதன் ஒரு பகுதியானது மீண்டும் வெளிப்பட்டதை லாஸ்கோ சி2 படம் காட்டுகிறது. எனவே ஐசானின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்திருக்கிறது. அதாவது, ஐசானின் வால் மற்றும் கோமா பகுதி அழிந்து போயிருக்கலாம். ஆனால் அதன் ஒரு பகுதி தப்பிப் பிழைத்திருக்கலாம்.

தப்பி்ப் பிழைத்த ஐசானின் குதியிலிருந்து தொடர்ந்து தூசு வெளிப்பட்டு வருகிறது. மேலும் அது ஒளிரவும் செய்கிறது. வாயுக்களும் வெளிப்பட்டுள்ளது.

அரை குறை உயிருடன்...

தப்பிப் பிழைத்த பகுதி குறித்து நமக்கு உறுதியாகத் தெரியாவிட்டாலும் கூட அரை குறை உயிருடன் ஐசான் இன்னும் இருப்பதாக நாம் சொல்ல முடியும். அதன் நியூக்ளியஸ் பகுதி எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியவில்லை. அதைப் பொறுத்துத்தான் அது தொடர்ந்து உயிர் பிழைத்திருக்குமா என்பதை கணிக்க முடியும். எவ்வளவு காலம் அது நீடித்திருக்கும் என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. மீண்டும் அதைப் பார்க்க முடியுமா என்பதும் தெரியவில்லை.

ஆனால் ஒன்றுமே இல்லை என்று கூறுவதற்குப் பதில், ஏதோ கொஞ்சம் இருக்கிறது என்றுதான் இப்போதைக்கு சொல்ல முடியும்.. என்று கூறியுள்ளார் கார்ல்.

நாசாவின் சோஹோ லாஸ்கோ சி2 மற்றும் சி3 தொலைநோக்கியானது மொத்தம் 76 படங்களை அனுப்பியுள்ளது.
ஐசான் குறித்த உலகளாவிய பொதுவான கருத்து என்னவென்றால், கடும் வெப்பம் அதாவது கிட்டத்தட்ட 2600 டிகிரி சென்டிகிரேட் மற்றும் சூரியனின் ஈர்ப்பு சக்தி ஆகியவற்றின் காரணமாக ஐசான் வால்நட்சத்திரம் சிதறுண்டு போயிருக்கவே அதிகம் வாய்ப்புகள் உள்ளன.
பொறுத்திருந்து பார்க்கலாம்.. ஐஸ் துகள்கள் நிரம்பிய ஐசான் மீண்டிருக்குமா.. அல்லது மாண்டிருக்குமா என்பதை.




Thanks to: Source: Kayalpatnam.com & http://tamil.oneindia.in/news/international/comet-ison-vanishes-as-it-circles-the-sun-188454.html
http://www.kayalpatnam.com/shownews.asp?id=12434


Bible - தற்போது மனிதனால் மாற்றப்பட்டுள்ளது

அனைத்து இஸ்லாமியார்களலும் சில  கருத்து கொள்ளப்படும்.......

இது இறைவனால் அருளப்பட்ட வேதம் என்று

ஆனால்.......

தற்போது மனிதனால் மாற்றப்பட்டுள்ளது



Comet ISON: Comet of The Century? சூரியனை நோக்கி பாயும் ஐசான் வால்நட்சத்திரம் .....

இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு சூரியனை நோக்கி பாயும் ஐசான்.. காணத் தவறாதீர்கள்...!


 
Latest images from LASCO C3 and C2
Latest movies from LASCO C3 and C2 [Full resolution versions of C3 and C2]


சூரியனுக்கு வெகு அருகே வந்துகொண்டிருக்கும் ஒரு எரி நட்சத்திரம் தப்பிப் பிழைக்குமா என்பதைப் பார்க்க விண்ணியலாளர்கள் உலகெங்கும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஐசோன் என்ற இந்த எரிநட்சத்திரம், சூரியனுக்கு மிக அருகில் வியாழனன்று வரும்.

சூரியக் குடும்பத்தின் வெளி எல்லையிலிருந்து சுமார் 55 லட்சம் ஆண்டுகள் பயணித்து இந்த எரிநட்சத்திரம் சூரியனை நெருங்கியிருக்கிறது.

சூரியனை நெருங்கும் இந்த எரிநட்சத்திரம் , சூரியனின் ஈர்ப்பு சக்தி மற்றும் வெப்பத்தால் அழிக்கப்படாவிட்டால், அடுத்த ஓரிரு வாரங்களில் இரவு வானில் கண்ணுக்கு தெரியலாம்.


இது மட்டும் தப்பிப்பிழைத்தால், இதுதான் "இந்த நூற்றாண்டின் எரிநட்சத்திரமாக" விளங்கும் என்று விண்ணியலாளர்கள் கூறுகிறார்கள்

School Uniform - பள்ளி சீருடைகளை மாற்ற வேண்டும்.



நம் குழந்தைகள் அணியும் உடைகள் கூட பெரிய பிரச்னைகளை கொண்டு வந்து விடுகின்றன. தந்தையின் பின்னால் அமர்ந்து செல்லும் நம் மகள்களின் பள்ளி சீருடைகள், பிறர் கண்களை உறுத்தும் அளவுக்கு உள்ளன. சீருடைகளை மாற்ற வேண்டும்.

குழந்தைகளின் பாதுகாப்பு மட்டுமே நாட்டின் பாதுகாப்பு. பெண் குழந்தைகளுக்கு நிகராக ஆண் குழந்தைகளும் இன்று பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதை ஒத்துக் கொள்ள வேண்டும். அரைகுறை உடை அணிவித்து "ரியாலிட்டி ஷோ-க்களில் நம் குழந்தைகளை காட்சிப் பொருளாக்கும் நாம்தான் இதற்கு காரணம்.

ஆட்டோக்களில் மூன்று பேருக்கு மேல் பயணிக்க கூடாது என போக்குவரத்து துறை சட்டம் கூறுகிறது. அதே ஆட்டோவில் இருபது குழந்தைகளை திணித்து கொண்டு சென்றால் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?

முதுகில் புத்தக மூட்டையை சுமந்தபடி அரசு பஸ்சின் பின்னால் ஓடும் நம் மாணவியரின் விலகும் உடைகளை அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம். நிறுத்தாமல் வேகம் எடுக்கும் பஸ்சை எவரும் கண்டிப்பதில்லை. உடைகளை சரி செய்தபடி பஸ்சை பிடிக்க ஓடும் அந்த மாணவியின் இடத்தில் இருந்து பிரச்னையை நாம் பார்க்க வேண்டும்.

