BEWARE OF COCA COLA!!!

London, Feb 15 (IANS) The top secret recipe of one of the world's most popular beverages, Coca Cola, which was kept locked in a steel vault in Atlanta city and guarded 24-hours a day, has now been leaked by a website.


The drink was created by pharmacist John Pemberton in 1886. Its recipe reportedly contains the exact measures of all the different oils needed for Coca Cola's secret ingredient - Merchandise 7X.

Despite making up only one percent of the drink's total formula, Merchandise 7X gives the popular soft drink its unique taste, the Daily Telegraph reported.

However, thisamericanlife.org website claims to have discovered a list in a photograph in a newspaper article giving the ingredients and exact quantities to make the drink.

The Feb 8, 1979, edition of the Atlanta Journal-Constitution has a photograph of someone holding open a book with a recipe claimed to be an exact replica of Pemberton's.

The 'secret' recipe is al follows:


Fluid extract of Coca 3 drams USP
Citric acid 3 oz
Caffeine 1 oz
Sugar 30 (quantity unclear from the markings)
Water 2.5 gal
Lime juice 2 pints 1 qrt
Vanilla 1 oz
Caramel 1.5 oz or more to colour
7X flavour (use 2oz of flavour to 5 gals syrup)
Alcohol 8 oz
Orange oil 20 drops
Lemon oil 30 drops
Nutmeg oil 10 drops
Coriander 5 drops
Neroli 10 drops
Cinnamon 10 drops




Source: http://in.news.yahoo.com/top-secret-coca-cola-recipe-revealed-20110215-001322-527.html

சோதனைகள்..



-- மனிதர்களின் வாழ்க்கையில் சோதனைகள் என்பது அன்றாடம் நிகழக்கூடியதாகவே உள்ளதுமுஸ்லிம்களின் செயல்கள் அனைத்தும் மறுமைக்காகவேஉள்ளதுஇவ்வுலக சோதனைகளில் மனமுடைந்து விடாமலிருக்க பின்வரும் குர்ஆன் வசனங்கள்ஹதீஸ்கள் உதவும்.

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாதுஅவன் எங்கள் அதிபதிநம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையேசார்ந்திருக்க வேண்டும்’ என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 9:51

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா?அவர்களுக்கு வறுமையும்துன்பமும் ஏற்பட்டனஅல்லாஹ்வின் உதவி எப்போதுஎன்று ( இறைத்தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும்கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர் .கவனத்தில் கொள்கஅல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.

திருக்குர்ஆன் 2:214

நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல்
விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களாஅவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம்உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான்.
பொய்யர்களையும் அறிவான்.

திருக்குர்ஆன் 29:2,3

ஒரு மனிதருக்கு (மறுமையில் ) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான்.ஒரு மனிதருக்கு (மறுமையில்அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான்என்று நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்அனஸ் பின் மாலிக்(ரலி)

நூல்திர்மிதீ 2319

இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது
விஷயத்திலும்தமது பிள்ளைகள் விஷயத்திலும்தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள்அல்லாஹ்வைச் சந்திக்கும்நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்அபூ ஹுரைரா (ரலி)

நூல்திர்மிதீ 2323

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

திருக்குர்ஆன் 2:286

அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்:

ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலிதுன்பம்நோய்கவலைஅவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாகஅவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 5030

ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும் , அது அல்லாத வேறு எந்தத் துன்பமாயினும் ( அதற்கு ஈடாக) , மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப்போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை ” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 5023

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை , அவர்கள் அதன்படி செயல்படாத வரை , அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லைமன்னித்துவிடுகிறான்.

