புனித ஹஜ் மற்றும் உம்ரா-வின் போது ஓதும் 'துஆ'க்கள்.

Source:http://www.kayaltimes.com/showNews.aspx?tNewsId=4159
புனித ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் போது ஓத வேண்டிய முக்கிய துஆக்கள் சிலவற்றை எமது வாசகர்கள் பார்வைக்கு தருகிறோம்...



















கைப்பேசியில் இருக்க வேண்டிய எண்கள்

Thanks :http://www.kayalconnection.com/?p=13874


நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய, அவசரத்  தேவைக்கானதொடர்பு எண்கள்
wolf kandi pattern wolf kandi pattern can i snort oxazepaman i snort oxazepam can i snort oxazepaman i snort oxazepam free video de mini tangas 2012 free video de mini tangas 2012walmart have detox kits walmart have detox kits mothers watch son jerk off stories mothers watch son jerk off stories holt spanish 2 teachers additionolt spanish 2 teachers addition holt spanish 2 teachers additionolt spanish 2 teachers addition

அவசர உதவி அனைத்திற்கும்                911
வங்கித் திருட்டு உதவிக்கு                       9840814100
மனிதஉரிமைகள் ஆணையம்                 044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்                 09383337639
போலீஸ் SMS                                               950009910
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS       9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS                98400 00103

போலீஸ்                                                           100
தீயணைப்புத்துறை                                        101
போக்குவரத்து விதிமீறல                            103               
விபத்து                                                             100, 103
ஆம்புலன்ஸ்                                                   102, 108
பெண்களுக்கான அவசர உதவி                   091
குழந்தைகளுக்கானஅவசர உதவி              1098
அவசர காலம் மற்றும் விபத்து                                1099 
முதியோர்களுக்கான அவசர உதவி                       1253
தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி               1033
கடலோர பகுதி அவசர உதவி                                  1093
ரத்த வங்கி அவசர உதவி                                          1910
கண் வங்கி அவசர உதவி                                          1919
விலங்குகள் பாதுகாப்பு                                               044 -22354959/22300666
நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்..
தகவல் :வாவு K.A.சாகுல் ஹமீது 

நாடாளுமன்றத் தாக்குதல், 26/11 மும்பைத் தாக்குதல் பின்னணியில் அரசா? - அதிர்ச்சித் தகவல்!

நாடாளுமன்றத் தாக்குதல், 26/11 மும்பைத் தாக்குதல் பின்னணியில் அரசா? - அதிர்ச்சித் தகவல்!

புது டெல்லி : இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் தொடர்பாக சிபிஐ மற்றும் ஐபி-க்கு இடையே நடைபெறும் மோதலில் புதிய திருப்பமாக நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் மும்பை 26/11 தாக்குதல் ஆகியவற்றை இந்திய அரசே நடத்தியது என்று சிபிஐ அதிகாரி தெரிவித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் அரசின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உள்துறை அமைச்சகத்தின் செயலர் மணி, இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் மும்பையில் நடத்தப்பட்ட 26/11 தாக்குதலும் இந்திய அரசாலேயே திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்று இஷ்ரத் ஜஹான் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு புலனாய்வு அதிகாரி சதீஷ் வர்மா கூறியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான சட்டங்களை எதிர்ப்பின்றி கொண்டு வரவே மத்திய அரசு இத்தகைய தாக்குதல்களை நிறைவேற்றியதாக சதீஷ் வர்மா கூறியதாக மணி கூறியுள்ளார். நாடாளுமன்ற தாக்குதல் நடைபெற்ற (13.12.2001)ஒரு சில தினங்களிலேயே பொடா சட்டமும் மும்பை தாக்குதல் (26.11.2008) நடைபெற்ற உடன் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டமும் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இஷ்ரத் ஜஹானுடன் கொல்லப்பட்ட மூவரும் லஷ்கர் தீவிரவாதிகள் எனும் ஐபி-யின் அறிக்கை பொய்யானது என்று சதீஷ் சர்மா கருதியதாகவும் மணி கூறினார். இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் தொடர்பாக உள்துறை தயாரித்த அறிக்கையானது சர்ச்சைக்குரிய ஐபி அதிகாரி ராஜேந்தர் குமார் என்பவரால் தயாரிக்கப்பட்டது என்று சர்மா கருதியதாகவும் மணி தன் உயர் அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு தொடர்பாக ஐபி அதிகாரி ராஜேந்தர் குமாருக்கு எதிராக சிபிஐ வழக்கு தொடர முடிவானதும், உள்துறை அமைச்சகத்தின் தலையீட்டால் அம்முயற்சி நிறுத்தப்பட்டது கவனிக்கத்தக்கது. குஜராத் மாநிலத்தைச் சார்ந்த ஐபிஎஸ் கேடர் அதிகாரியான சதீஷ் வர்மா சிபிஐ சிறப்பு புலனாய்வு குழுவிலிருந்து நீக்கப்பட்டு ஜுனுகாத் காவலர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக தற்போது இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது....!