பெண்களையும் குழந்தைகளையும் மோசமாக சித்திகரிக்கும் சினிமாக்களையும், "டிவி' ஷோக்களையும் பார்க்காமல் புறக்கணிப்போம்,'' குழந்தைகளுடன் தினமும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள். பள்ளியில் நடந்தவற்றை தினமும் காது கொடுத்து கேளுங்கள், என்றார்.

- பேராசிரியர் ஜெயந்த்ஸ்ரீ பாலகிருஷ்ணன்
==========================================

., அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையைத் தங்கள் மீது தொங்கவிட்டு கொள்ளட்டும், அவர்களை அறிந்து கொள்வதற்க்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமாலிருப்பதற்க்கும் இதுவே மிகவும் ஏற்ற முறையாகும்....., - (திருக்குர்ஆன் 33:59)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளுடைய
இந்த இந்த பாகங்களைத் தவிர மற்றவை வெளியே தெரிவது நல்லதல்ல எனக்கூறி அவர்களின் முகத்தையும், மணிக்கட்டு வரையிலான கைகளையும் சுட்டிக் காட்டினார்கள். - (அபு தாவூத்)

THANKS: IDEAL VISION
 —

Vuvaisi - உவைசி பற்றி தெரிந்துகொள்வோம்:



முகநூல் நண்பர்கள் பலர் இவரை பற்றிய செய்திகளை அவ்வப்போது பதிவு செய்த வண்ணம் உள்ளனர். என் நண்பர்கள் வட்டத்திலிருந்து சிலர், இவர் யார்? எந்த மாநிலத்தை சார்ந்தவர்? என்ன பதவி வகிக்கிறார்? என்பது போன்ற கேள்விகள் கேட்டுகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு பதில் இந்த பதிவு.

இவர்தான் அஸதுத்தீன் உவைஸி. அண்டை மாநிலம் ஆந்திரத்தின் அரசியல் சிங்கம்.

அரசியல்வாதி என்றாலே அசிங்கம் என்றாகிவிட்ட சூழலில் அரசியலை தூரெடுத்து தூய்மை செய்ய போராடிக் கொண்டிருக்கும் உண்மையான போராளி. உண்மையிலேயே, மக்களுக்காகவே அல்லும் பகலும் பாடுபட்டு கொண்டிருக்கும் மனிதர்.

இவர் ஆந்திர பிரதேச மாநிலம் ஹைதராபாத்தில் மே மாதம் 13ஆம் தேதி 1969ல் சுல்தான் சலாஹுதீன் உவைசி என்ற அரசியல் பிரமுகருக்கு மகனாய் பிறந்தார். (இவருடைய தந்தை 6 முறை தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது). அஸதுத்தீன் உவைஸி ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் கல்லூரியில் B.A பட்டம் பெற்றார் பிறகு மேற்படிப்பிற்காக லண்டன் சென்றார் அங்கு LLB படித்து வழக்குரைஞரானார். இவரின் தந்தை தலைமை தாங்கி நடத்திவந்த அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற அரசியல் கட்சியில் 2009ஆம் ஆண்டிலிருந்து தலைவராக இருக்கிறார். இவரை இவருடைய ஆதரவாளர்கள் நகீப்-இ-மில்லத்(சமூகத்தின்தலைவர்) என்று அழைக்கின்றனர்.

1994ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றார். 1999ல் நடந்த அடுத்த தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு அதிலும் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யபட்டார். 2004ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

கூடுதல் தகவல்:-
சமீபத்தில் எம்.பி-களின் பங்கேற்பு குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் மீனாட்சி நடராஜன் என்ற காங்கிரஸ் எம்.பி 85 சதவீத நாட்கள் கூட்டங்களில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். ஆனால் அவர் எழுப்பிய கேள்விகள் 135 தான் ஆனால் உவைசி 1042 கேள்விகள் கேட்டு சாதனை படைத்தார்.

பாபர் மசூதிக்காக போராடிய அக்க்ஷய் பிரம்மச்சாரி:-





இவர்தான் அக்க்ஷய் பிரம்மச்சாரி பாபர் மசூதி விவகாரத்தில் இசுலாமியர்களுக்காக குரல் கொடுத்த காந்தியவாதி.

இவர் பாபர் மசூதி பிரச்சினையை சட்டத்தின் மூலம் தீர்க்க அரும்பாடுபட்டார். ஆனால் அன்று நீதிபதியாக இருந்த நாயர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதை பிறகு தெரிந்துகொண்டார். பின்பு இவர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார். ஆனால் இந்து மகாசபை ரவுடிகள் இவரை அடித்துத் துரத்தினர்.

ஆனாலும் அக்க்ஷய் பிரம்மச்சாரி இந்தப் பிரச்சினையை மாநிலம் முழுவதிலும் எடுத்து செல்லவும், பிரதமரிடம் கூட கொண்டு செல்லும் அளவுக்கு உறுதிகாட்டினார். அப்போதைய பிரதமர் நேரு இவரை லால் பகதூர் சாஸ்திரியை பார்க்க சொன்னார். உத்தரப்ரதேச உள்துறை மந்திரியாக இருந்த சாஸ்திரி அயோத்தியில் பிரச்சினை ஏதும் இல்லை என்று சட்ட சபையில் அறிக்கை வாசிக்கவே விரும்பினார்.

ஆனாலும் அக்க்ஷய் பிரம்மச்சாரி இறுதி மூச்சிவரை இசுலாமியர்களுக்காக போராடினார் ஆனால் அவரால் நியாயம் பெற்று தர முடியவில்லை.

பாபர் பள்ளிவாசலை இடித்த கருப்பு தினம் (டிசம்பர் 6) நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கும் தருணத்தில் இம்மனிதரை நினைவுகூர வேண்டும்.

அன்று இடித்தவர்கள், இன்று பரிகாரம் தேடுகிறார்கள்!



முழுமையாக படித்து பாருங்கள்... 

இஸ்லாமை கடுமையாக எதிர்ப்பவர்கள் இஸ்லாத்தை தழுவுகின்றனர்

அங்கோலாவில் பள்ளிகள் இடிக்கப்படுகிறது. ஆனால் இன்ஷா அல்லாஹ் 1 பள்ளிக்கு 100 பள்ளிகள் உருவாக இருக்கின்றது என்பதை மறந்துவிட்டார்கள். அதற்கு பல வரலாறுக்கள் உள்ளன அதில் ஒரு சமீபத்திய வரலாறு.

'அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார்?' (திருக் குர்ஆன் 2:114)

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மஸ்ஜிதின் நடுக்கோபுர உச்சியில் கடப்பாரையுடன் நிற்கும் இரண்டு பேர், நினைவிருக்கிறதா?

இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் செங்கல்லை தன் ஊருக்கு எடுத்துச்சென்று ‘ஹிந்து சகோதரர்கள் அனைவரும் அந்த செங்கல்லின் மீது மூத்திர தானம் செய்யுங்கள்' என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து மஸ்ஜிதிலிருந்து எடுத்துவரப்பட்ட கற்களை கேவலப்படுத்த ஒவ்வொருவராக வந்து சிறுநீர் கழிக்க வைத்தவர் இன்று இஸ்லாத்தில் இணைந்து 100 பள்ளிவாசல்களையாவது புனர் நிர்மாணம் செய்ய உறுதிபூண்டு தன் பாவத்துக்கு பரிகாரம் தேடும் அதிசயம்!
அவ்விருவரும் இன்று முஹம்மது ஆமிர், முஹம்மது உமர் என்று பெருமையோடு கூறுவதுடன் பல மஸ்ஜிதுகளை கட்டுவதையும், புனர்நிர்மாணம் செய்வதையும் தமது பிறவிப்பலனாக கருதி செய்து வருகின்றனர். இந்த அதிசயம் எப்படி நடந்தது? இவர்கள் முஸ்லிம்களாவதற்கு யார் காரணம்? என்ன காரணம்?

அறிந்து கொள்ள உள்ளே நுழைவோம்!

பல்பீர் சிங் - 6-12-1970-ல், ஹரியானாவிலுள்ள பானிபட் மாவட்டத்திலள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். அவர் தந்தை ஒரு சிறந்த விவசாயி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் என்பதோடு நல்லவர், மனிதநேயமிக்கவர். பிறருக்கு அநீதம் விளைவிப்பதை கடுமையாக வெறுப்பவர்.

மும்பாய்க்குப் பிறகு 'சிவசேனா' வின் உறுதிமிக்க கோட்டையான பானிபட்டடில் வாலிபர்களும் மாணவர்களும் சிவசேனாவில் ஈடுபட்டிருந்த நேரம் அது.; பானிபட்டில் இன்டர் மீடியேட்டில் படித்துக் கொண்டிருந்த போது பல்பீரசிங்; 'அந்த' இயக்கத்தில் தன்னை பதிவு செய்து சேர்ந்து கொண்டார்.

பானிபட்டில், இந்திய வரலாற்றை எடுத்துக் கூறும் சாக்கில், வாலிபர்களிடையே முஸ்லிம்கள் மீதும், பாபர் போன்ற முஸ்லிம் மன்னர்கள் மீதும் வெறுப்பை ஊட்டப்பட்டது. தனது மகன் ‘அந்த’ இயக்கத்தில் சேர்ந்ததை அறிந்த பல்பீர்சிங்குடைய தந்தை உண்மை சரித்திரத்தை தனது மகனுக்கு புரிய வைக்க முயன்றார். "பாபர் மற்றும் அவ்ரங்கசேப் ஆட்சிக்காலத்தில் இருந்த நீதம், முஸ்லிம் அல்லாதோருடன் அவர்கள் நடந்து கொண்ட நன்னடத்தைகளையும், இந்திய மக்கள் தமக்குள்ளே மோதி இந்நாடு பலவீனப்பட வேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலேயர்கள் வரலாற்றுத் திரிபுகள் செய்துள்ளனர்" என்கின்ற உண்மையை எடுத்துச் சொல்லியும் தனது மகனை அவரால் திருத்த முடியவில்லை.

1990-ல் அத்வானியின் ர(த்)த யாத்திரையின்போது பானிப்பட்டின் முக்கிப் பொறுப்பு பல்பீர் சிங்கிடம் ஒப்படைக்கப்படுகிறது. ர(த்)த யாத்திரையில் வந்த தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை கக்க அந்த நிமிடமே மஸ்ஜிதை இடிக்க எவர் வந்தாலும் வராவிட்டாலும் தான் மட்டுமே சென்று அதை இடித்துத் தரை மட்டமாக்குவதாக சிவாஜியின் மீது சத்திய பிரமானம் எடுக்கிறார் பல்பீர் சிங்.

சிவசேனாவின் ‘இளைஞர் பறக்கும் படை' யின் துணைத்தவைராக பொறுப்பேற்று 1990 அக்டோபர் 30 அன்று அயோத்திக்கு புறப்பட்ட அவரை ஃபஸாபாத்தில் போலீஸார் தடுத்து நிறுத்துகின்றனர். அதையும் மீறி அவரும் அவரது நண்பர்களும் எப்படியோ தப்பி அயோத்திக்குள் நுழைந்து விடுகின்றனர். அதற்கு முன்னர்தான் அங்கு துப்பாக்கிசூடு நடத்தப்பட்டிருந்ததால் எவ்வளவோ முயன்றும் அவர்களால் பாபரி மஸ்ஜிதை நெறுங்கக்கூட முடியவில்லை. கோபம் எல்லை மீறியது. அப்பொழுதே உடனே லக்னோ சென்று முலாயம் சிங்கை தனது கரங்களால் சுட்டுப் பொசுக்க அவர் உள்ளம் நாடியது.

அங்கு சோனிப்பட்டின் ஜாட் இனத்துக் கிராமத்தைச் சார்ந்த அவரது நண்பர் யோகேந்திர பாலும் சேர்ந்து கொண்டார். யோகேந்திர பாலின் தந்தை ரகுபீர் சிங் சௌத்ரி பெரும் நிலச்சுவான்தரராக இருந்தார். அவர் எவ்வளவோ தடுத்தும் இவர்கள் சற்றும் பின் வாங்கவில்லை.

டிசம்பர் - 6, 1990 – க்கு முந்தைய இரவு பாபரி மஸ்ஜிதை நெருங்கி அருகிலுள்ள முஸ்லிம்களின் வீட்டு மாடியில் இரவைக் கழித்தனர். தலைவர்களின் உத்தரவை எதிர்பார்க்காமல் கரசேவையை துவங்கி விட அவர் உள்ளம் துடித்தது. அவ்வளவு அவசரம்! இருந்த போதும் குழுத்தலைவர் கட்டுக்கோப்புடன் இருக்கும்படி கூறி தடுத்து விட்டார்.

இந்நிலையில் கரசேவகர்ளுக்கிடையில் உமாபாரதி உரை நிகழ்த்தினார். அவரது உரையை கேட்டதுமே பல்பீர் சிங்கும் அவரது நண்பர்களும் தங்கியிருந்த வீட்டின் மாடியிலிருந்து இறங்கி கடப்பாறையுடன் மஸ்ஜிதின் முகட்டில் ஏறினர். உமாபாரதி ம்… ஏக், தோ, பாபர் மஸ்ஜித் தோடுதோ! (ஒன், டூ … இடியுங்கள் பாபர் மஸ்ஜிதை) என்று முழங்க அந்த நாசகாரக் கும்படலுன் பல்பீர் சிங்கும் மஸ்ஜிதின் நடுக்கோபுரத்தின் மீது கடப்பாறையை செலுத்தி கொக்கரித்தபடி இடித்துத் தரை மட்டமாக்குகிறார்.