இதை அபூஹுரைரா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்புகாரி 6664

நபித்தோழர்களில் சிலர் நபி (ஸல்அவர்களிடம் வந்து, “எங்கள் உள்ளத்தில் சில (தடுமாற்றமானவிஷயங்கள் எழுகின்றனஅவற்றை (வெளிப்படுத்திப்)பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ)காரியமாகக் கருதுகிறோம்” என்று கூறினர்அதற்கு நபி (ஸல்அவர்கள், “உண்மையிலேயே நீங்கள் அத்தகையஉணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?” என்று கேட்டார்கள்அதற்கு
நபித்தோழர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்அதற்கு, “அதுதான் ஒளிவுமறைவற்ற (தெளிவானஇறைநம்பிக்கை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்அபூஹுரைரா (ரலி).

நூல் : முஸ்லிம் 188

அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் (பாவம் செய்தஅனைவரும் (இறைவனால்மன்னிக்கப்படுவர் ; ( தம் பாவங்களைத்தாமே பகிரங்கப்படுத்துகின்றவர்களைத் தவிர.ஒரு மனிதன் இரவில் ஒரு (பாவச்செயல் புரிந்து விட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனது பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்)மறைத்துவிட்டிருக்க , இன்னாரேநேற்றிரவு நான் (பாவங்களில்இன்னின்னதைச் செய்தேன் என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தைஇரவில் (பிறருக்குத் தெரியாமல்இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால் ,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன்தானே வெளிச்சமாக்கி விடுகிறான்.

இதை அபூஹுரைரா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்புகாரி 6069

” மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழேஎன்றைக்கும் நிரந்தரமாக குதித்துக்கொண்டேயிருப்பர்விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாககுடித்துக் கொண்டேயிருப்பார்ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரகநெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார் ” என்று இறைத்தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்அபூ ஹுரைரா (ரலி)

நூல்புகாரி 5778

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனைமறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கைஇழக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 12:87

தட்பவெப்ப நிலைகளில் திடீர் மாற்றங்கள்

மூன்று பக்கம் கடல், ஒரு பக்கம் நிலத்தால் சூழப்பட்ட அழகான தீபகற்ப நாடு இந்தியா. உலக அளவில் தட்பவெப்ப நிலைகளில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. காலம் தவறி மழை, ஓரிடத்தில் அதிக மழை, அருகே உள்ள பகுதியில் கடும் வெயில் என காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் மக்களை வதைக்கிறது. வானிலையை கணிக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்களும் திணறுகின்றனர். இதுபோன்ற தட்பவெப்ப நிலை மாற்றங்கள் அனைத்திற்கும் “கடலில் ஏற்படும் மாற்றங்களே’’ காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காலநிலை மாற்றங்களால் உலகின் மற்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தமிழகத்தையும் தாக்க தொடங்கியுள்ளது. தட்பவெப்ப வேறுபாடுகளால் உலகம் முழுவதும் கடல் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 2050ம் ஆண்டில் இந்தியவைச் சுற்றியுள்ள கடல்களின் நீர்மட்டம் 1 மீட்டர் உயரும் என்று ஐஎப்எம்ஆர் என்ற ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

