Periyar talk about islam…

சாதி மதம் வெறி

Death

ISLAM

05-11-14- தந்தி டிவியில் ஆயுத எழுத்து

My Collections.......: பர்தா என்றால் என்ன?

My Collections.......: பர்தா என்றால் என்ன?: பர்தா என்றால் என்ன? இது மதம் சார்ந்த பதிவல்ல! என் மனம் சார்ந்த பதிவு!!   பொதுவாக, நான் மதம் சார்ந்த பதிவுகள் எழுதுவதில்லை; காரணம் நான் என்...

திருக்குரானில் ஏசுவின் போதனைகளை

ஏசு கிறிஸ்து தன்னை கடவுள் என்று...

Basic Quran Class @ Pudupet

Basic Quran Class started @ Pudupet.

Contact : 9444436633/7299902501

தூக்கம் விற்ற காசுகள்.


Help!


மனைவி அமைவதெல்லாம்!


மனைவி அமைவதெல்லாம்! (முழுவதும் படிக்கவும் )
திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது.
கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன் . இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.எஸ் .ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன்.கேரம் ,செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள் . ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் .
ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..!
விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது.
கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது.
புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ?
இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..!
எந்த புக்கும் படிச்சது இல்லையா ?
ஆமாங்க எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்க புடிக்காது..!
இந்த குமுதம் ,ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா ?
நான் + 2 படிச்சப்போ படிச்ச பாட புத்தகம் தான் நான் கடசியா படிச்சது அதுக்கப்புறம் எந்த புக்கும் படிச்சது இல்ல...!
எதோ ஜோக் சொன்னதுபோல அவள் சொல்லி சிரிக்க நான் வெளிறிபோனேன் ..!
எனக்கு மண்டை காய்ந்துபோனது எந்த ஒரு புத்தகமும் படிகாதவளிடம் போய் பாலகுமாரனை பற்றி பேச முடியுமா..? சேர்த்து வைத்து இருந்த புத்தகங்கள் ...?ஒரு அட்டைப்படத்தில் பால குமரன் என்னை கவலையுடன் பார்ப்பதாக தோன்றியது ..!
கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை பார்வையில் படும்படிதான் வைத்து இருந்தேன்..! அதை பற்றி அவள் கேட்கவேண்டும் நான் பீற்றி கொள்ளவேண்டும் இதுதான் திட்டம் .
ஆனால் ..? எதோ வீட்டில் உள்ள காலண்டரை பார்ப்பது ,வால் கிளாக்கை பார்ப்பதுபோல அந்த பரிசுகளை கோப்பைகளை அவள் கண்டுகொள்ளவே இல்லை.
அப்புறம் வேறு வழி இல்லாமல் நானே சொல்ல ஆரம்பித்தேன் ..!
இந்த கப் எல்லாம் நான் வாங்கினது தெரியுமா ..?
எதுக்கு வாங்குனீங்க..?
இதெல்லாம் நான் கிரிக்கெட் வெளையாடி வாங்கினது
ஒனக்கு கிரிக்கெட் புடிக்குமா ..? கிரிக்கெட் பார்ப்பியா ..?
எங்க வீட்டுல எல்லாரும் கிரிக்கெட் பார்ப்பாங்க எனக்கு மட்டும் கிரிக்கெட் சுத்தமா புடிக்காது ..!
(அதானே எனக்குன்னு இப்படித்தான் வாய் க்கனும்னு இருக்கும்போது எப்படி கிரிக்கெட் புடிக்கும் )
யாரோ பின் மண்டையில் பேட்டால் அடித்தது போல இருந்தது..! நொந்துபோனேன்..!
இந்த பாடகர் - பாடகிகள்ல உனக்கு யார புடிக்கும்..?
ம்ம்... இவங்களத்தான் புடிக்கும்னு சொல்ல முடியாது பொதுவா எல்லா பாட்டும் கேப்பேன்..!
உனக்கு புடிச்ச பாட்டு ஒன்னு சொல்லேன்..!
அட போங்க திடீர்னு இப்படி கேட்டா எப்படி சொல்லுறது ..?
சரி எஸ் .ஜானகி புடிக்குமா ?
யாரு கெழவி போல இருக்குமே அதுவா ?
எஸ் .ஜானகியை கெழவி ன்னு சொன்னதும் எனக்கு செம கோவம் ...!எனக்கு புடிச்ச பாடகி அவரை கிழவின்னு சொன்னதும் என்னால அதை பொறுத்துக்க முடியல. என்ன செய்ய எல்லாம் விதி...!
என்னை நானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவள்மேல் கோபப்பட முடியவில்லை ஆனால்..? அவளுக்கு கோவம் அதிகம் வரும் முன்கோபி என் பாதுகாப்பும் முக்கியமில்லையா எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.
மனைவி விசயத்தில் மிகுந்த ஏமாற்றம் ...!துளியும் எனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை .
ஆணித்தரமாய் எனக்கு தோன்றியது இதுதான்
இவள் எனக்கு ஏற்ற ஜோடிஇல்லை .