அதற்குப்பிறகு அந்த இடத்தில் சிலையை நட்டு விட்டு திரும்புகின்றனர். திரும்பும்போது இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் இரு செங்கற்களை உடன் எடுத்துச் செல்கின்றனர். அச்செங்கற்களை பானிபட்டில் தனது மற்ற நண்பர்களிடம் காட்டி பாராட்டையும் பெறுகின்றனர். சிவசேனா அலுவலகத்தில் அக்கற்கள் வைக்கப்பட்டு ஒரு விழாவே நடந்தது.

இந்நிகழ்வுகள் அனைத்தும் தெரிய வந்தபோது பல்பீர் சிங்கின் தந்தை மிகவும் கோபமுற்றார். தனது மகனிடம், "இப்போது இந்த வீட்டில் நீயும் நானும் ஒன்றாக இருக்க முடியாது. இறைவனின் இல்லத்தை இடித்தவனின் முகத்தை நான் பார்க்க மாட்டேன். எனது மரணம் வரும் வரை உன் முகத்தைக் காட்டாதே" என்று உறுதிபடக் கூறிவிட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத பல்பீர் சிங் பானிபட்டில் தனக்கு கிடைத்த மரியாதையை அவரிடம் எடுத்துச் சொல்லியும் அவரது கோபம் தணியவில்லை. "இத்தகைய அநியாயக்காரர்களினால் இந்த நாடே அழிந்து போகும்" என்று கூறியவராக வீட்டை விட்டு வெளியேற தயாரானார். தந்தையின் கோபத்தைக் கண்ட பல்பீர் சிங் தானாகவே அவ்வீட்டை விட்டு வெளியேறி பானிபட்டில் தங்கினார்.

அதற்குப்பிறகு நடந்த சம்பவங்களைப்பற்றி அவரே கூறுகிறார், கேளுங்கள்:

நான் முஸ்லிமாவதற்கு படிப்பினையாக இருந்த எனது நண்பன் யோகேந்திரபாலின் சம்பவத்தை முதலில் சொல்கிறேன். பிறகு என் சம்பவத்தை கூறுகிறேன். எனது நண்பன் யோகேந்திரபாலும் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் செங்கல்லை எடுத்து வந்திருந்தான். 'ஹிந்து சகோதரர்கள் அனைவரும் அந்த செங்கல்லின் மீது மூத்திர தானம் செய்யுங்கள்’ என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தான். மஸ்ஜிதிலிருந்து எடுத்துவரப்பட்ட கற்களை கேவலப்படுத்த ஒவ்வொருவராக வந்து சிறுநீர் கழித்தனர். இங்குதான் ‘மஸ்ஜிதின் எஜமானன் அல்லாஹ் தான் யார் என்பதை நிரூபித்தான்'.

இறையாலயத்தின் செங்கல் மீது சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்திய நான்கைந்து நாட்களுக்குப்பின் யோகேந்திரபாலுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. தனது ஆடைகளை சுற்றி எறிந்துவிட்டு நிர்வாணமாக அலைந்தான். இவன் கண்ணியமிக்க ஜமீன்தாரின் ஒரே மகன். பைத்தியம் முற்றி தாயின் ஆடையை உரிந்து தவறான செயலில் ஈடுபட முயன்றான். பலமுறை இத்தீய எண்ணத்தில் பெற்ற தாயை கட்டியணைத்தான். அவனது தந்தை பரிதவித்து மந்திரிப்போர் பலரிடம் தன் மகனை காட்டினார். தானதர்மங்கள் செய்து இறைவனிடம் மன்னிப்பு வேண்டினார்.


ஆனால், யோகேந்தர் நிலை மென்மேலும் மோசமடைந்தது. மீண்டும் ஒரு முறை பெற்ற தாயை உடலுறவு கொள்ள அவன் முயன்றபோது தாயாரின் கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் ஓடி வந்து தாயை காப்பாற்றினர். நிலைமை மிக மோசமானதால் யோகேந்தர்பால் சங்கிலியால் கட்டப்பட்டான். மக்களிடம் மதிப்பு மிக்க அவனது தந்தை அவனை சுட்டுக்கொல்ல நாடினார். அப்போது ஒருவர் ‘சோனிபட் ஈத்காவில் ஒரு மதரஸா உள்ளது. அங்கு பெரிய மவ்லானா ஒருவர் வந்து செல்கிறார். கடைசி முயற்சியாக அவரிடம் சென்று உங்கள் பிரச்சனையை கூறுங்கள். அங்கும் பிரச்சனை தீரவில்லை என்றால் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்' என்று கூறினார்.


சோனிபட்டில் நடந்தது என்ன?

ஆனால் அவரால் பெரிய மவ்லானா(கலீம் சித்தீக்கி)வை சந்திக்க முடியவில்லை. மகனை சங்கிலியால் கட்டிக்கொண்டு டில்லி-பாவானாவின் இமாம் மவ்லானா பஷீர் அஹ்மதை சந்தித்தார். அனைத்தையும் கேட்டுவிட்டு பஷீர் அஹ்மது இப்படிச் சொன்னார். தற்போதைய நிலைமை மோசமாக இருப்பதால் டிசம்பர் 6 க்கு (1992) முன்பே ஹரியானாவின் பல இமாம்கள், ஆசிரியர்கள் உ.பி.யிலுள்ள தங்களது வீடுகளுக்கு திரும்பி விட்டனர். இந்நிலையில் இம்மாதம் முதல் தேதிதான் பெரிய மவ்லானா (கலீம் சித்தீக்கி) கவலையுடன் உரையாற்றினார்கள். அதில் முக்கிய சில வரிகளைக் கூறுகிறேன்.

‘முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ், இஸ்லாம், மஸ்ஜித், இறைத்தூது பற்றி முன்பே எடுத்துக் கூறியிருந்தால் இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்காது. எனவே பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதில் முஸ்லிம்களும் ஒரு விதத்தில் குற்றவாளிகளே! ஆகவே. இப்பொழுதாவது நாம் உணர்வு பெற்று அழைப்பப்பணியில் ஈடுபட்டால் மஸ்ஜிதை இடித்தவர்களே மஸ்ஜிதை நிர்மாணிப்பவர்களாக, புனர் நிர்மாணம் செய்பவர்களாக மாறிடுவர். ஏனெனில் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘யா அல்லாஹ்! என் சமூக மக்களுக்கு நேர்வழி காட்டு, அவர்கள் அறியாதவர்களாக உள்ளனர்’ என்று பிரார்த்தித்தார்கள் - என்று பெரிய மவ்லானா குறிப்பிட்டார்கள்.