கடல் மட்டம் உயரும்போது அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழகம் இருக்கும் என்று இப்போதே எச்சரித்துள்ளது அந்நிறுவனம். தமிழக கடலோரப் பகுதியின் நீளம் 1076 கி.மீ. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்கள் கடலோரத்தில் உள்ளன. 13 மாவட்டங்களும் கடல் மட்டத்தில் இருந்து 5 முதல் 10 மீட்டர் வரை தாழ்வாக உள்ளன. எனவே கடல் மட்டம் 1 மீட்டர் உயரும்போது 1091 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதி முழுவதும் நிரந்தரமாக தண்ணீருக்குள் மூழ்கிவிடும். இதனால் தமிழகத்தில் சுமார் ஸி1.27 லட்சம் கோடி மதிப்பிலான கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடலோரத்தில் உள்ள துறைமுகங்கள், மின் நிலையங்கள், விவசாய நிலங்கள், சாலைகள், நிலங்கள் முழுவதும் பாதிக்கப்படும். துறைமுகங்களில் ஸி36,595 கோடி அளவிற்கும், மின் நிலையங்களில் ஸி13,814 கோடி, விவசாய நிலங்களில் ஸி14,608 கோடி, சாலைகளில் ஸி3,145 கோடி, நிலங்களில் ஸி61 லட்சத்து 15,471 கோடி அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும். கடலோரங்களில் மூன்றரை லட்சம் மீனவர்கள் உட்பட ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் அனைத்தும் நீருக்குள் மூழ்கிவிடும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள்தான் மிக அதிகமாக பாதிக்கப்படும். இந்த பகுதிகள் கடல் மட்டத்தைவிட மிகத் தாழ்வாக உள்ளன. இதனால் பாதிப்புகளும், இழப்புகளும் இப்பகுதியில் அதிகமாக இருக்கும். சென்னை, கடல் மட்டத்தில் இருந்து 5 மீட்டர் தாழ்வாக உள்ளது. சென்னையில் கடலோரத்தில் பல கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இவை அனைத்தும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தரமணி, வேளச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் இன்னும் 20 ஆண்டுகளில் கடல் நீர் சூழ்ந்துவிடும் என்று மற்றொரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவுகள்

18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தற்போதுள்ள கடல் மட்டத்தைவிட 100 மீட்டர் தாழ்வாகவே கடல்மட்டம் இருந்துள்ளது என்றும், கடந்த 6 ஆயிரம் ஆண்டுகளில்தான் கடல் மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது என்றும் டைட்டஸ் என்ற விஞ்ஞானி ஆதாரப்பூர்வமாக நிரூபித்து உள்ளார். 2100ம் ஆண்டில் 10 செ.மீ வரை கடல்நீர் மட்டம் உயரும் என்று ஹாப்மேன் என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். ஒரு ஆண்டுக்கு 1 முதல் 2 மி.மீ வரை கடல் மட்டம் உயருகிறது என்று வாரிக் மற்றும் ஆர்லமென்ட்ஸ் என்ற விஞ்ஞானிகள் கூட்டாக ஆராய்ச்சி நடத்தி நிரூபித்து உள்ளனர். கடலில் ஆராய்ச்சி நடத்திய விஞ்ஞானிகள் அனைவருமே கடல் மட்டம் உயர்ந்து வருகிறது என்றுதான் தெரிவித்துள்ளனர்.

அப்துல் கலாம் கருத்து

இந்தியாவில் தட்பவெப்ப மாறுபாட்டால் நீர் நிலைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியா 2020ம் ஆண்டில் வல்லரசாக மாறுவதற்கு நீர்நிலைகளும் நமக்கு முக்கிய தேவை. நீர்நிலைகளின் எண்ணிக்கை குறைந்தால் விவசாயம் குறைந்து விடும். 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்த நீர்நிலைகளின் நிலையை தற்போதைய நிலையுடன் ஒப்பிட்டு பார்த்தால் பல விஷயங்கள் புரியும். ஆந்திராவில் உள்ள கோதாவரியில் மழை பெய்யும்போது மட்டும் 2,500 டிஎம்சி தண்ணீர் வீணாகிறது. சாதாரண நாட்களில் 700 டிஎம்சி வீணாகிறது. இதேபோல எல்லா மாநிலங்களிலும் தண்ணீர் வீணாகிறது. வீணாகும் தண்ணீரை நல்ல முறையில் பயன்படுத்த நடவடிக்கைகள் தேவை.