கணவன் மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியைபோல என்று சொல்வார்கள் ஒரு மாடு சரியில்லாமல் போனாலும் குடும்ப வண்டி சரியாக ஓடாது என்று. உண்மைதான். நான் இப்படி முடிவு எடுத்தேன் பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்துவிட்டு ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்வது ? எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை..!
பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நகர்ந்தன நாட்கள் சில மாதங்களில் மனைவி கர்பவதியகவே நிலைமை மாற தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது ஆளாளுக்கு அவளை கொண்டாட ஆரம்பித்தோம்.
மாசமா இருக்கும்போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கி கொடுக்கணும் புடிச்சத சமைச்சு போடணும் - இது என் அம்மா
நானும் அவளிடம் கேட்கிறேன்
உனக்கு என்னவெல்லாம் சாப்பிட புடிக்கும் சொல்லு
அதெல்லாம் ஒன்னும் வேணாம்
இல்ல சொல்லு நான் வற்புறுத்தி கேட்கிறேன்
பிடிக்குமென சிலதை சொல்ல
முன் சமயங்களில் என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் வரும்போது இதையெல்லாம் சொல்லி இருக்கிறாள் நானும் சாதாரணமாய் அதையெல்லாம் மறுத்து இருக்கிறேன் ஆனால் அவளுக்கு பிடிக்குமென சொன்னதில்லை.
இதெல்லாம் உனக்கு புடிக்குமா இதுவர சொன்னதே இல்ல ..?
ம்ம்ம் இப்போதானே கேக்குறீங்க.
அவள் சிரித்து கொண்டே சொல்ல எனக்குள் சுளீரென ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.
பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்த கூத்தாட வைத்தது.
நாங்கள் விரும்பிய படியே அழகிய பெண் குழந்தை நார்மல் டெலிவரிதான் .
நான் நினைத்து இருந்தேன் பிரசவம் ஆன பெண்கள் ஒரு வாரம் பத்துநாள் என படுக்கையிலேயே இருப்பார்கள் என ஆனால் இவள் மறுநாளே சாதரணமாக நடமாட ஆரம்பித்தாள் யாராவது பெரியவர்கள் குழந்தையை பார்க்க வந்தால் சொல்ல சொல்ல கேட்காமல் கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து நின்று கொள்வாள் மரியாதையை நிமித்தமாய்.
இவளில் இந்த செய்கை குறித்து உறவினர்கள் புகழ்ச்சியாய் பேச எனக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.
பெண்களின் குணம் எப்படி இருந்தாலும் தாய் ஆன பிறகு எல்லா பெண்களும் ஒரேமாதிரித்தான் இருக்கிறார்கள். கோபம்,ஆத்திரம் இவைகள் எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனால் குழந்தை கவனிப்பில் எப்போதும் பொறுமை மட்டுமே காட்டுகிறார்கள் நள்ளிரவில் குழந்தை அழுதாலும், மலம் கழித்தாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கவனிக்கும் தன்மை இயல்பாகவே வந்து விடுகிறது.
குழந்தையையும் கவனித்துகொண்டு எனக்கு செய்யும் பணிவிடைகளிலும் எந்த குறையும் வைக்கவில்லை .
தாய்மை என்ற விசயத்தை என் தாயிடம் உணர்ந்ததைவிட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது . இப்போது அவள்மேல் ஒரு மரியாதையை ஏற்பட துவங்கியது .
வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்கு புரிந்தது..!
சில வருடங்கள் போக...! இப்போது இரண்டாவது குழந்தை...! முதல் குழந்தை நார்மல் டெலிவரி ஆனால் இரண்டாவது சிசேரியன்.
இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளை பார்க்க செல்கிறேன் தூக்கம் போலவும் இல்லாமல் ,மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் எதோ ஒரு குழாய் இருக்க அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது. அப்போது நினைத்து கொண்டேன் இவளிடம் இனி எதற்கும் கோபப்பட கூடாது என்ன சொன்னாலும் பொறுத்து கொள்ள வேண்டும் என்று ..!
சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று ..! அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான் .
இரண்டு குழந்தைகள், வீட்டு வேலைகள், குழந்தை படிப்பு, பாடம் சொல்லி கொடுத்தல், இதற்க்கு இடையே நான் செய்யும் அலும்புகள் எல்லாவற்றையும் சமர்த்தாக கவனித்துகொள்ளும் அவளிள் அந்த மனைவி ,இல்லத்தரசி என்ற ஸ்தானத்தின் பிரம்மாண்ட விஸ்வ ரூபத்தின் முன் ''நான்'' கொஞ்ச கொஞ்சமாக நலிந்து கொண்டு இருந்தேன். பால குமாரன் ,கிரிக்கேட் எஸ் .ஜானகி எல்லாம் என் கவனிப்பில் இருந்து விலகி செல்ல ..!
ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!
எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்
ஆனால்...! இப்போது எங்களுக்குள்...!
தமிழ் ,ஆங்கிலம் ,வரலாறு ,புவியியல்,இயற்பியல்,தாவரவியல் ,விலங்கியல் வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி போனது ..
# படித்ததில் பிடித்தது #


