இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள்



இது மிக நீளமான , மிகவும் பயனுள்ள பதிவு


அனைவரும் அலோபதி மயக்கத்தில் முழ்கி இருக்கும் இந்த நாட்டில், நம் மரபு மருத்துவத்தை தேடி வந்த உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இன்று நாம் அனைவரும் கூடியிருப்பது சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரிழிவு பிரச்சனையை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவே.

முதலில் நம் உடல் எதனால் உருவானது என்று பார்போம்.

நமது உடல் பல லட்சம் கோடிக்கனக்கான செல்களால் ஆனது. ஒவ்வொறு செல்களுக்கும் அறிவு இருக்கிறது. இதன் முக்கிய வேலை நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உட்கிரகித்து, கழிவுகளை  வெளியேற்றவது. உட்கிரகித்தல், வெளியேற்றுதல் இதன் முக்கிய வேலை.
உதாரணத்திற்கு ஒரு மண் பொம்மையை காட்டி, தலையை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால், தலை என்பீர்கள். கால்களை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால், கால் என்பீர்கள். இந்த இரண்டு பகுதியையும் கையால் நசுக்கி பொடித்தால் அங்கு என்ன இருக்கும் ?...... எண்ணில் அடங்கா சிறு, சிறு மண் துகள்கள் மட்டுமே இருக்கும் அல்லவா.

இது போல் தான் நம் உடலும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் ஆனது.

இப்பொழுது உடல் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்.
பொதுவாக ஒரு பொருள் இயங்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ?..... ம் சொல்லுங்க. ஏதாவது ஒரு எரிபொருள் வேண்டும் அல்லவா.

உதாரணத்திற்கு வாகனங்கள் இயங்க வேண்டும் என்றால், பெட்ரோல் என்கிற எரிப்பொருள் வேண்டும். மின் சாதனம் இயங்க வேண்டும் என்றால் ?... மின்சாரம் வேண்டும்.

இது போல் நமது உடல் இயங்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ? நமது உடலுக்கு எது எரிபொருள் ? உணவு வேண்டும்ங்க. சரி அந்த உணவு செரிமானத்தின் கடைசியில் என்ன வாக மாறுகிறது ? நாம் உண்ணும் மாவுச்சத்து அனைத்தும் சர்க்கரையாக மாறுகிறது. சர்க்கரை என்பது நாம் பயன்படுத்தும் இனிப்பல்ல இது ஒரு சத்துப்பொருள்.

நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் இந்த சர்க்கரை எனும் சத்துப்பொருள் செல்கள் உட்கிரகித்து, எரித்து வெப்ப சக்தி வழங்குகிறது.

இந்த வெப்ப சக்தியால் தான் நாம் இயங்குகிறோம். 

இப்ப சொல்லுங்க நாம் இயங்குவதற்கு என்ன வேண்டும் ?...... சர்க்கரை எனும் சத்துப்பொருள் வேணுமுங்க.  சரியா சொன்னிங்க.

ஒரு பெரியவர் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் உடலை தொட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும் ?... உடல் சூடாக இருக்கும். அடுத்தநாள் இயற்கை எயதி விட்டார், இப்பொழுது உடலை தொட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும்?... உடல் ஐஸ் போல் இருக்கும்.

உயிரோடு இருக்கும் போது உடலில் என்ன இருந்தது ?... வெப்பம் இருந்தது. உயிர் இல்லாத போது உடலில் என்ன இல்லை ?... வெப்பம் இல்லை.

இப்பொழுது சொல்லுங்க உயிரோடு இருக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ?.... வெப்பம் வேணுமுங்கோ. வெப்பம் சக்தி எப்படி நமக்கு கிடைக்கிறது ?... உணவில் உள்ள சர்க்கரை (மாவுச்சத்து) செல்களால் எரிக்கப்பட்டு வெப்ப சத்தி கிடைக்குதுங்க.

இப்ப சொல்லுங்க, நாம உயிரோட இருக்கனும் நா என்ன வேண்டும் ?... சர்க்கரை வேணும் ங்க. சரியா சென்னிங்க. இவருக்கு எல்லோரும் கை தட்டுங்க.

பாருங்கள் மக்களே. நாம் உயிரோடு இருக்க தேவைப்படும் ஒரு அதிஅவசிய சர்க்கரை என்னும் சத்துப்பொருளால் நமக்கு நோய் ஏற்படுகிறது என்கிறார்களே, இதுவே இவர்களின் உச்சகட்ட கொடூர மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

இது வரைக்கும் உடல் எதனால் ஆனது., எப்படி இயங்குகிறதென்று பார்தோம்.