உங்கள் மகனுக்கு சூனியம் எதுவும் இல்லை. இது எஜமானனின் தண்டனைதான். ஆகவே, நாளை மறுநாள் புதன் கிழமை மவ்லானா கலீம் சித்தீக்கி இங்கு வரும்போது உங்கள் மகனின் நிலையை கூறுங்கள். அவர் சரியாக்கி விடுவார் என்று நம்பிக்கை உள்ளது என்றார் பஷீர் அஹ்மது. அதற்கு யோகேந்தர்பாலின் தந்தை என் மகன் குணமடைந்து விட்டால் நான் எதையும் செய்ய தயாராக உள்ளேன் என்று பதிலளித்தார்.

புதன் கிழமையன்று ஜமீன்தார், சங்கிலியால் கட்டப்பட்டு அரை நிர்வாணக் கோலத்துடன் இருந்த தன் மகன் யோகேந்தர்பாலுடன்; மல்லானாவை சந்தித்தார். அவர் சொன்ன அனைத்தையம் கேட்டுக்கொண்ட மவுலானா கலீம் சித்தீக்கி ‘உங்கள் மகன் இவ்வுலகைப் படைத்து பரிபாலிக்கும் சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வின் இல்லத்தை இடித்த மாபெரும் அநீதி இழைத்துள்ளான். இத்தண்டனை இவர் ஒருவருக்கு கிடைத்தது மிகவும் குறைவுதான். நாங்களும் அந்த இறைவனின் அடிமைகளே! மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு இறையில்லம் என்றால் என்னவென்பதை எடுத்துரைக்க நாங்கள் தவறிவிட்டதால், இப்பெரும் அநீதத்திற்கு நாங்களும் ஒருவிதத்தில் காரணமாக உள்ளோம். இப்போது எதுவும் எங்கள் கையில் இல்லை. ஒரே ஒரு வழி மட்டும்தான் உள்ளது. அந்த ஏக இறைவனின் சமூகத்தில் அழுது மன்றாடுங்கள். நாங்களும் மன்னிப்பு வேண்டுகிறோம். இம்மஸ்ஜிதின் நிகழ்ச்சி முடிவுறும் வரையில் நீங்கள் இறைவனிடம் ‘இறைவா! என் சிரமத்தை உன்னைத்தவிர வேறு எவராலும் நீக்க முடியாது’ என்று மாசற்ற உள்ளத்துடன் மன்றாடி பிரார்த்தித்துக் கொண்டே இருங்கள் என்று கூறிவிட்டு மஸ்ஜிதுக்குள் சென்று தொழுதார்;. சிறிதுநேரம் உரையாற்றி துஆ செய்ததுடன் மற்றவர்களையும் ரகுபீர்சிங் - யோகேந்தர்பால் ஆகியோருக்காக துஆச் செய்ய கூறினார். நிகழ்ச்சிக்குப்பின் மஸ்ஜிதிலேயே உணவு பரிமாறப்பட்டது.

உணவு முடித்து வெளியே வந்தால் அனைவருக்கும் மிகப்பெரும் ஆச்சர்யம்! அல்லாஹ்வின் கிருபையை என்னவென்பது! இத்துனை நாட்களாக நிர்வாணத்துடன் திரிந்து கொண்டிருந்த யோகேந்தர்பால் திடீரென தன் தந்தையின் தலைப்பாகையை கழற்றி தனது உடலை நன்கு மறைத்து தந்தையுடன் சாதாரண மனிதன் போல் பேசிக் கொண்டிருந்தான். பைத்தியம் தெளிந்த அவனைக்கண்ட அனைவருக்கும் மகிழ்ச்சி. ஜமீன்தார் ரகுபீர்சிங்கிற்கோ அளவிட முடியாத மகிழ்ச்சி.

இஸ்லாத்தை தழுவுவதற்காக ரகுபீர்சிங் மஸ்ஜிதுக்குள் நுழைய விழைந்ததைக் கண்ட யோகேந்தர்பால் ‘தந்தையே! சற்றுப்பொறுங்கள்! உங்களுக்கு முன் நான் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். பாபரி மஸ்ஜிதை நான் திரும்பவும் கட்ட வேண்டும்’ என்று கூறினார். பிறகு இருவரையும் ஒளு செய்ய வைத்து கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்டது. ரகுபீர்சிங் - முஹம்மது உஸ்மானாக, யோகேந்தர்பால் - முஹம்மது உமர் ஆக மாறிவிட்டார்கள். இருவரும் சந்தோஷமாக ஊர் திரும்பினார்கள்.

தமது ஊர் திரும்பியவர்கள் முதல் வேலையாக அவ்வூர் மஸ்ஜிதின் இமாமை சந்தித்து தாங்கள் முஸ்லிமாகிவிட்ட விபரத்தை தெரிவித்தனர். இமாம் இச்சம்பவங்களை மக்களிடம் எடுத்துக்கூற அந்த பகுதி முழுவதும் செய்தி பரவியது. ஹிந்துக்களுக்கு இச்செய்தி மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களில் சிலர் அவசரமாக ஆலோசனை செய்து இவ்விருவரையம் அன்று இரவே கொன்றுவிட வேண்டும் முடிவு செய்தார்கள். இல்லையேல் பலரும் இஸ்லாத்துக்கு மாறிவிடுவார்கள்' என்ற பயம் அவர்களுக்கு! அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நபர் இச்செய்தியை இமாம் ஸாஹிபிடம் தெரிவித்து விட்டதால் அல்லாஹ்வின் அருளால் அன்ற இரவே அவர்கள் இருவரும் ஊரைவிட்டு வெளியேறி புலத் சென்று சிலநாட்களுக்குப்பின் 40 நாள் ஜமா அத்தில் சென்று விட்டனர்.
முஹம்மது உமர் ஜமாஅத் அமீரின் ஆலோசனைப்படி மேலும் 4 மாதங்கள் ஜமாஅத்தில் சென்று விட்டார். இதன் தொடராக அவரது தாயாரும் முஸ்லிமாகிவிட்டார். டில்லியில் சிறந்ததொரு முஸ்லிம் குடும்பத்தில் முஹம்மது உமருக்கு திருமணமும் நடந்தது. தற்போது அனைவரும் மகிழ்ச்சியடன் டெல்லியில் வசிக்கின்றனர். சொந்த ஊரிலுள்ள சொத்துக்களை விற்று டெல்லியில் தொழிற்சாலை நடத்தி வருகின்றனர்.

