Relations - உறவுகள்

எந்த உறவையும் அலட்சியமாக எண்ண வேண்டாம்....
சிலசமயங்களில் நாம் அற்பமாக நினைக்கும் சில உறவுகள் கூட நமக்காக எதையும் செய்ய தயாராக இருக்கலாம். ...




உறவுகளை இழந்தவர்களுக்கே உறவுகளின் மகத்துவம் புரியும்....
சின்ன விஷயங்களுக்காக அற்பமான காரணங்களுக்காக உறவுகளை முறித்து கொள்ளவேண்டாம்.....

உறவுகளோடு சேர்ந்து வாழ ஏவும் மார்க்கம் இஸ்லாம்...
அந்த மார்க்கத்தில் பிறந்துவிட்டு உறவுகளை முறித்து வாழ்வது நியாயமற்ற செயலாகும் ....

உறவுகளுக்குள் வரும் சிறு சிறு பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் உறவுகளுக்குள் இருக்கும் மனநிறைவை மட்டும் நோட்டமிட்டால் பிரிவுகளுக்கு இடமேயில்லை நம் உறவுக்குள்...

அவர் என்னை மதிக்கவில்லை...இவர் என்னை மதிக்கவில்லை....என்று சொல்வதை விட உறவுக்களுக்குள் மதிக்கதக்க ஒரு உறவை நாம் ஏற்படுத்தி கொள்வதே சிறந்தது....

இறங்கி செல்வதால் யாரும் யாரையும் விட தாழ்ந்தவராக ஆகுவது இல்லை..என்றும் பொறுமையுடையோருடன் அல்லாஹ் இருக்கிறான்....

உறவை துண்டித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என்பது நபிமொழியாகும்....

அவ்வாறு இருக்க ஆயிரம் அமல்களை செய்தபோதிலும் உறவை துண்டித்து வாழ்ந்தால் நம் நிலை என்ன? சிந்திக்க கடமைபட்டுள்ளோம்...

விட்டு கொடுத்து வாழ்வதால் யாரும் கெட்டுபோய்விட போவதில்லை. ...
ஆகையால் உலகில் வாழும் காலம் வரை இருக்கும் உறவுகள் அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து உறவுகளை ஒட்டி வாழ்வோம்... ..

அவரவரின் செயல்களுக்கு அவரவர் இறைவனிடத்தில் பதில் சொல்வார்கள்....நமது கேள்விக்களுக்குண்டான பதில்களை நாம் முதலில் தயார் செய்து கொள்வோம்!
ஒருவர் சுமையை மற்றொருவர் சுமக்கமாட்டார்!

இவ்வுலகில் உறவுகளை பேணி வாழ்ந்து சொர்க்கத்திலும் நம் உறவுகளோடு நீடித்து இருக்க இறைவனை வேண்டுவோம்.இன்ஷாஅல்லாஹ்

No comments:

Post a Comment