இப்பொழுது செரிமானத்தை பற்றி பார்போம்.

நாம் உண்ணும் உணவு வாயில் உமிழ் நீருடன் கலந்தவுடன் செரிமானம் ஆக துவங்கிவிடுகிறது, பின் வயிற்றில் அமிலத்துடன் கலந்து செரிக்கப்பட்டு, சிறுகுடலுக்கு செல்கிறது இங்கு பித்த பையில் இருந்து வரும் பித்த நீரால் செரிக்கப்படுகிறது. பின் இந்த செரிக்கப்பட்ட உணவுக்கூழில்  உள்ள சத்துக்கள் சிறுகுடலின் கடைசிப்பகுதியில் இரத்ததில் கலக்கிறது. பின் கழிவுகள் பொருங்குடலுக்கு சென்று வெளியேற்றப்படுகிறது.

வாய், வயிறு, சிறுகுடலில் செரிமானம் சரியாக நடந்தால், இரத்தத்தில் கலந்த சத்துப்பொருட்கள் தரமான சத்துப்பொருட்களாக இருக்கும். செரிமானம் சரி இல்லை என்றால். சத்துப்பொருட்கள் தரமற்றவையாக இருக்கும்.

பொதுவாகவே நமது உடலுக்கு நன்மையை ஏற்றுக்கொள்ளும் திறனும். தீமையை வெளியேற்றும் திறனும் இயல்பாவே இருக்கிறது.

எப்படி என்று கேட்கிறீர்களா ? இதோ செயல் முறை விளக்கம்.

இப்பொழுது நீங்கள் பசி யோடு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நான் உங்களுக்கு மிகவும் பிடித்த உணவை உங்கள் கண் முன்னே கொண்டு வந்து காட்டிச்செல்கிறேன். இப்பொழுது வாயில் என்ன மாற்றம் நிகழும் ?.... ஐய்யா எச்சில் ஊறுகிறது. ம் சரி.

அதே உணவை உங்கள் கண் முன்னே கீழே போட்டு மிதித்துவிட்டேன், அதை அப்படியே தட்டில் எடுத்து வைத்து மீண்டும் உங்கள் அருகில் கொண்டு வந்து காட்டிச்செல்கிறேன். இப்பொழுது எப்படி இருக்கும் ? உமிழ் நீர் சுரக்குமா ?.... சுரக்கவில்லைங்க, கொமட்டீட்டு தான் வருகிறது.
இவ்வளவுதாங்க விடையமே. நல்லதிற்கு நமது உடல் உமிழ் நீர் சுரந்து ஏற்றுக்கொள்கிறது. கெட்டதற்கு உமிழ் நீர் சுரக்காமல் ஏற்க மறுக்கிறது.

நமது உடலில் பல சுரபு உறுப்புகள் இருக்கின்றன. உமிழ் நீர் சுரபிகள், தைய்ராய்டு, தைமஸ், கணையம் போன்ற பல சுரப்புறுப்புக்கள் இருக்கிறது.

இதே போல் தான் கணையமும். இரத்தத்தில் இருக்கும் நல்ல சர்க்கரைக்கு இன்சுலின் சுரக்கிறது கெட்ட சர்க்கரைக்கு இன்சுலின் சுரப்பதில்லை.

எது நல்லது, எது கெட்டது. முன்னால் பார்த்தோம் அல்லவா. செரிமானம் சரியாக இருந்தால் இரத்தத்தில் கலக்கும் சத்துப்பொருள் தரமானதாக இருக்கும் எனவும். செரிமானம் சரி இல்லை என்றால் தரமற்றவையாக இருக்கும்.

தரமான சர்க்கரையை, நல்ல சர்க்கரை என்றும். தரம் குறைந்த சர்க்கரை கெட்ட சர்க்கரை, என்றும் வைத்துக்கொள்வோம்.

நமது உடல் என்ன செய்யும் என்று செயல் விளக்கத்தோடு பார்தோம் ? நல்லதை ஏற்றுக்கொள்ளும், கெட்டதை வெளியேற்றும்.

அதேப்போல் தான் நல்ல சர்க்கரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கெட்ட சர்க்கரை சிறுநீரகம் மூலம் வெளியேற்றப்படுகிறது.