முஹம்மது உமர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி, தான் இஸ்லாத்தை எற்ற நிகழ்ச்சியின் முதல் பகுதிதான் என்று கூறும் முஹம்மது ஆமிர் (பல்பீர்சிங்) இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு எப்படி?

கேள்வி: உங்கள் நண்பர், அவர் தந்தையின் இஸ்லாம் பற்றி கூறினீர்கள். நீங்கள் இஸ்லாத்தை தழுவியதைப்பற்றி கூறுங்களேன்?

பதில்: முஹம்மது உமர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி நான் இஸ்லாத்தை ஏற்ற நிகழச்சியின் முதல் பகுதிதான். இதோ நான் இஸ்லாத்தை ஏற்றதை கூறுகிறேன்! கேளுங்கள்.

9-மார்ச் 1993-ல் எனது தந்தை திடீரென மாரடைப்பால் மரணித்து விட்டார். பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதும் அதில் நான் பங்கெடுத்ததும் அவரை மிகவும் பாதித்திருந்தது. அவர் என் தாயரிடம்,

"இறைவன் நம்மை ஏன் முஸ்லிமாக படைக்கவில்லை?

முஸ்லிம் குடும்பத்தில் பிறந்திருப்பின் குறைந்த பட்சம் அநீதம் இழைக்கப்பட்டவர்களில் நானும் ஒருவனாகியிருப்பேனே?

அநீதி இழைக்கும் கூட்டத்தாரில் நம்மைபிறக்கச் செய்து விட்டானே?" என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

மேலும் தான் இறந்த பிறகு தனது இறுதி சடங்கில் நான் கலந்து கொள்ளக்கூடாது என்றும்,

தனது சடலத்தை அநீதம் செய்யும் கூட்டத்தாரின் வழமை போல் எரிக்கக் கூடாது

ஹிந்துக்களின் அடக்கஸ்தலங்களுக்கும் எடுத்துச் செல்லக்கூடாது.

மண்ணில் புதைத்துவிடுங்கள் அல்லது தண்ணீரில் மூழ்கடித்து விடுங்கள் என்று தமது ஆசையை வெளிப்படுத்துயிருந்தார். (மறுமையில் இவர்களின் நிலை என்ன என்பதை அல்லாஹ் ஒருவனே அறிவான்)

எங்களது வீட்டினர் அவரது ஆசைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்தனர். எட்டு தினங்களுக்குப் பிறகே அவரது மரணச் செய்தியை கேள்விப்பட்ட நான் மிகவும் நொடிந்துவிட்டேன். என் உள்ளம் நொறுங்கிவிட்டது.

"அவர் இறந்த பிறகுதான் பாபரி மஸ்ஜிதை இடித்தது எனக்கு அநீதியாகப்பட்டது எனது பெருமை அனைத்தும் கைசேதமாக தெரிந்தது."

நான் மிகவும் மனம் வெதும்பி எனது இல்லம் சென்றடைந்தபோது எனது தாய் என் தந்தையின் கவலையை பிரஸ்தாபித்து அழுது கொண்டிருந்தார்;. ஒரு சிறந்த தந்தையை துன்புறுத்தி கொன்றுவிட்டாயே! நீ ஒரு மனுஷனா? என்று இடித்துரைத்தார். இதன் பின் வீட்டிற்கு செல்வதை நிறுத்திக் கொண்டேன்.

யோகேந்தர்பாலுடன் சந்திப்பு

ஜுன், 1993-ல் முஹம்மது உமர் (யோகேந்தர்பால்) ஜமா அத்திலிருந்து பானிபட் வந்து என்னை சந்தித்தார். தனது சம்பவங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறினர். இரண்டு மாதங்களாக வானிலிருந்து ஆபத்து ஏதும் எனக்கு இறங்கிடுமோ என்று பயந்தேன். தந்தை இறந்த கவலையும் பாபரி மஸ்ஜித் இடிப்பும் என்னை வாட்டி வதைத்தன. முஹம்மது உமரின் சம்பவம் கேட்டு மேலும் கலக்கம் அடைந்தேன்.

ஜுன், 23ஆம் தேதி மௌலானா கலீம் சித்தீகி அவர்கள் சோனிபட் வரவிருப்பதாகவும் அவர்களை சந்தித்து அவர்களுடன் சில நாட்கள் தங்குவது தான் சிறந்தது எனவும் முஹம்மது உமர் மிகவும் வலியுறுத்தி கூறினார். நான் மௌலானாவை சந்திக்க திட்டமிடலானேன் எனினும் நான் சென்றடைவதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது எனக்கு முன்பாகவே முஹம்மது உமர் சென்று என்னை பற்றிய முழு விபரத்தையும் மௌலானாவிடம் தெரியப்படுத்திவிட்டார்.

நான் மௌலானாவிடம் சென்ற போது மிகவும் அன்புடன் வரவேற்றார்கள். மேலும் யோகேந்தர்பாலுக்கு அல்லாஹ் தண்டனை அளித்தது போல் நீங்கள் செய்த பாவத்திற்கும் அல்லாஹ் தண்டனை அளித்திருக்க முடியும். அதே சமயம் இவ்வுலகில் தண்டனை கிடைக்காவிட்டாலும் மறுமையின் தண்டனை நிரந்தரமானது அத்தண்டனை எப்படியிருக்குமென உமது சிந்தனைக்கே எட்டாது என்றார்கள்.

முஸ்லிமாவதே தீர்வு:

ஒரு மணி நேரம் மௌலானவுடன் அமர்ந்த பின் "இறை வேதனையிலிருந்து தப்ப முஸ்லிமாகுவதே தீர்வு என தீர்மானித்தேன்" மௌலானா இரண்டு நாட்கள் பயணத்தில் செல்லவிருப்பதை அறிந்து நானும் உடன் வருகிறேன் என்றேன். அவர்களும் சம்மதித்தார்கள். டில்லி, ஹரியானா, கூர்ஜா ஆகிய இடங்கள் சென்று ‘புலத்’ வந்தோம் இதற்கிடையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள நான் தயாராகிவிட்டேன். இந்த எனது எண்ணத்தை சகோதரர் உமரிடம் கூறிய போது அவரும் சந்தோஷப்பட்டு மௌலானவிடம் தெரிவித்தார்.

"அல்ஹம்துலில்லாஹ்! ஜுன் 25, 1993 அன்று லுஹர் தொழுகைக்குப்பின் புனித இஸ்லாத்தை தழுவினேன். மௌலானா எனக்கு முஹம்மது ஆமிர் என்று பெயரிட்டார்கள்.