Source: https://www.facebook.com/photo.php?fbid=896221137070691&set=a.295582603801217.89248.100000484391033&type=1&theater

Animation of INSAT 3D Images

Relations - உறவுகள்

எந்த உறவையும் அலட்சியமாக எண்ண வேண்டாம்....
சிலசமயங்களில் நாம் அற்பமாக நினைக்கும் சில உறவுகள் கூட நமக்காக எதையும் செய்ய தயாராக இருக்கலாம். ...




உறவுகளை இழந்தவர்களுக்கே உறவுகளின் மகத்துவம் புரியும்....
சின்ன விஷயங்களுக்காக அற்பமான காரணங்களுக்காக உறவுகளை முறித்து கொள்ளவேண்டாம்.....

உறவுகளோடு சேர்ந்து வாழ ஏவும் மார்க்கம் இஸ்லாம்...
அந்த மார்க்கத்தில் பிறந்துவிட்டு உறவுகளை முறித்து வாழ்வது நியாயமற்ற செயலாகும் ....

உறவுகளுக்குள் வரும் சிறு சிறு பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் உறவுகளுக்குள் இருக்கும் மனநிறைவை மட்டும் நோட்டமிட்டால் பிரிவுகளுக்கு இடமேயில்லை நம் உறவுக்குள்...