சரி. நாம் இப்பொழுது உண்கிறோம். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

உணவு வாயில் போட்டவுடன் உமிழ் நீர் கலந்து செரிமானம் வேலை ஆரம்பமாகிறது. பின் உணவு வயிற்றுக்கு செல்கிறது இங்கு அமிலம் மற்றும் பல செரிமான நீர்களுடன் கலந்து செரிமானம் ஆகிறது. பின் சிறுகுடலுக்கு சென்று பித்த நீர் கலந்து செரிமானம் ஆகிறது. சிறுகுடல் இறுதியில் சத்துப்பொருட்கள் இரத்தத்தில் கலக்கிறது.
நீங்கள் உண்ட உணவு அறைகுறையாக செரிமானம் ஆகி உள்ளது என்று வைத்துக்கொள்வோம். எனவே பாதி தரமான சத்துப்பொருளும், பாதி தரம் குறைந்த சத்துப் பொருளும் கிடைக்கிறது. இவை அனைத்தும் இரத்தத்தில் கலந்தாச்சு.
உதாரணத்திற்கு 100 சர்க்கரை கிடைத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். இதில் 50 நல்ல சர்க்கரை, 50 கெட்ட சர்க்கரை. இது அனைத்தும் இரத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. கணையம் அருகே வரும் போது. கணையம் ஒவ்வொறு சர்க்கரையாக பரிசோதனை செய்து பார்க்கும். இவை தரமானதா, தரமற்றதா. உடலுக்கு நன்மை செய்யக்கூடியதா, தீமை செய்யக்கூடியதா என்று பரிசோதித்து, நல்ல சர்க்கரைக்கு மட்டும் இன்சுலின் வழங்கும், ஒரு கெட்ட சர்க்கரைக்கும் கூட இன்சுலின்  வழங்காது.

நாம் முன்னே செயல் விளக்கத்தோடு பார்த்தோம் அல்லவா. உடல் நல்ல உணவிற்கு உழிழ் நீர் சுரந்தது, கெட்ட உணவிற்கு சுரக்கவில்லை. இதேதான் இங்கேயும் நடக்கிறது.

தற்போது இன்சுலினுடன் 50 சர்க்கரையும், இன்சுலின் இல்லாமல் 50 சர்க்கரையும் இரத்தத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. செல்கள் இன்சுலின் உள்ள சர்க்கரைக்கு மட்டுமே கதவை திறக்கும். இந்த 50 நல்ல சர்க்கரையும் செல்களுக்குள்ளே போய்விடும். பின் இது எரிக்கப்பட்டு வெப்ப சத்தி நமக்கு கிடைக்கிறது. இந்த சத்தி மூலமே நாம் இயங்குகிறோம்.  இன்சுலின் இல்லாத சர்க்கரையை சிறுநீரகம் கண்டறிந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடுகிறது. உடலே நல்லதை, கெட்டதை கண்டறிந்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டது. நாம் இப்பொழுது ஆரோக்கியமாக இருப்போம்.

நீங்கள் செய்யும் வேலைக்கு 30 சர்க்கரை போதும் என்று வைத்துக்கொள்வோம். மீதம் உள்ள 20 நல்ல சர்க்கரையை உடல் என்ன செய்யும் ?... உதாரணத்திற்கு நமக்கு தேவையைவிட பணம் அதிகம் இருந்தால் என்ன செய்வோம், சேமித்து வைப்போம் அல்லவா. அது போல் தான் உடல் தேவைக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரையை கூட்டு சர்க்கரையாக (Glycogen) செரிவூட்டி கல்லீரல், தசைநார்களில் சேமித்துவைத்துக்கொள்கிறது.

இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை எப்போது எதற்கு பயன்படுகிறது, நாம் செய்யும் வேலைக்கு நல்ல சர்க்கரை போதவில்லை என்றால் லேசாக கிறுகிறுப்பு ஏற்பட்டு கண்கள் இருட்டடையும் போது இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை இரத்தத்தில் கொட்டப்படுகிறது. நமக்கு ஏதாவது காயம் எற்பட்டால், அந்த காயத்திற்கு அருகில் இருக்கும் தசைநார்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரை அங்கு இருக்கும் செல்களை புதுப்பித்து காயத்தை ஆற்ற பயன்படுத்தபடுகிறது. நமக்கு எங்காவது விபத்து ஏற்பட்டு ரோட்டில் கிடந்தால், உறுப்புகள் சீராக இயங்குவதற்காக சேமிக்கப்பட்ட சர்க்கரை இரத்தத்தில் கொட்டப்பட்டு நமது உயிரை காக்க பயன்படுகிறது.

