News


கடந்த 2012 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் திருச்சியை சேர்ந்த தமீம் அன்சாரி என்ற வெங்காய வியாபாரி இலங்கைக்கு வியாபார நிமித்தமாக சென்று திரும்பிய போது விமான நிலையத்தில் தமிழக கியூ பிரிவுப் போலீசார் பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கொடுக்க முயன்றனர் என்ற போர்வையில் கைது செய்யப்பட்டார்..கைது செய்யப்பட்ட நபர் முஸ்லிம் என்றவுடன் வழக்கம் போல நமது ஊடக எலிகள் வழக்கமான பொய் செய்திகளுடன் பல நாட்களுக்கு இந்திய ராணுவ ரகசியத்தை விற்க முயன்ற முஸ்லிம் தீவிரவாதி , தமிழகத்தில் முக்கிய நகாரங்களை தாக்க திட்டம் , பாகிஸ்தான் தீவிரவாதிகள் தமிழகம் ஊடுருவும் முயற்சி கண்டுபிடிப்பு , கம்யுனிஸ்ட் போர்வையில் தனது தீவிரவாத நடவடிக்கையை அரங்கேற்றி வந்தவர் என பல புரளிகளுடன் பல நாட்களுக்கு செய்திகள் பஞ்சமின்றி முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டது.இந்திய அளவிலும் பொய் பிரட்சாரங்கள் கொண்டு செல்லப்பட்டன...ஆனால் முடிவில் நீதி மன்றம் இது பொய்யான தகவல் என்றும் குற்றம் சாட்டப்பட்ட அன்சாரி நிரபராதி என்றும் விடுதலை செய்தது...வழக்கம் போல இந்த உண்மையை எந்த ஒரு ஊடகமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!!!நன்றி- Ahamed Kabir

No comments:

Post a Comment