தொழுகை மற்றும் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள என்னை புலத்தில் தங்கியிருக்க மௌலானா ஆலோசனை அளித்தார்கள் எனது மனைவியும், சிறு குழந்தையும் தனியாக இருப்பதை கூறியபோது எனக்காக ஒரு வீட்டையும் ஏற்பாடு செய்தார்கள். நான் சில மாதங்கள் புலத்தில் குடும்பத்துடன் தங்கி எனது மனைவிக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னேன். அல்ஹம்துலில்லாஹ்! மூன்று மாதத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

கேள்வி: உங்களது தாய் உங்கள் மீது வருத்தத்தில் இருந்ததால் நீங்கள் இஸ்லாத்தைத் தழுவியதைப் பற்றி என்ன கூறினார்?

பதில்: நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை கூறிய போது மிகவும் சந்தோஷமடைந்து இப்போது தான் உன் தந்தையின் ஆத்மா சாந்தியடையும் என்று கூறினார். அதே வருடம் என் தாயாரும் இறைவன் அருளால் முஸ்லிமாகிவிட்டார்.

கேள்வி: உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

பதில்: "அல்லாஹ்வுடைய மஸ்ஜிதை இடித்ததற்கு பகரமாக பாழடைந்த மஸ்ஜிதுகளை நான் புதுப்பிக்க வேண்டும். சகோதரர் உமர் புதுப்பள்ளிகளை உருவாக்க வேண்டும்" என்று நாங்கள் இருவரும் உறுதி எடுத்துக் கொண்டோம். மேலும் இப்பணியில் ஒருவருக் கொருவர் துணையாக இருந்து வாழ்நாளில் மஸ்ஜிதுகளை உருவாக்கவும், 100 மஸ்ஜிதுகளை புதுப்பிக்கவும் இலக்கு நிர்ணயித்தோம்.

அல்ஹம்துலில்லாஹ்! டிசம்பர் 6-2004க்குள்- இந்தப்பாவி ஹரியானா, பஞ்சாப், டில்லி, மீரட், கேன்ட் ஆகிய இடங்களில் பாழடைந்த அபகரிக்கப்பட்ட 13 மஸ்ஜித்களை புனர் நிர்மாணம் செய்துள்ளேன். சகோதரர் உமர் என்னையும் விஞ்சி 20 மஸ்ஜித்களை கட்டி முடித்து 21வது மஸ்ஜிதுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்."

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று நான் பாழடைந்த ஒரு மஸ்ஜிதில் தொழுகையை ஆரம்பிக்க வேண்டும். சகோதரர் உமர் புதுப்பள்ளிக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்! எந்த வருடமும் எங்களுக்கு தவறவில்லை. எனினும் 100 என்ற இலக்கு தூரமாகவே உள்ளது. இவ்வாண்டு 8 பள்ளிகள் பற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது. சில மாதங்களில் அங்கும் தொழுகை ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

சகோதரர் உமர் என்னைவிட ஆரம்பத்திலிருந்தே முன்னிலையில் உள்ளார் எனது பங்கும் அவருக்குரியதே என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் என்னை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததே அவர்தான்.

தற்சமயம் நான் ‘ஜுனியர் ஹைஸ்கூல்’ நடத்தி வருகிறேன். இஸ்லாமிய போதனைகளுடன் ஆங்கிலவழிக் கல்வியும் உள்ளது.

கேள்வி: நீங்கள் முஸ்லிமான பிறகு உங்களது தாயார் முஸ்லிமாகிவிட்டார்கள் சரி. உங்கள் குடும்பத்தில் வேறு யாரும் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்களா?

பதில்: எனது மூத்த சகோதரரின் மனைவி நான்கு வருடங்களுக்கு முன் மரணித்துவிட்டார். நான்கு சின்னஞ்சிறு குழந்தைகள் அவரக்குண்டு. அதில் ஒரு குழந்தை ஊனம். எனக்கு பிறகே அண்ணணுக்கு திருமணம் நடந்தது. எனது அண்ணி சிறந்த பெண்ணாகவும் முன்மாதிரி மனைவியாகவும் நடந்து கொண்டதினால் அவரது மரணத்தால் எனது அண்ணன் மிகவும் பாதிக்கப்பட்டார். அவரது பிள்ளைகளை என் மனைவியே பராமரித்து வந்தார். என் மனைவியின் இச்சேவையினால் எனது அண்ணன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

நான் அவருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்தேன் என் தந்தையின் மரணத்திற்கு நான் காரணமாக இருந்ததால் அவர் என்னை நல்ல மனிதராகவே கருதவில்லை.

ஸஹாபாக்கள் செய்தது போன்ற தியாகம்

நான் என் மனைவியிடம் "நம் பிள்ளைகள் பெரிய பிள்ளைகள் என் சகோதரர் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளார். எனவே நான் உன்னை விவாகரத்து செய்து நீ இத்தா காலம் முடிந்தபின் என் சகோதரர் முஸ்லிமாக தயாராகிவிட்டால் அவரை நீ திருமணம் செய்துகொள். இது இருவரின் வெற்றிக்கும் வழிகோலாகும் என்றேன்".

ஆரம்பத்தில் சம்மதிக்காத எனது மனைவி விளக்கிக் கூறியவுடன் ஏற்றுக்கொண்டார். எனது அண்ணனிடமும் நீங்கள் முஸ்லிமாகி குழந்தைகளின் வாழ்க்கைக்காக எனது மனைவியை திருமணம் செய்து கொள்ளுங்கள். அவள் தன் பிள்ளைகளைப் போன்று உங்கள் பிள்ளைகளை கவனித்துக் கொள்வாள் என்றேன் ஊராரை பயந்து தயங்கிய என் சகோதரரும் பிறகு சம்மதித்தார்.

பிறகு என் மனைவியை தலாக் கூறிவிட்டேன். இத்தா கழிந்த பிறகு என் சகோதரருக்கு கலிமா சொல்லிக்கொடுத்து அவருடன் திருமணமும் செய்து வைத்தேன். அல்ஹம்துலில்லாஹ்! அவர் இப்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். எனது குழந்தையும் அவருடனேயே வசிக்கிறது.

Babari Masjid


முஸ்லிம்களின் இதயங்களில் இரத்தம் வடியும் கருப்பு தினமாக இந்திய ஆட்சியாளர்களால் ஆக்கப்பட்ட நாள் டிசம்பர் 6 -1992.
உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் குறிப்பாக இந்திய முஸ்லிம்களுக்கு சொந்தமான மிகப்புராதன – பெரும் பள்ளியான பாபர் மஸ்ஜித் (பாபர் என்ற முகலாய மன்னரால் கட்டப்பட்ட இறையில்லம்) கடந்த 19 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை அச்சுறுத்தும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளான ஒரு கும்பலின் மேற்பார்வையில் இடித்துத் தள்ளப்பட்டது.

பாபர் பள்ளி வாசல் வரலாறு!