அழிவை தடுக்க என்ன வழி

கடலோரப் பகுதிகளில் முழுமையான பகுப்பாய்வுகள் நடத்தப்பட வேண்டும். கடலோர பகுதிகள் குறித்த மிக விரிவான மற்றும் உண்மையான தகவல்களை சேகரிக்க வேண்டும். கடலோர கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளில் தட்பவெப்ப மாற்றத் தகவல்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். முன் எச்சரிக்கை கருவிகளை முக்கிய இடங்களில் வைக்க வேண்டும். மண் அரிப்பை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மெரினா மூழ்கும் அபாயம்

சென்னையில் 1 மீட்டர் கடல் மட்டம் உயரும்போது மெரினா கடற்கரை மூழ்கிவிடும் அபாயம் உள்ளது. இது ஒரே நாளில் நடக்காது. ஆனால் சிறிது சிறிதாக கடலின் ஆதிக்கம் அதிகரித்து இது நடக்கும் என்கின்றனர். மெரினா போலீஸ் நிலையம் பின்புறமுள்ள நொச்சிக் குப்பம், மாட்டான் குப்பத்தை சேர்ந்த வயதான மீனவர்கள் கூறும்போது, “நாங்கள் சிறுவனாக இருந்த காலத்தில் கடல்நீர் மட்டம் ரொம்ப தூரத்தில் இருந்தது. ஆனால் இப்போது மிக அருகில் உள்ளது. சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர்மட்டம் உள்ளே வந்துள்ளது’’ என்றனர்.

சிரபுஞ்சியில் குடிநீர் இல்லை

இந்தியாவில் ஆண்டு முழுவதும் மழை பெய்யும் இடமாக இமயமலை அருகே உள்ள சிரபுஞ்சி இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அங்குள்ள மக்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சிரபுஞ்சியில் தற்போது லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்கின்றனர்.

கடலுக்குள் கபாலீஸ்வரர் கோவில்
சாந்தோம் ஆலயத்துக்கு பின்புற கடல் பகுதியில்தான் உண்மையான கபாலீஸ்வரர் கோவில் இருந்தது. அந்த இடத்தை கடல் நீர் ஆட்கொண்ட பிறகுதான் மயிலாப்பூரில் புதிய கபாலீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது என்பது வரலாற்று உண்மை. கடலுக்குள் இன்னும் பழைய கபாலீஸ்வரர் கோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடலுக்குள் புற ஊதா கதிர்கள் தாக்கம்

புவி வெப்பம் அடைவதால் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள துளையின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் புற ஊதாக் கதிர்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. நிலப் பகுதிகளை மட்டும்தான் புற ஊதாக் கதிர்கள் தாக்குகிறது என்று நினைத்திருந்த ஆராய்ச்சியாளர்கள், கடலிலும் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதை கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

கடலின் மேற்பரப்பில் இருந்து 10 மீட்டர் ஆழம் வரை புற ஊதாக் கதிர்களின் தாக்கம் மிகமிக அதிகமாக உள்ளது என்று “ஸ்மித்’’ என்ற விஞ்ஞானியின் தலைமையில் நடந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இதனால் கடல்நீரின் வெப்பம் வேகமாக உயர்ந்து வருவதாகவும், இன்னும் 5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் உயர்ந்தால் 80 சதவீத கடல்வாழ் உயிரினங்கள் இறந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் சுனாமி அலைகளும், பெரிய புயல் சின்னங்கள் உருவாகி நிலப்பகுதிகளை தாக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

துளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டுபிடித்திருக்கின்றது!


பாபர் மஸ்ஜித் தொடர்பான அலகாபாத் உயர் நீதி மன்றத்தின் கட்ட பஞ்சாயத்து தீர்ப்பை கண்டித்து சமூக அக்கறையாளர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு.