அவர் என்னை மதிக்கவில்லை...இவர் என்னை மதிக்கவில்லை....என்று சொல்வதை விட உறவுக்களுக்குள் மதிக்கதக்க ஒரு உறவை நாம் ஏற்படுத்தி கொள்வதே சிறந்தது....

இறங்கி செல்வதால் யாரும் யாரையும் விட தாழ்ந்தவராக ஆகுவது இல்லை..என்றும் பொறுமையுடையோருடன் அல்லாஹ் இருக்கிறான்....

உறவை துண்டித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என்பது நபிமொழியாகும்....

அவ்வாறு இருக்க ஆயிரம் அமல்களை செய்தபோதிலும் உறவை துண்டித்து வாழ்ந்தால் நம் நிலை என்ன? சிந்திக்க கடமைபட்டுள்ளோம்...

விட்டு கொடுத்து வாழ்வதால் யாரும் கெட்டுபோய்விட போவதில்லை. ...
ஆகையால் உலகில் வாழும் காலம் வரை இருக்கும் உறவுகள் அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து உறவுகளை ஒட்டி வாழ்வோம்... ..

அவரவரின் செயல்களுக்கு அவரவர் இறைவனிடத்தில் பதில் சொல்வார்கள்....நமது கேள்விக்களுக்குண்டான பதில்களை நாம் முதலில் தயார் செய்து கொள்வோம்!
ஒருவர் சுமையை மற்றொருவர் சுமக்கமாட்டார்!

இவ்வுலகில் உறவுகளை பேணி வாழ்ந்து சொர்க்கத்திலும் நம் உறவுகளோடு நீடித்து இருக்க இறைவனை வேண்டுவோம்.இன்ஷாஅல்லாஹ்

Media Terrorism! மீடியா தீவிரவாதம் பற்றி Dr ஜாகிர் நாயக்!

பிஜேபி ராகவனின் முகத்தில் கரியை பூசிய தோழர் சீமான்!

ஏழைகளின் கண்ணீரை துடைப்போம்!

லவ் ஜிஹாத் - Love Jihad


உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 வயது இளம் பெண் ஒருவர் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கும்பல் தன்னை அங்குள்ள மதரஸா ஒன்றிற்குள் இழுத்து சென்று கற்பழித்ததாகவும் அந்த பெண்ணை முஸ்லிமாக மதம் மாற சொல்லி கட்டாயபடுத்தியதாகவும் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இந்த புகார் உத்திரபிரதேசம் மட்டும் இன்றி இந்தியா முழுக்க அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த புகார் தொடர்பாக காவல்துறையின் சீரிய(?) பணியால் கலீம் உள்ளிட்ட 8 நபர்களை காவல்துறை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த புகாரை முன்னிலைபடுத்தி பாஜக வின் எம்.பி. யோகி ஆதித்யானந்த் உள்ளிட்ட காவிகளின் அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர லவ் ஜிஹாத் உச்சத்தை அடைந்துள்ளது என ஊர் முழுக்க பிரச்சாரம் செய்து வந்தனர். அங்கு நடந்த தேர்த்ல் பிரச்சாரங்களிலும் பாஜகவை சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் இதை பெரிதுபடுத்தி பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.10.14) காவல்நிலையம் வந்த அந்த பெண் காவல்துறையிடம் ஓர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
அதாவது, அவர் ஒரு முஸ்லிம் இளைஞரை காதலித்து வந்ததாகவும் அது அப்பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்து அவர்கள் அப்பெண்ணை அடித்து துண்புருத்தி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வற்புறியத்தாகவும் தெரிவித்துள்ளார்.
பெற்றோரின் இந்த வற்புறுத்தலாலேயே தான் மதரஸாவில் வைத்து கற்பழிக்கப்பட்டதாக பொய் புகார் அளித்ததாக உண்மையை கூறி ஆகஸ்ட் மாதம் அளித்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.
இவரது இந்த நடவடிக்கை மூலம் லவ் ஜிஹாத் என்ற பரப்புரையை மேற்கொள்ளும் காவிகளின் முகங்களில் சானியை கரைத்து ஊற்றியது போல் உள்ளது.
இப்படி காவிகளின் திட்டமிட்டு பொய் புகார்கள் மூலம் பல ஆயிரம் முஸ்லிம் வாலிபர்களின் வாழ்க்கையையும் உயிர்களையும் பனையம் வைத்து தங்களின் பிழைப்பை நடத்தி வரும் பாஜக, விஷ்வ இந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா, சிவ சேனா, ஆர்.எஸ்.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளை தடை செய்வதுடன் இது போன்ற புகார்களை உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் தீர விசாரித்து வழக்கின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பிறகு நடவடிக்கை எடுக்க இந்திய அரசு வழி வகை செய்யுமா...??
காவிகளின் பிடியில் இந்திய அரசு இருக்கும் வரையில் இது போன்ற சம்பவங்களை மக்கள் கண்டுகொள்ளாமல் ஒதுக்கி வந்தால் இவர்களின் அரசியல் வாழ்க்கை ஓரங்கட்டப்படும்.
இத்தகவலை மீரட் நகர எஸ்.எஸ்.பி. ஓம்கார் சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்லாமிய சமூகத்தின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் நோக்கில் இப்புகார் அளிக்கப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது.
ஹிந்து முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குழைக்க லவ் ஜிஹாத் என்ற வதந்தியை கிளப்பும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மீடியாக்கள், இறுதியில் உண்மை கசிந்தது.
அநீதிக்கு எதிராய் ஒடுக்க பட்ட ஒரு சமூகத்தின் உரிமை குரல்தான் இந்த உண்மையை உரக்க சொல் !!
இந்த பக்கத்தை ஒரு லைக் போட்டு உங்களையும் இணைந்து கொள்ளுங்கள்