நாம் எப்படி நமக்கு பணம் இல்லாத போது சேமித்த பணத்தை பயன்படுத்துகிறோமோ. அது போல் நமது உடல் ஆபத்து காலங்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரையை பயன்படுத்துகிறது.
இப்ப சொல்லுங்க மனிதனுக்கு எது உண்மையான சொத்து ?... பணம் காசு வீடு, வாகனமா ? நிச்சயம் கிடையாது. நாம் சேமித்த சர்க்கரையே நமக்கு உண்மையான சொத்து.
எவர் வந்தாலும் வராவிட்டாலும். எது இருந்தாலும் இல்லாவிட்டாலும். இறுதியில், இந்த சர்க்கரையே உங்கள் கூட இருந்து உயிரை காக்கும். நாம் எதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

10 நிமிட இடைவேளைக்கு பிறகு சந்திப்போம்.

எல்லோரும் வந்தாச்சுங்களா ! சரி ஆரம்பிப்போம்.

இப்பொழுது நமது உடல், நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை, அதிகப்படியான நல்ல சர்க்கரைகளை எப்படி கையாள்கிறது என்று பார்தோம். இது மனிதன் தோன்றிய காலம் முதல் நடந்து வரும் இயற்கை நிகழ்வு.

இந்த மாவுச்சத்து பொருளுக்கு எவன் சர்க்கரை என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை. இது நம்மை குழப்புவதற்காக சூழ்ச்சி செய்து வைக்கப்பட்டுள்ளது. செரிமான கோளாறால் ஏற்படும் அதிக நீரிழிவு பிரச்சனைக்கு எவன் சர்க்கரை நோய் என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை.

நாம் உண்ணும் சர்க்கரைக்கும் (இனிப்பு) இந்த சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரிழிவு பிரச்சனைக்கும் துளி கூட சம்மந்தம் கிடையாது.

சர்க்கரை என்பது ஒரு சுவை. அவர்கள் கூறும் சர்க்கரை (மாவுச்சத்து) என்பது ஒரு சத்து பொருள்.
மனிதனுக்கு செரிமானம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இனிப்பு சுவை மிக மிக அவசியமானது. இனிப்பு சுவையால் மட்டுமே உங்கள் வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தி வழங்க முடியும்.

இலை போட்டு முதலில் இனிப்பு வைத்தவன் எல்லாம் முட்டாள்

வீட்டு தின்னையில் வழிப்போக்கர்களுக்கு ஒரு மூடி தேங்காயும் ஒரு உருண்டை கருப்பட்டி வைத்தவன் எல்லாம் முட்டாள்.

விழா காலங்களில் இனிப்பு பண்டம் செய்து உண்டவன் எல்லாம் முட்டாள்.

இனிப்பை சாப்பிடக்கூடாது என்று சொல்லும் ஆங்கில மருத்துவர்கள் அறிவாளிகள்.
எதற்கு இலையில் முதலில் இனிப்பை வைத்தார்கள் ? அனைத்து உணவையும் சாப்பிட்டுவிட்டு இறுதியில் இனிப்பை வீட்டிற்கு மூட்டைகட்டி செல்லவா !,  இனிப்பை முதலில் உண்ண வேண்டும். இனிப்பு சுவை நாக்கில் பட்டவுடன் மின்காந்த அலையாக மாறி நேரடியாக வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தியை வழங்குகிறது. பின் நாம் என்ன சாப்பிட்டாலும் அது நன்கு செரிமானம் ஆகி நல்ல சத்துக்களாக இரத்தத்தில் கலக்கிறது.

உங்கள் மருத்துவர் என்ன சொல்லுவார் இனிப்பு சாப்பிடக்கூடாது. இனிப்பு சாப்பிடாவிட்டால் வயிறு, இதற்கு சக்தி வழங்கும் மண்ணீரலுக்கு சத்தி கிடைக்காது. இப்பொழுது உணவு உண்டால் செரிமானம் எப்படி இருக்கும் ? அறைகுறையாக. கிடைக்கும் சத்துப்பொருட்கள் பெரும்பாலும் கெட்ட சத்துப்பொருளாகவே இருக்கும். இவைகளை உடல் என்ன செய்யும் சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். நாம் எப்படி இருப்போம் சோர்வுடன் நோயாளியாகவே இருப்போம்.
நம்மை நோயாளியாக்கி சாகடிப்பதற்காக இவர்கள் செய்த முதல் தந்திரம். மாவுச்சத்திற்கு சர்க்கரை என்று பெயர் வைத்தது, இனிப்பு சாப்பிடக்கூடாது என்று சொன்னது.