Thanks to:http://adiraimuslims.blogspot.in/2013/07/2611.html

நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ??? – Irena Handono -

– ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி இரெனா ஹன்டோனோ – Irena Handono -


நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். 

என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.பின்னர் பருவ வயதில்… தேவாலயத்தைச் சேர்ந்த ”Liaision Maria” என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறிக்கும்.

இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் ”Stray Sheeps” என்று சொல்லப்படக் கூடிய ”காணாமல் போன ஆடுகளை” தேடுவதாகும். ”காணாமல் போன ஆடுகள்” என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல. மாறாக ”காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, ”கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை”. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் ”காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.

ஒரு வருடம் கழித்த பிறகு நான், இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் உறுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின் தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன்.

சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. நான் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது. கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான்.

பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன். அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப் படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.

”இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள்” என்று எங்களுக்கு விளக்கினார்கள்.

இந்தோனேசியாவில்,

o ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்

o முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்

o வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளை தொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்

o ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்

o தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்

இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நன்பர்கள் அனைவரும் ”இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம்” என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடம், ”நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது, மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்” என்று கூறினேன்.

உதாரணமாக,

பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களுடைய மதம் இஸ்லாம் அல்ல!.அவர்களெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

மெக்ஸிகோ ஒரு ஏழை நாடு. அந்நாட்டில், குற்றவாளிகளாகவும், திருடர்களாகவும், குடிகாரர்களாகவும், கற்பழிப்பு செய்பவர்களாகவும், சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்!

அயர்லாந்து குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில், சச்சரவில் சக்கித் தவிக்கும் ஒரு நாடு. இந்தப் சச்சரவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்தப் சச்சரவு நடப்பது கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான். அவர்கள் தமக்குள்ளாகவே சன்டையிட்டுக் கொண்டு கொலை செய்கின்றார்கள். ஐரோப்பிய சமூகம் அவர்களை ”அயர்லாந்தின் தீவிரவாதிகள்” என்று கருதுகிறது. அவர்கள் ”ஐரோப்பிய தீவிரவாதிகள்” என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.

இத்தாலியைப் பாருங்கள்! போதைப் பொருள் கடத்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் – இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம், ”இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே” கூறினேன். அப்போது நான், இஸ்லாத்தை, இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். அதற்கு, ”நான் இஸ்லாத்தின் பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும்” என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டென்.

நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக ”இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான்” என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற ”திரித்துவக் கடவுள் கொள்கைக்கு” (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்), இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோ தேவாலயத்தில் மதங்களைப் பற்றிய பாடத்தை ரெவ. பாதிரியார் அவர்கள் போதித்த போது ”கடவுள் ஒருவரே! ஆனால் மூவரில் இருக்கிறார் (திரித்துவம் – Trinity) என்று போதித்தார். அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது. என் ஆழமான உள் மனது ”இறைவன் ஒருவனே! என்றும் மேலும் இது (குர்ஆன்) உண்மையானது தான்” என்றும் கூறிற்று.

மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம், விவாதித்தேன்.

”கடவுளின் திரித்துவக் கொள்கை” (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.

கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும் ஆச்சரியமடைந்தார். அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோனத்தை வரைந்தார். பின்னர் அவர், ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார்.

அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம். எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன் அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ”இதற்கு சாத்தியமே இல்லை” என்று கூறினார். அதற்கு நான், இது சாத்தியமானதே! கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தை வரைந்தேன். முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று கூறினேன்.