மதசார்பின்மையில் ஒட்டையை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு!-ராஜேந்தர் சச்சார் (ஒய்வுப் பெற்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி)
இந்தத் தீர்ப்பு பல விஷயங்களைப் பாதிக்கச் செய்திருப்பதுடன், இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையிலேயே ஒட்டையை ஏற்படுத்திவிட்டது. ‘பள்ளிவாசலை உடைத்து அழியுங்கள்…!’ என்று கூறுவதைப் போல இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு இந்துக்களிடம் வழங்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் முடிவை எட்டுவதற்கு நம்பிக்கை ஒர் அடிப்படையாக இருக்கக்கூடாது.
இந்த விஷயத்தில் நடந்ததை மறந்துவிட்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன. நாம் எங்குச் செல்வது? எதை நோக்கிச் செல்வது?  ஒரு குற்றத்தை யாரும் மறந்து விடக்கூடாது. ஒரு குற்றத்தைச் செய்து விட்டு எவரும் தப்பி ஒடவிடாமல் இருப்பதை உறுதி செய்வது தான் நீதிமன்றத்தின் கடமை. முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது அவர்களுக்குள்ள உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. பொதுவான சட்டம் சொலவது என்னவென்றால் ஒரு மகன் தந்தையைக் கொன்றால், தந்தையின் சொத்துக்களைப் பெறும் உரிமை அவனுக்கு இல்லை என்பது தான்! ஆனால் இங்கோ பாபர் பள்ளிவாசலை இடித்த குண்டர்கள் தாங்கள் விரும்பியதைப்  பெற்றிருக்கிறார்கள்.


இந்தக் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்குச் சட்ட அடிப்படை எதுவும் கிடையாது-ராஜீவ் தவான் (மூத்த வழக்குறைஞர்) 
பிரச்னையில் சம்பந்தப்பட்ட இரு பிரிவினருக்கும் சரி சமமாகக் கூட நிலம் பிரித்துத் தரப்படவில்லை. இஸ்லாமியருக்குச் சொந்தமான நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு அவர்களுக்கும், இரு பங்கு இந்துக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்குச் சட்ட அடிப்படை எதுவும் கிடையாது. தார்மீக நீதியும் கிடையாது. அது மட்டுமின்றி இத்தீர்ப்பு நிலத்திற்கு உரிமை கோரிய ஒரு பிரிவினருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகும்.
இந்த தீர்ப்பு ஏராளமான குறைகளைக் கொண்டிருக்கிறது. இதிலுள்ள தவறுகள் சரிசெய்யப்படாவிட்டால் வரலாறே தவறாகிவிடும்.  இந்தியாவில் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை ஆப்கானிஸ்தானில் பாமியன் சிலைகளைத் தாலிபான்கள் சிதைத்ததுடன் வெளிநாட்டவர்கள் ஒப்பிடுகின்றனர். பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதற்கும் முஸ்லிம்களுக்கு உரிய நிலம் அவர்களுக்கு மறுக்கப்படுவதற்கும் நீதி வழங்க மதச்சார்பற்ற நிர்வாகத்தால் முடியவில்லை. இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் கண்ணியத்துடன் நடத்தப்படுவதையும் அவர்களுக்குரிய மரியாதை வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டியது இந்திய ஜனநாயகத்தின் தேவையாகும்.

நீதி பரிபாலனத்தின் சாதாரண நெறிமுறைக்கு முரணான தீர்ப்பு-அந்தி அர்ஜூனா (மூத்த வழக்குறைஞர்உச்சநீதிமன்றம்)
 பாபர் பள்ளிவாசல் தகர்க்கப்படாமல் இருந்திருந்தால் அது நின்ற இடத்தை இப்போது தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது போல் பிரிப்பதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்குமா? அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மிக தெளிவாக விடப்பட்டுள்ள அம்சம் டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சண்டித்தனத்தை கண்டிக்காதது தான்.  சர்ச்சைக்குரிய 2.72 ஏக்கர் நிலம் காலியான இடம் என்பது போல் நீதிபதிகள் கருதியுள்ளார்கள்…1992 பள்ளிவாசல் இடிப்பை இந்த தீர்ப்பு நியாயபடுத்தி அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது. வழக்கில் தொடர்புடைய இரு தரப்புகளில் ஒன்று வழக்கு தொடுக்கும் போது இருந்த நிலையை தனது வசதிக்கேற்ப சட்டத்தை தன் கையில் எடுத்து கொண்டு மாற்றிவிட்டால் (இந்த வழக்கில் இந்துத் தரப்பு), நீதிமன்றம் அந்த வன்செயலுக்கு முன்பிருந்த நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் நீதிமன்றங்களில் நிலவும் சாதாரண நீதி பரிபாலன முறையாகும். ஆனால் அவ்வாறு செய்வது இந்த வழக்கில் உள்ள நிலையை போல் சாத்தியமில்லை என்றால் சட்டத்தை தன் கையில் எடுத்துச் செயல்பட்டவர்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படும் வகையில் எந்த நீதிமன்றமும் செயல்படாது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் நீதி பரிபாலனத்தின் இந்த அடிப்படையை கூட உணராது தீர்ப்பு அளித்துள்ளது