மலாலாவா? ஜேனி- யா ? அமெரிக்காவின் கிழியும்


மலாலாவா? ஜேனி- யா ? அமெரிக்காவின் கிழியும்
முகத்திரை.
மலாலாவின் உண்மைக் கதை.
மலாலா ! இப்படி ஒரு பெயர் இப்போது உலக அரங்கில்
பிரபலமாகி வருகின்றது.
மலாலா உண்மையில் மலாலா இல்லை, அவள்
உண்மையான
பெயர் ஜேனி( JENE).
ஜேனி( மலாலா) உண்மையில் முஸ்லிம் இல்லை, அவள்
ஒரு கிறிஸ்தவ பெண்.
ஜேனி(மலாலா )உண்மையில் பாகிஸ்தானி இல்லை,
அவள்
போலந்து நாட்டு பெண்.
இந்த உண்மைகளை அந்த பெண்ணின் மருத்துவர் மூலம்
"DAWN" என்ற பாகிஸ்தானின் பிரபல
பத்திரிகை வெளிக்கொண்டு
வந்துள்ளது.
தாலிபான்களின்மீது இட்டுகட்டி அவர்களை உலக
மக்களிடம்
கொடுரமானவர்களாக சித்தரித்து அவர்களை அழிக்க
அமெரிக்கா
மற்றும் ஐரோப்பிய நாடுகள் செய்த சதி வேலையே இந்த
மலாலா
நாடகம், மலாலாவும் அவளது பெற்றோர்களும்
கிறிஸ்தவ
மதத்தைசார்ந்த கிறிஸ்தவத்தை பரப்பும்
வேலையை செய்யும்
ஐரோப்பிய போலந்தை சார்ந்தவர்கள், இவர்கள்
பாகிஸ்தானின்
சுவட் பகுதிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ( 3,or
4) அமெரிக்காவால்
அனுப்பி வைக்கப்பட்டனர்.
மலாலாவை சுட்டவன் அமெரிக்க
உளவுபடையை சார்ந்தவன்
அவன் சுட்டது டம்மியான போலி குண்டுகளால்
( படத்தில் உபயோகிப்பது)
நாடகத்தை அரங்கேற்ற அமெரிக்க
உளவுத்துறைக்கு பாகிஸ்தான்
உளவுத்துறையும் உதவியுள்ளனர்.
அறிவுடைய அனைத்து மனிதர்களும்
சிந்தித்து பாருங்கள்
தலையில் சுடப்பட்ட ஒருவர் பிழைப்பது மிக மிக
கடினமே.
ஆனால் இந்த ஜேனிக்கு ( மலாலா) தலையில் சுட்ட
காயத்தின்
அடையாளம் கூட இல்லை. அது எப்படி?
விரிவாக படிக்க பார்க்க -வைகறை வெளிச்சம் ( டிசம்பர்-2013,மாதஇதழ்)

பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப் படம்



அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்த
பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப் படம்
முழுமையாக தற்போது யு டியுபில் பார்க்கலாம் !
பாருங்கள் பரப்புங்கள்!

http://youtu.be/ocr9xT3eUGg -முதல் பாகம்
http://youtu.be/W14ToXnOPik- இரண்டாம பாகம்
http://youtu.be/RwVkLIibYQc- மூன்றாம் பாகம்

மது பானம் பற்றி இஸ்லாம்!!



மது பானம் பற்றி இஸ்லாம்!!
******************************
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
மதுபானத்துடன் தொடர்புள்ள பத்துப்
பேரை சபித்தார்கள். அவர்கள்.
1. மதுவைத் தயாரித்தவர்.
2. அதைத் தயாரிக்கச் சொன்னவர்.
3. அதை அருந்தியவர்
4. அதைச் சுமந்து எடுத்துவந்தவர்.
5. அதைச் சுமந்து வரச் சொன்னவர்.
6. அதைப் பரிமாறியவர்.
7. அதை விற்றவர்.
8. அதில் கிடைக்கும் வருமானத்தை உண்டவர்.
9. அதை விலைகொடுத்து வாங்கியவர்.
10. அது யாருக்காக வாங்கப்பட்டதோ அவர்.
அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி).
நூல்: ஜாமிஉத் திர்மிதீ:1216.

லோன் வாங்கி ப்ளாட் வாங்கப் போறீங்களா?