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், ”முடியாது” என்று கூறினார். முன்பு ”இதற்கு சாத்தியமே இல்லை” என்று கூறிய அவர், தற்போது ”முடியாது” என்று மட்டும் கூறினார்.

நான் கேட்டேன், ”ஏன்?”

அதற்கு பாதியார், ”இது நம்பிக்கை”. நீ புரிந்துக் கொண்டாயோ இல்லையோ அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதை விழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய்! என்று கூறினார்.

இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப் பெற்றும் அன்று இரவு குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக் குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்ய விரும்பினேன்.

ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், ”இந்த மேசைகளை உருவாக்கியது யார்?” என்று கேட்டேன். அதற்கு பாதிரியார் பதிலளிக்க விரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார்.
அதற்கு நான் ”இந்த மேசைகளை உருவாக்கியது ‘தச்சர்கள்’ (Carpenters)” என்றேன்.

”ஏன்?” பாதிரியார் கேட்டார்.
அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்கு முன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும் மேசைகளாகவே இருக்கின்றன. இந்த மேசைகள் எப்போதும் ”தச்சார்களாக” (Carpenters) மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசை கூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.

”நீ என்ன சொல்ல வருகிறாய்?” பாதிரியார் கேட்டார்.
அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்பட உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளே படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால் அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவே இருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவே தான் இருப்பான். ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்க முடியாது! மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது.

அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன். ஒரு இராணுவத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்து அவரை தங்களின் ”ஜெனரலாக” தேர்தெடுத்தால் அந்த தேர்வு செல்லாததாகிவிடும். ஏன் அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரை தேர்வு செய்திருப்பினும் சரியே!

”நீ என்ன சொல்ல வருகியாய்?” பாதிரியார்
அதற்கு நான், ”மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கடவுள் படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுளாக ஆக்கினால் அந்த தேர்வு செல்லாதது” என்று நான் அந்த பாதிரியாரிடம் விளக்கினேன்.

பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஒருநாள் நான் என்னுடைய பாதிரியாரிடம், ”என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும், மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார்” என்று கூறினேன்.

இவ்வாறு இந்த கன்னிகாஸ்திரி அவர்கள் பலவிதங்களில் அந்த பாதிரியாரிடம் விவாதம் புரிந்ததாகக் கூறினார்கள்.

பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தாம் இஸ்லாமே ஏகத்துவத்தை வலியுத்தும் உண்மையான மார்க்கம் என்றறிந்து இஸ்லாத்தை தழுவிய இந்த முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள் தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்ற அமைப்பின் தலைவியாக இருந்துக் கொண்டு இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்து கொண்டுவருகிறார்.

அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாகவும்.

( இக்கட்டுரை முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்து சுவனத்தென்றல் நிர்வாகியால் எழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.)


Thanks to:http://adiraimuslims.blogspot.in

Train Number - ரயில்களுக்கு எவ்வாறு எண்கள் வழங்கப்படுகின்றன?


Thanks: kayalpatnam.com

இந்திய ரயில்வே இயக்கும் அனைத்து ரயில் வண்டிகளுக்கும் பொதுவாக 5 இலக்க எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு இலக்கமும் சில தகுதிகள் / விதிகள் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

முதல் இலக்கம்

முதல் இலக்கம் - 0 என்றால் அது பொதுவாக சிறப்பு ரயில்களை (கோடைக்கால சிறப்பு ரயில்கள், விடுமுறை ரயில்கள் போன்றவை) குறிக்கும்

முதல் இலக்கம் - 1 என்றால் அது பொதுவாக சதாப்தி, துராண்டோ, ராஜதானி உட்பட அனைத்து தொலைதூர ரயில்களை குறிக்கும்

முதல் இலக்கம் - 2 என்றால் அதுவும் பொதுவாக சதாப்தி, துராண்டோ, ராஜதானி உட்பட அனைத்து தொலைதூர ரயில்களை குறிக்கும். 1 வரிசை நிறைவுபெற்றுவிட்டால் 2 வரிசை பயன்படுத்தப்படும்