தர்க்க ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் ஏற்கத் தக்கதாக இல்லை இந்த தீர்ப்பு(பி.எஸ். அப்பு (முன்னாள் தலைமைச் செயலாளர் பீகார்)
மூன்று நீதிபதிகளும் பள்ளிவாசலை முஸ்லிம்கள் பயன்படுத்தினர் என்றும் பள்ளிவாசலுக்கு வெளியில் 100 எட்டு தூரத்தில் உள்ள ராம் சபூட்ரா (திண்ணையை) இந்துக்கள் பயன்படுத்தினர் என்றும் கருதியுள்ளனர். எனவே இந்த விவாகாரத்தில் பள்ளிவாசல் இருந்த இடத்தை முஸ்லிம்களிடமும், ராம் சபூட்ரா மற்றும் சீதா கி ரோசி (சீதையின் சமையல்கட்டு) இருந்த இடத்தை  இந்துக்களிடம் ஒப்படைப்பதும் தான் நியாயமான, சாத்தியமான, நீதியான தீர்ப்பாக இருக்கும். திரேட்டா யூகத்தின் மிகப் பெரும் கதாநாயகனான ராமர், 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நீரில் சமாதியான ராமர், பள்ளிவாசலின் கும்பத்தின் கீழ் தான் பிறந்தார் என்று சொல்வது தர்க்க ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் ஏற்கத் தக்கதாக இல்லை. நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளை காத்து சட்டத்தின் கண்ணியத்தை காக்கும் வகையில் உச்சநீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு இறுதி தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்ப்போம்.

வரலாற்றுக்கு அவமானம் கற்பிக்கும் தீர்ப்பு-டி.என்.ஜா (வரலாற்றாசிரியர்)
வரலாற்று சான்றுகளை புறந்தள்ளும் வகையில் நம்பிக்கைகளை அனுமதிக்க கூடாது. என்ன நடந்துள்ளது என்றால் நம்பிக்கை பகுத்தறிவை வென்று விட்டதாக தோன்றுகிறது. வரலாற்றை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது நம்பிக்கை. இந்தத் தீர்ப்பு உண்மைக்கும், வரலாற்றுச் சான்றுகளுக்கும், வரலாறு எழுதியலுக்கும் இழைக்கப்பட்டுள்ள ஒரு அவமானம். தலைநகர் டெல்லியில் அனுமான் கோயில்களின் எண்ணிக்கை திடுதிடுப்பென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உரிமை இல்லாத நிலங்களில் கட்டப்படும் இந்த எண்ணற்ற அனுமன் கோயில்களால் எழும் பிரச்னைகளையும் ராமர் கோயில் பிரச்சினையோடு சேர்த்துத் தீர்க்கும்  பொறுப்புக்கு அரசம் நீதிமன்றங்களும் எதிர்காலத்தில் ஆளாகப் போகின்றன.