வாங்கறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க!!
மெட்ரோபாலிட்டன் சிட்டியில் வீடு/ப்ளாட் வாங்கறதுங்கிறது பல பேரோட கனவு. ஆனா இன்னைக்கு சாதாரணமானவங்க சென்னை போன்ற நகரங்கள்ல வீடு, ப்ளாட் வாங்கக் கூடிய நிலையில விலைகள் இல்லாம தாறுமாறா போயிருச்சு. பெருநகரங்கள்ல இருக்கிற புறநகர்ப் பகுதிகள்ல 10 வருஷத் துக்கு முன்னாடி அடுக்குமாடி குடியிருப்புகள் ரூபாய் 900 முதல் 1200 வரை ஒரு சதுர அடி விற்பனையானது. இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு 1000 சதுர அடி ப்ளாட்டோட விலை 10 இலட்சத்துலேந்து 12 இலட்சத்துக் குள்ள வாங்க முடிஞ்சது. அன்னைக்கு வங்கி வட்டியும் 7% லேந்து 8% தான். இன்னைக்கு 10% லேந்து 11%வரை போயிருச்சு. அந்த காலகட்டத்துல வீடு, ப்ளாட் வாங்கின அவங்கெல்லாம் பாக்கியவான்கள் என்று தான் சொல்லவேண்டும்.
ஆனா இப்போ அதே சதுரஅடி கொண்ட புதிய ப்ளாட் வாங்க னும்னா குறைஞ்சது 38 லட்சத்துலேந்து 60 இலட்சம் வரை விலை கொடுத்து வாங்கனும். இந்தவிலை எடத்துக்கு எடம் வித்தியாசப்படுது. அப்போ வங்கிகள்ல 85%வரை லோன் கொடுத்தாங்க. ஆனா இப்போ 75% to 80% வரை தான் தர்றாங்க. அதுமட்டுமில்ல! இப்போ மறைமுகமா அதிகப்படியான வரிகளையும் மற்ற செலவுகளையும் வாங்கறவங்க மீது பில்டர்கள் சுமத்தறாங்க. அரசாங்கமும் இப்போது ஒரு ப்ளாட் வாங்கும் போது போடுகின்ற சேல்அக்ரிமென்ட்டை பத்திரப்பதிவு அலுவலகத்துல பதிவு பண்ணச் சொல்லுது. இதற்கு முத்திரைத்தாள் கட்டணமா சொத்தோட மதிப்பீட்டில் (land UDS தவிர்த்து) பில்டிங் வேல்யூவிற்கு 2% கட்டணமாக செலுத்தவேண்டும்.
ஒரு ப்ளாட் வாங்கும்போது Land UDS அந்த ப்ளாட்டின் பிரிபடாத பாகம் எவ்வளவு தரப்படுகின்றதோ அதற்கு அந்த இடத்தின் வழிகாட்டி மதிப்பீடு (guideline value) என்னவோ அதற்கு 8% முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தவேண்டும். இதோட மட்டுமில்ல! அந்த ப்ளாட்டின் மொத்த மதிப்பீட்டிற்கு 2.9% சர்வீஸ் டாக்ஸ் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும்.
இதுபோக MSB (Multy storey building) என்று சொல்லக் கூடிய பல அடுக்குமாடிக் கட்டிடங்களில் ப்ளாட் வாங்கினால் அங்கே Corpus fund ஒரு சதுர அடிக்கு இவ்வளவு என்று செலுத்தவேண்டும். இது ஒவ்வொரு பில்டரும் சதுர அடிக்கு 50 முதல் 500 வரை வசூல் செய்து அதனை வங்கியில் டெபாசிட் செய்கின்றார்கள். இது எதற்கு என்றால் இந்த டெபாசிட்டிலிருந்து கிடைக்கும் தொகையானது பின்னாளில் பில்டிங்கில் பழுது, வெள்ளையடித்தல், ஆழ்துளை கிணறுகளை சரிபார்த்தல்போன்றவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
இதுபோக சில இடங்களில் பாதாள சாக்கடை இல்லாமல் இருக்கும். அங்கே STP அதாவது Sewage treatment plant அமைத்து கழிவுநீரை சுத்திகரிக்க இயந்திரங்கள் அமைத்து அதனை பராமரிக்க வேண்டும். இதற்கு STP Charges என்று தனியாக கட்டணத்தை ப்ளாட் வாங்குவோர்களிடம் வசூலிக்கின்றனர்.
மும்முனை மின் இணைப்பு (3Phase) முன்பெல்லாம் 10 ஆயிரம் கொடுத்தால் வழங்கப்பட்டு வந்தது. அது இப்போது 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை போய்விட்டது. இதனையும் ப்ளாட் வாங்குபவர்கள் தான் செலுத்த வேண்டும். சில ப்ளாட்டுகளுக்கு டிரான்பார்மர் பொருத்தினால் தான் மின்வாரியம் இணைப்பே தருகின்றது. இந்த டிரான்ஸ்பார்மர்களின் விலையும் வாங்குவோர் தலையில் பில்டர்களால் சுமத்தப்படுகின்றது.
இது போக MSB யில் ப்ளாட் வாங்கி குடியேறிய பின்னர் மெயின்ட்டனன்ஸ் சார்ஜஸ் என்று ஒன்றை செலுத்த வேண்டும். இது மாதம்தோறும் சதுர அடிக்கு ரூபாய் 2 முதல் 5 வரை செல்கின்றது.
வங்கியில் கிடைக்கும் 80 சதவீத லோன் போக மீதமுள்ள 20 சதவீதம் மற்றும் இதர செலவினங்கள் எல்லாம் ப்ளாட் வாங்குபவர் முன் பணமாக செலுத்த வேண்டும். உதாரணமாக 45 இலட்சம் மதிப்புள்ள ஒரு ப்ளாட் வாங்கவேண்டும் என்றால் வங்கிக் கடன் 80 சதவீதம் போக (36 இலட்சம்) 9 இலட்சம் மற்றும் சர்வீஸ் டாக்ஸ், பத்திரப் பதிவு செலவு, அக்ரிமென்ட் செலவுகள் இவை எல்லாம் சேர்ந்து 12 இலட்சம் முதல் 15 இலட்சம் வரை வந்துவிடும்.
36 இலட்சத்திற்கு 20 வருடங்களுக்கு மாதத் தவணையாக ரூபாய் 35,942 செலுத்த வேண்டும் (வட்டி 10.5 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது) for 15 years chart and repayment schedule ஐ பார்க்கவும். 20 வருடம் முடிந்த பின்னர் அவர் அந்த வீட்டுக் கடனுக்கு வட்டியுடன் செலுத்திய தொகையானது 86,26,002 ரூபாய்கள்.
சரி இவ்வளவு கஷ்டங்களையும் ஏத்துகிட்டு ஒரு பிளாட்டை எப்படியாச்சும் வாங்கிட்டு ஒரு 20 வருஷம் மாதத்தவணை செலுத்தினால் செலுத்திய தொகையை விட வாங்கிய சொத்துக்கு கூடுதல் மதிப்பு இருக்கின்றதா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை என்றே கூற வேண்டும். அதாவது 20 வருட தவணையாக 37 இலட்சம் ரூபாய்க்கு வட்டியுடன் செலுத்தப்படும் தொகையானது ரூபாய் 86, 26,002 ரூபாய். வட்டி மட்டும் 50,26,002 ரூபாய். 20 வருஷம் கழிச்சு பில்டிங்வேல்யூ கிடையாது. UDS ன்அன்றைய மதிப்பு என்னவோ அதுதான் கணக்கில் கொள்ளப்படும்.
சென்னை போன்ற பெருநகரங்களில் இப்போது நிலங்களின் வீடுகளின் ப்ளாட்டுகளில் விலையேற்றம் என்பது தற்போது ஒரு சீரான நிலையில் உள்ளது. பத்து பதினைந்து வருடங் களுக்கு முன்னர் முதலீடு செய்யப்பட்ட பணமானது இரண்டு அல்லது மூன்று வருடங்களில் இரட்டிப்பானது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது.