1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது. வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது. ‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. ‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம். ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல. இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார். அயோத்தியில் ராமர் பிறந்தாரா? அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம். இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது. இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும். வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது. இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை: கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது. திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது. துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது. கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும். அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம். இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை. கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை. இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு. இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, ‘இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்’ எனக் கூறுகிறது. அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்தி ருக்க வேண்டும். ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார். அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது. இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர். அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது. இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்? இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும். ‘இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன. அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும். ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை. அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும். ”இந்த அயோத்திதான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும். அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான். மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார். நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார். எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர். இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும். அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா? ‘பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்! என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை. இந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை. குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர். கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர் பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை” என்று அடித்துக் கூறுகிறார். ‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்? இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது? இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் ‘அமர கோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது. லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை. குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை? அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார். அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை. கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா? இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை. மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார். துளசி தாசர் காலம் என்ன? எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார். இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது. இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார். இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார். 200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம். உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற் றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது. பாபர் கோவிலை இடிப்பவரா? இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார். ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார். கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்? மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார். பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா? பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில், ”மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார். இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா? பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது. கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார். பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர். பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல. பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர். கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ”உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே. அதுதான் போகட்டும்! முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை. வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும் ”கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்” என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை. 1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை. 1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.

வரலாறு உதவி ததஜ
 —

Dr. Abdullah (பெரியார்தாசன்)



அனைத்து ஹிந்து கிருஸ்துவ சகோதர சகோதரிக்கு இதை பகிருங்கள்..

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துலாஹி வ பரகாத்துஹு

எல்லாம் வல்ல ஏக இறைவனாகிய அல்லாஹுக்கே எல்லாம் புகழும்.

அனைத்து ஹிந்து கிருஸ்துவ சகோதர சகோதரிக்கு இதை பகிருங்கள்..

இஸ்லாத்தை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொள்ளட்டும்..
அவர்களின் "இஸ்லாத்தின் மீதான தவறான எண்ணங்கள்" குறையட்டும்..
அவர்கள் அனைவரும் இதை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்...

"பாபரி மஸ்ஜித்" சம்பவம் நியாபகம் உள்ளதா??

அதை இடிக்கும் போது மேல நின்றுகொண்டு 2 சகோதரர்கள்
"இடிப்பது போல் புகைப்படம் வெளியானதே"
அவ்விருவரின் நிலை என்ன ஆனது என்று யாருக்காவது தெரியுமா?

இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...

அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) கூறியுள்ளதை பாருங்கள்..
அவர்களின் நிலை இப்போது எப்படி உள்ளது என்று...
அல்லாஹு அக்பர்...

http://youtu.be/vLTtbFokWJA

மற்றும் இஸ்லாத்தை பற்றியும் கூறியுள்ளதை பாருங்கள்..

((கிறிஸ்தவர்களே, இந்து சகோதரர்களே,
நீங்கள் இல்லையென்றால்,
நாளை உங்கள் பிள்ளைகள்
உண்மை தெரிந்து
இஸ்லாத்தை நோக்கி
வரதான் போகிறார்கள்,
உண்மை கூடியவிரைவில் வெளிவரும்..
நன்மையில் முந்தி கொள்ளுங்கள்,
வீண் பிடிவாதம்
உங்களை நேர்வழியில் இருந்து
தடுத்திட வேண்டாம்..,
இஸ்லாத்தை பற்றி இஸ்லாமிய நண்பர்களிடம்
கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்..
அவர்கள் உண்மையை சொல்லுவார்கள்...

இஸ்லாத்தை பற்றி அறியாதவர்களிடம்
கேட்டால் உண்மை தெரிய வராது...
- சிந்தியுங்கள்))

இந்த வாழ்க்கை நிரந்தரம் இல்லை
மறுமை ஒன்று உள்ளது அது தான் நிரந்தரம்...

Marriage Lunch


இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்? பதில்: இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தத் தடை ஏன்?. என்பது பற்றிய விபரத்தை கீழ்க்காணும் விளக்கங்கள் மூலம் தெளிவாக அறியலாம். பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குர்ஆனின் தெளிவாக்கம்: பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்.' (அல்- குர்ஆன் அத்தியாயம் - 02 வசனம் 173) மேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் ஐந்தின் மூன்றாவது வசனத்திலும் அத்தியாயம் ஆறு - 145வது வசனத்திலும் - அத்தியாயம் பதினாறு - 115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் - இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன. பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது. கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அவர்களும் அறிந்து கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளிளும் குறிப்பிடப்பட்டுள்ளது. பைபிளின் அத்தியாயம் 11 - லெவிட்டிக்கஸ் (Leviticus) வசனம் 7 முதல் 8 வரையிலும் பைபிளின் அத்தியாயம் 14 - டியுட்டர்னோமி (Deuteronomy) வசனம் 8 ம் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி அறிவிக்கின்றன. மேலும் பைபிளின் அத்தியாயம் 65 - புக் ஆஃப் இஷையா (Book of Isaiyah) 2 முதல் 5 வரையுள்ள வசனங்களில் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பன்றி இறைச்சி உண்பதால் - மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன. எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண்மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (RoundWorm) ஊசிப்புழு (inWorm) கொக்கிப்புழு (HookWorm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை. பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால் இது போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது - இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் - குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் - மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் - மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் கேடுகெட்ட மிருகம் பன்றி. பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் - காடுகளிலும் - வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான். ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன. எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் - பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் - பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி. உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றி. உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான். தனது நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும் மிருகம் பன்றி. அமெரிக்காவில் பெரும்பான்மையினர் பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இரவு நேர பார்ட்டிகள் முடிந்த பிறகு தங்களுக்குள் 'மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு' (அதாவது எனது மனைவியுடன் நீ உனது மனைவியுடன் நான் என) கொண்டவர்களாக இருக்கிறார்கள். பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப் போலத்தான் செயல்படுவான். இந்தியர்களான நாம் அமெரிக்கர்களை மிகவும் முன்னேறியவர்கள் எனவும் - மிகவும் பண்பாடு உடையவர்கள் எனவும் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறோம். அவர்கள் என்ன செய்தாலும் அதனை நாமும் அப்படியே பின்பற்றுகிறோம். சமீபத்தில் மும்பையிலிருந்து பிரசுரமாகும் 'ஐலேண்ட்' என்னும் மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை 'மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு' மும்பை வட்டாரத்தில் சர்வ சாதாரண