ஜனநாயகத்திற்கான தகுதிகளை இழந்து நிற்கிறோம்-நானி பால்கிவாலா
(பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் ராமர் பிறந்தாரா அங்கிருந்த கோயில் இடிக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பது குறித்து உச்சநீதிமன்றத்திடம் 1994ல் நரசிம்மராவ் அரசு கருத்துக் கேட்டப் போது எழுதியது)
நம்பிக்கைகள், வரலாறு, புராணம் மற்றும் உடனடி அரசியல் பிரச்சினைகளில் முடிவெடுக்க நீதிமன்றத்தை நாடுவதற்கு விரும்புகின்ற நிலை ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி இது குறித்து மிக்க ஆவலுடன் இருக்க நேர்ந்துள்ள நிலை உருவாகியுள்ளது (ஜனநாயகத்திற்கான) எல்லா தகுதிகளையும், நேர்மையையும் நாம் இழந்து நிற்பதையே காட்டுகிறது.


முஸ்லிம்களை போல இந்துக்கள் அமைதியாக இருப்பார்களா?-குல்தீப் நய்யார் (அரசியல் விமர்சகர்)
பாப்ரி பள்ளிவாசல் தீர்ப்புக்குப் பிறகு நாட்டில் சாந்தியும், சமாதானமும் நிலவுகிறது என்பதில் சந்தேகமே இல்லை. எங்கும் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை. இதன் பெருமை  முழுக்க முஸ்லிம்களுக்கே போய் சேரும். இதற்காக பாராட்டப்பட வேண்டியவர்களும் அவர்களே. அதற்குக் காரணம் உள்ளது.
பொதுவாக, தாங்கள் ஏமாற்றப்பட்டதாக அவர்கள் எண்ணியபோதும், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், அத்தீர்ப்பில் திருப்தி அடையாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அந்த வாக்குறுதியை அவர்கள் சரியாகவே நிறைவேற்றியுள்ளனர். அந்த அடிப்படையில், இப்போது மேல் முறையீடு செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
ஒருவேளை, இத்தீர்ப்பு இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக வந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பதை சற்று ஊகித்துப் பாருங்கள். அவர்கள் முஸ்லிம்களைப் போல் அமைதியாக இருந்திருப்பார்களா? தீர்ப்பு அவர்களுக்கு முழு அளவில் சாதகமாக இல்லாதிருந்தும்கூட தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக கூப்பாடு போடுகிறார்கள். எனவே, இத்தீர்ப்பை அவர்கள் தன்னடக்கத்தோடு ஏற்றுக்கொண்டனர் என்றோ, அதனால் முஸ்லிம்களின் அச்சம் குறைக்கப்பட்டிருக்கிறது என்றோ கருதுவதற்கு இடமில்லை. தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் இரு தரப்பினரும் கையாண்ட அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமானது என்பதை அனைவரும் அறிவர்.
சிறுபான்மை சமூகத்தினர், சட்டத்தை மதித்து, அதற்குக் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறும் போது பெரும்பான்மை இந்து சமுதாயம் அப்படி ஏதும் உறுதி கூற முன்வரவில்லை என்பது இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கது. 1992ல் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது சட்டத்திற்குப் புறம்பான காரியமாகும்.

தற்கால அரசியலை நியாயப்படுத்துவதற்காக நாம் கடந்த காலத்தை மாற்றிவிட இயலாது-ரொமீலா தாப்பர் (வரலாற்று ஆசிரியர்)
இந்த தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் எந்த ஒரு குழுவும் தங்கள் கடவுள் இந்த இடத்தில் பிறந்தார் என்று கூறி தாங்கள் ஒரு பெரும் மதநம்பிக்கையாளர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு (அதாவது ராமர் பிறந்த இடம் குறித்து சங்பரிவார் ஒட்டுமொத்த ஹிந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொன்னது போல்) பிறருக்குச் சொந்தமான சொத்துக்களைக் கோருவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இனி தேவையான சொத்துக்களை சுட்டிக்காட்டி சண்டையை ஏற்படுத்துவதற்காக இது போல பல ஜன்மஸ்தானங்கள் உருவாக்கப்படும். திட்டமிட்டு வரலாற்றுச் சின்னம் (பாபரி பள்ளிவாசல்) இடிக்கப்பட்டது கண்டிக்கப்படாத நிலையில் இது போன்ற இடிப்புச் செயல்களை எப்படி தடுத்து நிறுத்த இயலும்?
வரலாற்றில் நடந்தது நடந்தது தான். அதனை மாற்ற இயலாது. ஆனால் என்ன நடந்தது என்பதை முழுமையாக எப்படி புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதை நாம் கற்க இயலும். நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் அதில் பாடங்களை கற்க இயலும். தற்கால அரசியலை நியாயப்படுத்துவதற்காக நாம் கடந்த காலத்தை மாற்றிவிட இயலாது. இந்த தீர்ப்பு வரலாற்றின் மீதான மரியாதையை சிதைத்துள்ளது. வரலாற்றின் இடத்தில் மதநம்பிக்கையைப் புகுத்தியுள்ளது. இந்த நாட்டின் சட்ட பரிபாலனம் மதநம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமில்லாமல் சான்றுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்படும் போதுதான் உண்மையான நல்லிணக்கம் ஏற்படும்.