கடந்த 3 வருடங்களாக பெரிய அளவில் appreciation இல்லை. இந்த நிலை இனி தொடர்ந்து நீடிக்கத்தான் செய்யும். காரணம் சென்னையில் மட்டும் 86,000 பிளாட்டுகள் கட்டி முடிக்கப்பட்டு விலை போகாமல் உள்ளது. இதற்குக் காரணம் saturation மற்றும் பன்மடங்கு கூடுதல் விலை. ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பது பற்றிய ஒரு பதிவினை ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்னர் செய்திருந்தேன். அந்தப் பதிவின் லிங்க் தருகின்றேன். விருப்பமுள்ளவர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.https://www.facebook.com/photo.php?fbid=478271705596607&set=a.125033087587139.27486.100002413464842&type=1&theater (இந்தப் பதிவினை 2448 பேர் ஷேர் செய்தார்கள்)
இப்போதான் நான் விஷயத்திற்கே வரப் போறேன்!
இந்த மாதத் தவணைன்னு சொன்னேனே அதாவது 36 இலட்சம் ரூபாய்க்கு மாதம் 35,942 ரூபாய். (rounded 36000/-) இதுல வீட்டு வாடகைக்குன்னு ஒரு 10 ஆயிரத்தை ஒதுக்கிட்டு மீதமுள்ள 26 ஆயிரம் ரூபாயை ஒரு recurring deposit ஆரம்பிச்சு ஒரு 5 வருஷம் செலுத்தினா வட்டியோட கிடைக்கிற மொத்த தொகை எவ்வளவு தெரியுமா? 19,26,464 ரூபாய் (வட்டி 8% என்றும் compound interes half yearly என்றும் கணக்கிடப்பட்டுள்ளது)
இது போக ப்ளாட் வாங்கறபோது ஆரம்பத்துல 20 சதவீதம் மற்றும் இதரசெலவுகள்னு ஒரு 12 இலட்சம் டு 15 இலட்சம்னு சொன்னேனே! அதுல ஒரு 12 இலட்சத்தை fixed deposit ல ஒரு 20 வருஷத்துக்கு போட்டா கிடைக்கிற தொகை எவ்வளவு தெரியுமா? 57,61,224 ரூபாய். (Rate of interest 8% calculated as Half yearly compound interest.)
Recurring deposit ல போட்டு 5 வருஷம் கழிச்சு முதிர்வாகிற தொகையான 19,26,464 ரூபாய்ல ஒரு 15 இலட்சத்தை ஒரு 15 வருஷத்துக்கு fixed deposit ல போட்டா கிடைக்கிற தொகை எவ்வளவு தெரியுமா 48,65,096 ரூபாய். இது இப்படியே இருக்கட்டும்.
இப்போ 6 ஆவது வருஷத்துக்கு வருவோம். அதே 25 ஆயிரம் ரூபாயை மறுபடியும் ஒரு 5 வருஷத்துக்கு Recurring deposit ல போட்டு கிட்டு வந்தா கிடைக்கிற தொகை 19,26,464 ரூபாய். இந்த ரூபாய்ல ஒரு 15 இலட்சத்தை எடுத்து மறுபடியும் ஒரு 10 வருஷத்துக்கு fixed deposit ல போட்டா கிடைக்கிற தொகையானது 32,86,684 ரூபாய்.
இப்போ தவணைத் தொகை 10 வருஷம் முடிஞ்சு போச்சு. இன்னும் 10 வருஷம் இருக்கு. அதையும் முறையா recurring deposit லயும் 5 வருஷத்துக்கும், அப்புறம் முதிர்வடைஞ்ச பின்னர் 5 years fixed deposit லயும் போட்டா கிடைக்கிற தொகையான 19,26,694 + 22,20,366= 41,47,060 (கடைசி 60 மாத தவணை மற்றும் 20 ம் ஆண்டில் 15 ம் வருடம் fixed டெபாசிட் செய்த 5 வருடத் தவணைத்தொகை).
இப்போ மொத்தமா fixed deposit ல கிடைச்ச தொகை எவ்வளவு தெரியுமா? ரூபாய் 41,47,060/-
1. 12 இலட்சத்துக்கு 20 வருஷத்துக்கு கிடைச்ச தொகை ரூபாய் 57,61,224
2. Rd மூலம் fixed deposit மூலம் 15 வருஷத்துக்கு கிடைச்ச மொத்த தொகை ரூபாய் 48,65,096
3. Rd மூலம் fixed deposit மூலம் 10 வருஷத்துக்கு கிடைச்ச மொத்த தொகை ரூபாய் 32,86,684
4. இறுதியா 15 ம் வருஷத்துக்கு அப்புறமா 20 வருஷம் முடியறப்போ கிடைக்கிற தொகை RD and Fixed deposit amount is rs. 41,47,060/-
5. மொத்தமா கூட்டிப் பார்க்கும் போது 57,61,224+ 48,65,096+ 32,86,684 + 41,47,060= 1,80,60,064.
அதாவது ஒரு கோடியே 80 இலட்சத்து 60 ஆயிரத்து 64 ரூபாய்..
6. சரி கணக்கெல்லாம் கரெக்ட்டா போட்டுட்டீங்க!! இந்த வருமானத்துக்கெல்லாம வரி யாரு கட்றதுன்னு ஒரு கேள்வி எல்லாருக்குமே எழத்தான் செய்யும். அதுக்குத் தான் ஒவ்வொரு RD யும் முதிர்வடையும் போது 4,26,464 ரூபாயை விட்டுட்டு 15 இலட்சத்தை மட்டும் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
7. TDS 10% என்று கணக்கில் கொண்டால் கூட அவ்வளவு தொகை வர வாய்ப்பில்லை. இன்னொன்று., இந்த டெபாசிட் செய்பவர் இன்கம்டாக்ஸ் assessee யாக இருக்க வேண்டும். RD முதிர்ந்த பின்னர் வரி பிடித்தம் செய்வதினால் fixed deposit ற்கு TDS கிடையாது. ஆனால்டெபாசிட்தாரர் கண்டிப்பாக தன்னு டைய பான்கார்டின் நகலை வங்கிக்குகொடுக்க வேண்டும்.
இன்னும் சொல்லப் போனால் இந்த RDக்கும் Form 15G or 15H பூர்த்தி செய்து கொடுத்தால் TDS பிடித்தம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. இல்லையென்றால் முதிர்வடைந்த தொகைக்கு 20% TDS பிடித்தம் செய்து விடுவார்கள்.
இப்போ சொல்லுங்க! கடன் வாங்கி வீடு வாங்கனா கிடைக்கிற பெனிபிட் பெட்டரா? இல்ல வங்கியில டெபாசிட் பண்றது பெட்டரா??
குறிப்பு: நான் வருமான வரி தணிக்கையாளன் அல்ல. இருந்தாலும் வங்கி அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறை சார்ந்த நண்பர்கள் சிலரின் ஆலோசனைகளைப் பெற்று இந்த விவரங்களை அளித்துள்ளேன். இதில் தவறுகள் இருக்க வாய்ப்பிருக்கலாம். எங்கே தவறோ அதனை சம்மந்தப்பட்ட துறையைச் சார்ந்தவர்கள் திருத்தம் செய்தால் இந்தப் பதிவின் நோக்கம் முற்றுப் பெறும்.
வருமான வரி சம்மந்தமான பயனுள்ள தகவல்கள் தணிக்கை யாளர்கள் மற்றும் வருமான அலுவலத்தில் பணிபுரியும் அதிகாரிகள் இந்த பதிவின் பின்னூட்டமாக முன்வைக்கலாம்.. அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