முதல் இலக்கம் - 3 என்றால் கொல்கத்தா நகருக்குள் இயக்கப்படும் ரயில்களை குறிக்கும்

முதல் இலக்கம் - 4 என்றால் சென்னை, புது டெல்லி, சிக்கந்தராபாத் உட்பட பெரு நகரங்களில் இயக்கப்படும் ரயில்களை குறிக்கும்

முதல் இலக்கம் - 5 என்றால் சாதாரண பெட்டிகள் கொண்டு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்களை குறிக்கும்

முதல் இலக்கம் - 6 என்றால் MEMU வகை ரயில்களை குறிக்கும்

முதல் இலக்கம் - 7 என்றால் DMU வகை ரயில்களை குறிக்கும்

முதல் இலக்கம் - 9 என்றால் மும்பை நகருக்குள் இயக்கப்படும் ரயில்களை குறிக்கும் 


இரண்டாம்/மூன்றாம் இலக்கம்

இரண்டாம் இலக்கம் 2 இல் துவங்கினால் அது பொதுவாக அதிவிரைவு வண்டி (Super Fast Express), சதாப்தி வண்டி , ஜன சதாப்தி வண்டி போன்ற வண்டிகளை குறிக்கும்.

20 - அனைத்து மண்டலங்கிலான சதாப்தி/ஜன சதாப்தி ரயில்களை குறிக்கும்

21 - Central Railway மற்றும் Western Central Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

22 - Northern Railway, North Central Railway, North West Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

23 - Eastern Railway மற்றும் Eastern Central Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

24 - Northern Railway, Northern Central Railway மற்றும் North Western Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

25 - North Eastern Railway மற்றும் North Frontier Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

26 - Southern Railway மற்றும் South Western Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

27 - South Central Railway மற்றும் South Western Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

28 - South Eastern Railway, South East Central Railway மற்றும் ECoR மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும்

29 - Western Railway, West Central Railway and North West Railway மண்டல அதிவிரைவு வண்டிகளை குறிக்கும் 


இரண்டாம் இலக்கம் 2 தவிர, இதர எண்களில் (உதாரணமாக x1xxx, x3xxx) துவங்கினால் - அவ்வண்டி எண்களின் இரண்டாம் இலக்கம் - அவ்வண்டியின் இல்ல (home) மண்டலத்தையும் (Zone), மூன்றாம் இலக்கம் அவ்வண்டியின் இல்ல (home) கோட்டத்தையும் (Division) குறிக்கும்.

இரண்டாம் இலக்கம் 1 என்பது Central மற்றும் West-Central Railways மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Mumbai CST/ Pune கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Jhansi கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Bhopal கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 4 என்பது இம்மண்டலத்தின் Solapur/Jabalpu கோட்டத்தை குறிக்கும்


இரண்டாம் இலக்கம் 3 என்பது Eastern மற்றும் East Central Railway மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Howrah கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Sealdah கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Danapur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Dhanbad கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 4 என்பது இம்மண்டலத்தின் Malda கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 5 என்பது இம்மண்டலத்தின் Asansol கோட்டத்தை குறிக்கும்


இரண்டாம் இலக்கம் 4 என்பது Northern, North Central மற்றும் North Western Railway மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் New Delhi கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Allahabad கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Lucknow கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Moradabad கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 5 என்பது இம்மண்டலத்தின் Ambala கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 6 என்பது இம்மண்டலத்தின் Firozpur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 7 என்பது இம்மண்டலத்தின் Bikaner கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 8 என்பது இம்மண்டலத்தின் Jodhpur கோட்டத்தை குறிக்கும்


இரண்டாம் இலக்கம் 5 என்பது North-Eastern மற்றும் North-east Frontier Railways மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Lucknow கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Varanasi கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Sonepur/Samastipur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Izzatnagar/Lucknow கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 4 என்பது இம்மண்டலத்தின் Varanasi கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 5 என்பது இம்மண்டலத்தின் Samastipur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 6 என்பது இம்மண்டலத்தின் Lumding கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 7 என்பது இம்மண்டலத்தின் Katihar/Alipurduar கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 8 என்பது இம்மண்டலத்தின் Lumding/Alipurduar கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 9 என்பது இம்மண்டலத்தின் Tinsukia கோட்டத்தை குறிக்கும்