இனிப்பை சாப்பிடக்கூடாது என்று செரிமானத்தை கெடுத்ததோட விட்டார்களா ! இல்லை.
இவர்களின் அடுத்த கட்ட கொலைகார செயல்களை பார்போம்.

இப்பொழுது உங்களுக்கு அதிக நீரிழவு, தாகம், சோர்வு, அதிக பசி. ஏற்படுகிறது இவை அனைத்திற்கும் என்ன காரணம்? அரைகுறை செரிமானத்தால் இரத்தத்தில் கலந்த கெட்ட சத்துப்பொருட்கள் வெளியேறுவதே காரணம். நீங்கள் என்ன செய்ய வேண்டும் ? செரிமானம் சரியாக என்ன வழிவகையோ அதை செய்ய வேண்டும். செரிமானத்தை சரி செய்தால் மேலே குறிப்பிட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள்,  உங்கள் அருகில் உள்ள மேதாவி உனக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும் போய் பரிசோதித்துக்கொள் என்பார். நீங்களும் பரிசேதனை செய்து பார்க்க போவீர்கள். அங்கு எவன் எப்பொழுது மாட்டுவன் எப்படியெல்லாம் அவன் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று 5 வருடம் படித்துவிட்டு வெள்ளை கோர்ட்டு போட்டு கழுத்தில் பாசக்கயிறை மாட்டிக்கொண்டு ஒரு பூதம் உட்காந்திருக்கும். உங்கள் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்து, உங்களுக்கு சர்க்கரை அதிகம் உள்ளது. நீங்கள் சர்க்கரை நோயின் ஆரம்பகட்டத்தில் உள்ளீர்கள் என்பார்கள். இதில் என்ன பரிதாபமான விடையம் என்றால். நல்ல மற்றும் கெட்ட சர்க்கரை இரண்டிற்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியாது, இரண்டுமே சேர்த்துதான் இவர்களால் சொல்ல முடியும். 

அந்த சர்க்கரை நல்ல சர்க்கரையா, கெட்ட சர்க்கரையா ? கணையம் பரிசோதித்து இன்சுலின் வழங்கப்பட்டுவிட்டதா இல்லையா ? சர்க்கரை செல்களுக்குள் சென்று எரிக்கப்பட்டுவிட்டதா ? சிறுநீரகத்தால் கெட்ட சர்க்கரை கண்டரிந்து வெளியேற்றப்பட்டுவிட்டதா அல்லது வேலை நடந்து கொண்டிருக்கிறதா ? அதிக நல்ல சர்க்கரை தசைநார்களில் சேமிக்கப்பட்டுவிட்டதா, இல்லை சேமிப்பு வேலை நடந்து வருகிறதா ? நீங்கள் செய்யும் வேலைக்கு சர்க்கரை போதுமானதா இல்லையா என்று எதுவும் அந்த அப்பாவி Robotic மருத்துவர்களுக்கு தெரியாது. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அளவுகளை பார்த்து மாத்திரை கொடுப்பது மட்டுமே.

நல்ல சர்க்கரைக்கும், கெட்ட சர்க்கரைக்கும் இயந்திரங்களுக்கு வித்தியாசம் தெரியாது. இரண்டிற்கும் ஒரே Chemical formula வைத்தான் காட்டும், Glucose - C6H12O6. இதோ உதாரணம் அடிக்கரும்பு எப்படி இருக்கும் ?... நன்கு இனிப்பு சுவை உடையதாக இருக்கும் ங்க. சரி நுனிக் கரும்பு எப்படி இருக்கும் ?...

இனிப்பு குறைவாக சல்லென்று இருக்கும். இந்து அடிக்கரும்பையும், நுனிக்கரும்பையும் ஒரு Lab ல் கொடுத்து பரிசோதனை செய்யது பாருங்கள் Sucrose - C12H22O11 என்று ஒரே Chemical formula வைதான் காட்டும். எப்படி நமக்கு சுவையில் வித்தியாசம் தெரிந்து இயந்திரத்திற்கு தெரியவில்லையோ, அதேப்போல்தான் தரமான சர்க்கரைக்கும்( நல்ல )மற்றும் தரமற்ற சர்க்கரைக்கும் (கெட்ட) உடலுக்கு வித்தியாசம் தொரியும், இயந்திரங்களுக்கு தெரியாது.