சூரா கஹஃப்புடைய முதல் 10 வசனங்களை ஏன் படிக்க வேண்டும்

1) நபி (ஸல்) நம்மை சூரா கஹஃப்பை படிக்கச் சொன்னதால் படிக்கிறோம்
அவர் எதைச் செய்தாரோ அதைத் தான் நம்மைச் செய்யச் சொன்னார்.  அதனால் அதை ஒரு சுன்னத் என்பதாலும் பின்பற்றுகிறோம் (நபி (சல்) அவர்கள் மட்டுமல்ல, அவருடைய பல தோழர்கள், அவர்களைப் பிந்தொடர்ந்தவர்களும் கூட இதைப் பின்பற்றினார்கள்).
இதைத் தவிர வேறு எந்த சூராவையோ வசனங்களையோ மனப்பாடம் செய்யச் சொல்லவில்லை.
“சூரத்துல் கஹஃப்புடைய முதல் பத்து வசனங்களை மனனம் செய்பவர், தஜ்ஜாலுடைய குழப்பத்திலிருந்து பாதுகாக்கப் படுவார்.” [முஸ்லிம்]
சூரா ஃபாத்திஹா போன்ற சூராக்கள் தொழுகைக்கு அவசியமாகின்றன.  ஆனால் சூரா கஹஃப்புடைய முக்கியத்துவம் சிறப்பாக பேசப்படுகிறது. ஆறாவது வசனத்தில் [(நபியே!) இந்த (வேதஅறிவிப்பில்அவர்கள்நம்பிக்கைகொள்ளாவிட்டால்அவர்களுக்காகவியாகூலப்பட்டுநீர்உம்மையேஅழித்துக்கொள்வீர்கள்போலும்!] கூறப்பட்டிருப்பது போல், நபி (ஸல்) நம்மைப் பற்றி அதிகமாக கவலைப்பட்டதால், நாம் குறைந்த பட்சம் அவர்களுடைய அறிவுரையையாவது பின்பற்ற கடமைப்பட்டிருக்கிறோம்.
2) மனப் பாடம் செய்வது மிகவும் முக்கியம்
நம்மில் பெரும்பாலோர் மனப்பாடம் செய்வதை ஒரு கூடுதல் வேலையாக நினைக்கிறோம்.  ஆனால், பின்வரும் ஹதீஸிலிருந்து, குர்’ஆனுடைய வசனங்கள் இல்லாத போது நம்முடைய ஆன்மாக்கள் எத்தனை வெறுமையாக இருக்கும் என்பது தெரிகிறது.
குர்’ஆனுடைய எந்த பகுதியையும் மனனம் செய்யாதவர் ஒரு பாழடைந்த வீட்டிற்கு சமமாவார்.  [திர்மிதி]
நீங்கள் கேட்கலாம், இந்த 21ஆம் நூற்றாண்டில் அல்லாஹ்வினால் பாதுகாக்கப்பட்டு, மில்லியன் கணக்கான பிரதிகளும், விரல் நுனியில், கை பேசிகளிலும், இன்னும் பல கையடக்க மின் சாதனங்களிலும் இருக்க, நாம் ஏன் அதை மனப்பாடம் செய்ய வேண்டும், என்று.
ஏனென்றால், ஒரு வசனம் மனதில் பதிய வேண்டும் என்றால், அதை மனப்பாடம் செய்தாக வேண்டும்.  மனனம் செய்வதால் தரமான, nநம் உடல் சார்ந்த வித்தியாசனமான ஒரு ஞானத்தைப் பெறுகிறோம்.  குர்’ஆன் வசனங்களை   உங்களுக்குள் வாங்கிக் கொள்வதால், வேறு எந்த சாதனத்தின் உதவியும் கொண்டு படிப்பதை விட ஆழமான  நிலையில் அவற்றை அறிவீர்கள். உங்கள் வாழ்வில் தற்செயலாக ஏற்படும் சந்தர்ப்பங்களில், மனதில் பதிந்துள்ள வசனங்களை நினைவில் கொண்டு வந்து நடைமுறை வாழ்வில் பயன் படுத்துவது எளிதாக இருக்கும். குர்’ஆனை எடுக்கவோ, செல் பேசியைப் பார்க்கவோ அவசியமிருக்காது.
குர்’ஆன் தன்னில் அடக்கியுள்ள விவேகத்தினால், அதை உங்கள் மனதில் பதிய வைப்பது உங்களையும் ஒரு விவேகியாக ஆக்கும்.
3) நீங்கள் குர்’ஆனை மனப்பாடம் செய்வதால் உங்களுடைய அந்தஸ்து உயரும்.
நாம் எந்த அளவு மனப்பாடம் செய்கிறோமோ அதற்கேற்றாற்போல் நம் அந்தஸ்து உயரும்.
ஓதியவாறு, உயருங்கள், ஒவ்வொரு வசனத்துடனும் உங்கள் வெகுமதி அதிகரிக்கும்[திர்மிதி]
மனப்பாடம் செய்வது என்பது உங்கள் மனதில் வசனங்களை சேமித்து வைப்பது மட்டுமல்ல, அதை ஆழமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும் – எந்த அளவுக்கென்றால், குர்’ஆனை உங்களிடம் பார்க்க முடிய வேண்டும்.  மக்கள், உங்களைப் பார்க்கும்போதே நீங்கள் குர்’ஆன் முழுவதையும் அல்லது அதன் சில பகுதிகளை மனப்பாடம் செய்துள்ளீர்கள் என்று கூறும்படியாக இருக்க வேண்டும்.
- See more at: http://www.understandqurantamil.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/

ஆயத்துல் குர்ஸி தமிழில்

Gaza Aid Appeal: BANNED by the BBC and SKY

வேதம் கூறும் முஹம்மத் (ஸல்) அவர்கள்

முஸ்லிம் தமிழாக்கம் - ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம்

முஸ்லிம் தமிழாக்கம் - ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் - ஆன்லைன் பி.ஜே

புஹாரி தமிழாக்கம் - புஹாரி தமிழாக்கம்

புஹாரி தமிழாக்கம் - புஹாரி தமிழாக்கம் - ஆன்லைன் பி.ஜே

குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சரித்திரச் சான்று

முகவைகான் புதுவலசை: குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சரித்திரச் சான்று: குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சரித்திரச் சான்று  திருக்குர் ஆன் இறைவேதம் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இதை நம்முடைய தமிழாக்கத்தில் தெள...

ஆண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய 19 உணவுகள்!!!

அதிரை செய்திகள்: ஆண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய 19 உணவுகள்!!!: ஒரு சமூகத்தின் முக்கியமான அங்கமாக இருந்து குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ளும் ஆண்களின் ஆரோக்கியம் இன்றியமையாதது . ஆண்களும் பெண்களும...

அதிரை செய்திகள்: அல்குர்ஆன் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா?

அதிரை செய்திகள்: அல்குர்ஆன் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா?:   அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு அல்குர்ஆன் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா? திருக்குர்ஆன் மனித நேயத்தைத்தான் போத...

Quran

Adhan - Call for Prayer

Sura Ar-Rahman




Must See.If Islam is the best religion,Why Muslims are the worst?

If Islam is the best religion,Why Muslims are the worst?Dr Zakir Naik 

Post by The Deen Show.

Palastine!!!!!!

Quran Recitation,

இன்றைய இஸ்லாமிய சமூகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

சற்று சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே, தோழிகளே.!

பலரை இஸ்லாத்தின் பக்கம் இணைத்த காணொளி.




Post by Srilankan Muslim Nation.

பலரை இஸ்லாத்தின் பக்கம் இணைத்த காணொளி. 

We spend so much time living life, yet not enough time thinking about what are we doing alive. Ponder over the purpose of life, our existence, who is responsible for our creation and what happens when we leave. If you don't want to think about where you came from, at least think about where you are going to go when it's all over

Aluthgama Attack - உண்மை நிலவரம்



Chennai Poratam - Srilankan Embassy