அநீதியின் வெளிப்பாடு-ஹர்ஷ் மந்தர் (முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சமூக சேவகர்)
இந்த தீர்ப்பு நடுநிலையானது என்றும் நேர்மையானது என்றும் சில விமர்சகர்கள் கூறுவது எனக்கு வினோதமாக இருக்கின்றது. நாம் இனி பழையவற்றை மறந்து முன் செல்ல வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நீதிக் கிடைப்பதை அனுபவிக்காத வரையில் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இயலாது என்பதை அவர்கள் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள். இந்த வழக்கு குற்றவியல் ரீதியாக யார் தவறு செய்தார்கள் என்பதை நிர்ணயிக்கும் வழக்கு அல்ல என்பது உண்மை தான். அனால் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ராமர் கோயில் கட்டும் இயக்கத்தின்; முக்கிய அடிப்படைகள் அனைத்தையும் கொள்கையளவில் ஏற்கும் வகையில் அமைந்துள்ளது….ராமர் கோயில் இயக்கத்தின் போர் பரணியாக ‘அந்த இடத்தில் தான் ராமர் கோயில் கட்டுவோம்’ என்பதே. நம்பதகாத வரலாறு மற்றும் விசுவாசத்தின் அடிப்படையிலும், ஏமாற்று மற்றும் அடக்குமுறையின் அடிப்படையிலும் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம் இந்தியாவின் மதசார்பற்ற அரசியல் சாசனச் சட்டத்திற்கு சவால் விட்டு நூற்றுக்கணக்கான உயிர்களை பறித்த, அச்சத்தையும் வெறுப்பையும் விதைத்த ஒரு இயக்கம் வெற்றிப் பெற்றுள்ளது.

துளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டுபிடித்திருக்கின்றது!-சித்தார்த் வரதராஜன் (தி ஹிந்து நாளிதழின் துணை ஆசிரியர்)
16வது நூற்றாண்டில் அயோத்தியில் தான் துளசிதாசர் ராம் சரித் மனாஸ் நூலை எழுதினார். எனினும் அதில் ராமர் பிறந்த இடம் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. ஆனால் அதன் பின் ஐந்து நூற்றாண்டுகள் கழித்து இப்போது ராமர் பிறந்த இடத்தை லக்னோ நீதிமன்றம் இவ்வளவு துல்லியமாக கண்டுபிடித்திருக்கின்றது!
இந்தியாவில் அனைத்துச் சமுதாயத்தினருக்கும் அனைத்து வகையான நம்பிக்கைகளும் இருக்கலாம். ஆனால் சட்டத்தில் எது தவறு எது சரி என்பதைத் தீர்மானிப்பதற்கான நடுவராக அந்த நம்பிக்கை மாறிவிடக்கூடாது. அதே போல், வரலாற்றுத் தவறுகளைத் திருத்துவதும், நீதி வழங்குவதற்கான அடிப்படையாக இருக்கக்கூடாது.