Showing posts with label கறி மசாலாத்தூள். Show all posts
Showing posts with label கறி மசாலாத்தூள். Show all posts

Kayalpatnam - கறி மசாலாத்தூள்


தேவையான பொருட்கள்:
சிகப்பு வத்தல் - 1 கிலோ
மல்லி - 750 கிராம்
மஞ்சள் - 200 கிராம்
சீரகம் - 100 கிராம்
பெருஞ்சீரகம் - 50 கிராம்
இவற்றை நன்றாக காயவைத்து தூசி எதுவும் இல்லாமல் சுத்தம் செய்து இதனை அரவை மிசினில் கொடுத்து பட்டுபோல் தூளாக அரைத்துக் கொள்ளவும். காரம் அதிகம் வேண்டுமெனில் மல்லியை குறைத்துக் கொள்ளவும். காரம் குறைவாக வேண்டுமெனில் மல்லியை அதிகப்படுத்திக் கொள்ளவும்.
காயல்பட்டணம் கறி மசாலா தூள் மிகவும் மணமானது, சுவையானது. எல்லா வகையான கார உணவுகளுக்கும் இந்த மசாலைவை தான் நாங்கள் பயன்படுத்துவோம். மற்ற ஊர்களில் உள்ளது போல் மீனுக்கு என்று தனியாக, இறைச்சிக்கு என்று தனியாக மசாலா தூள் நாங்கள் பயன்படுத்துவது இல்லை.
என்றும் நட்புடன் உங்கள்
ஃபாயிஷாகாதர்
காயல்பட்டிணம்

Thanks Source:http://kpmsamayal.blogspot.in/2014/02/blog-post_9035.html