இரண்டாம் இலக்கம் 6 என்பது Southern மற்றும் South-Western Railways மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Chennai கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Chennai Egmore கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Mysore கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Thiruvananthapuram கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 5 என்பது இம்மண்டலத்தின் Bangalore கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 6 என்பது இம்மண்டலத்தின் Palghat கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 7 என்பது இம்மண்டலத்தின் Madurai கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 8 என்பது இம்மண்டலத்தின் Trichy கோட்டத்தை குறிக்கும்


இரண்டாம் இலக்கம் 7 என்பது South-Central மற்றும் South-Western Railways மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Secunderabad கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Vijayawada கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Hubli கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 4 என்பது இம்மண்டலத்தின் Guntakal கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 5 என்பது இம்மண்டலத்தின் Hyderabad கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 6 என்பது இம்மண்டலத்தின் Kacheguda கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 7 என்பது இம்மண்டலத்தின் Guntakal கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 8 என்பது இம்மண்டலத்தின் Hubli கோட்டத்தை குறிக்கும்


இரண்டாம் இலக்கம் 8 என்பது South-Eastern, South-East Central மற்றும் East-Coast Railways மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Kharagpur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Chakradharpur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Bilaspur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Sambalpur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 4 என்பது இம்மண்டலத்தின் Khurda Road கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 5 என்பது இம்மண்டலத்தின் Waltair கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 6 என்பது இம்மண்டலத்தின் Adra கோட்டத்தை குறிக்கும்


இரண்டாம் இலக்கம் 9 என்பது Western, North-Western மற்றும் West-Central Railways மண்டலத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 0 என்பது இம்மண்டலத்தின் Mumbai கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 1 என்பது இம்மண்டலத்தின் Vadodara கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 2 என்பது இம்மண்டலத்தின் Bhavnagar கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 3 என்பது இம்மண்டலத்தின் Ratlam கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 4 என்பது இம்மண்டலத்தின் Kota கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 6 என்பது இம்மண்டலத்தின் Ajmer கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 7 என்பது இம்மண்டலத்தின் Jaipur கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 8 என்பது இம்மண்டலத்தின் Bhavnagar கோட்டத்தை குறிக்கும்

மூன்றாம் இலக்கம் 9 என்பது இம்மண்டலத்தின் Rajkot கோட்டத்தை குறிக்கும்

உதாரணமாக,

(1) 12433 சென்னை - டெல்லி ராஜதானி அதிவிரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 24 - இது Northern Railway மண்டலத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(2) 12621 சென்னை - டெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் அதிவிரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 26 - இது Southern Railway மண்டலத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(3) 12840 சென்னை - ஹவ்ராஹ் அதிவிரைவு விரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 28 - இது South Eastern Railway / South Eastern Central Railway மண்டலத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(4) 12164 சென்னைஎழும்பூர் - மும்பை தாதர் அதிவிரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 21 - இது Central Railway / Western Central Railway மண்டலத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(5) 12007 சென்னை - பெங்களூர் சதாப்தி அதிவிரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 20 - இது சதாப்தி வண்டி என்றும் தெரிவிக்கிறது

(6) 12631 சென்னை - திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 26 - இது Southern Railway மண்டலத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(7) 12693 சென்னை - தூத்துக்குடி முத்து நகர் அதிவிரைவு வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 26 - இது Southern Railway மண்டலத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(8) 16127 சென்னை - குருவாயூர் வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 61 - 1 இது தென்னக ரயில்வே மண்டலம், சென்னை எழும்பூர் கோட்டத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(9) 16723 சென்னை - திருவனந்தபுரம் அனந்தபுரி வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கம்கள் 67 - இது தென்னக ரயில்வே மண்டலம், மதுரை கோட்டத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(10) 16853 சென்னை - டெல்லி ராஜதானி வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 1 இது விரைவு வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கங்கள் 68 - இது தென்னக ரயில்வே மண்டலம், திருச்சி கோட்டத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

(11) 56761 பாசன்ஜர் வண்டியின் எண்ணின் முதல் இலக்கம் 5 இது பாசன்ஜர் வண்டி என்றும், இரண்டாம் / மூன்றாம் இலக்கங்கள் 67 - இது தென்னக ரயில்வே மண்டலம், மதுரை கோட்டத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது

நன்றி:
Indian Railways Fan Club இணையதளம் (www.irfca.org)