Showing posts with label Our beloved Prophet insulted our beloved Prophet. Show all posts
Showing posts with label Our beloved Prophet insulted our beloved Prophet. Show all posts

அண்ணல் நபியை இகழ்ந்த நாவுகளே அண்ணல் நபியை புகழ்ந்த அதிசயம்!


ஹோலன்ட் நாடாளமன்றத்தின்செயல் திறன் நிறைந்த உறுப்பினர்களில் ஒருவர் தான் அர்னோல்ட் இவர் 47 ஆண்டுகளாக ஹோலன்ட் நாடாளமன்றத்தின் உறுப்பினராக செயலாற்றி வருகிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் நாயகத்தையும், இஸ்லாத்தையும் கடுமையாக விமர்ச்சித்து திரைபடம் தயாரித்ததும், பிறகு மனம் திருந்தி இஸ்லாத்தை ஏற்று கொண்டதும் மாநபியின் பள்ளியில் அமர்ந்து கதறி அழுததும் அனைவரும் அறிந்ததே.

இறைதுதர்களின் கண்ணியத்தை காப்போம் என்ற தலைப்பில் அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக மாநாட்டிர்கு சிறப்பு அழைப்பாளராக சகோ அர்னோல்ட் வருகை தந்திருந்தார் மாநபியை ஒரு காலத்தில் இகழ்ந்தவர் அதே மாநபிக்கு புகழ் மாலை சூட்டுவதை கண்டு பார்வையாளர்கள் பரவசம் அடைந்தனர். மாநபியை இகழ்ந்த உதடுகளில் இருந்தே மாநபியின் புகழ் பாடும் வார்த்தைகள் புறப்பட்டு வந்தது உண்மையிலேயே பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

அந்த மாநாட்டு நிகழ்வின் முதல் அமர்வின் இறுதியில் மக்கா மதினா பள்ளிகளின் நிர்வாககுழு தலைவராக உள்ள மார்க்க அறிஞ்ஞரும், சிறந்த காரியுமான அப்துரஹ்மான் சுதைஸ் அவர்கள் தான் அணிந்திருந்த மேலங்கியை களட்டி சகோ அர்னோல்ட் அவர்களுக்கு அணிவித்து அவரை கவுரவித்தார். அந்த அழகான காட்சியை தான் படத்தில் காண்கின்றீர்கள்.

நன்றி.
முகநூல் நண்பர்கள்.
&
http://news.kayaltimes.com/showNews.aspx?tNewsId=4493