இப்பொழுது புரிகிறதா ஏன் ஆங்கில மருத்துவத்திற்கு நல்ல மற்றும் கெட்ட சர்க்கரைக்கு வித்தியாசம் தெரியவில்லை என்று. இவர்கள் தன் சொந்த மூலையை விட மனிதன் உருவாக்கிய இயந்திரத்தை மட்டுமே நம்புவார்கள்.

சரி, இப்பொழுது நீங்கள் சர்க்கரை நோயாளி என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டார்கள். மாத்திரை எழுதி கொடுத்துவிட்டார்கள்.

இவர் எந்த அளவை வைத்து உங்களை சர்க்கரை நோயாளி என்று முடிவு செய்தார் ? யார் அளவை நிர்ணயம் செய்தது ? இந்த சர்க்கரை மாத்திரை எதற்கு கண்டுபிடிக்கப்பட்து ? உண்மையில் ஆரோக்கியத்திற்கு அளவு ஏதும் உண்டா ? என்று பார்ப்போம்.

ஆங்கில மருத்துவம் அறுவைசிகிச்சை செய்யத்துவங்கும் காலகட்டத்தில், இரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சையின் போது ஒரு மாத்திரை கொடுக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்துபார்த்தார்கள். இது அவர்களுக்கு வெற்றியாக அமைந்து. அறுவை சிகிச்சையின் போது மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த இந்த மாத்திரையை எப்படி உலகம் முழுவதும் வியாபாரம் செய்து கோடிகோடியாய் பணம் சம்பாதிப்பது என்று இரவு பகலாக ஆங்கில மருத்துவ உலகம், மருந்து மாத்திரை பெருநிறுவனங்கள் இணைந்து ஆலோசனை செய்து ஒரு முடிவிற்கு வந்தார்கள். அந்த முடிவு என்ன ?

மதிய உணவு இடைவேளை பிறகு பார்ப்போம். சரியாக 1/2 மணி நேரம் கழித்து துவங்குவோம்.
சர்க்கரைக்கு அவர்களே ஒரு அளவை நிர்ணயித்து, இதற்கு மேல் சென்றாலும் நோய், கீழ் சென்றாலும் நோய் என்று பொய் பிரச்சாரம் செய்வதென முடிவெடுத்தார்கள்.

இதன் படி உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் மாட்டுவர்கள். இவர்களிடம் மாத்திரை விற்பனை செய்து கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என்பதே இவர்களின் இலக்கு.
இந்த வியாபாரிகள் விரித்த வலையில் தான் நீங்கள் இப்போது சிக்கி உள்ளீர்கள்.

உண்மை என்னவென்றால் சர்க்கரை இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சர்க்கரையை பரிசோதித்து பார்பதே மிகப்பெரிய முட்டாள்தனம்.

ஒரு மினிதன், அவர் வாழும் பகுதி, அவர்கள் பண்பாடு, கலாச்சாரம், அவர் செய்யும் வேலை ( உடல் உழைப்பு), மன நிலை, உணவு, சுற்றுச்சூழல், நீர், செரிமாண மண்டலத்தின் சக்தி, பிராண சக்தி இவைகளை பொருத்து சர்க்கரையின் அளவு ஒவ்வொருவருக்கும் மாறிக்கொண்டே இருப்பது தான் இயற்கை.

உண்மை இப்படி இருக்கும் போது, எதன் அடிப்படையில் உலகம் முழுவதும் அனைத்து மனிதர்களுக்கும், இவர்களால் ஒரே அளவை நிர்ணயம் செய்ய முடிகிறது. இதை வைத்தே தெரியவில்லையா ?.... இவர்களின் நோக்கம் உலக மக்களை நோயாளிகளாக்கி,  அவர்களின் செவ்வம் மற்றும் ஆரோக்கியத்தை சுரண்டும் கொடூர பாவச்செயல்களை செய்கிறார்கள் என்று.
நீங்கள் என்ன செய்தீர்கள், மாத்திரை டப்பாவை வாங்கி வீட்டிற்கு வந்துவிட்டீர்கள். இப்பொழுது உணவெடுக்கிறீர்கள். செரிமானம் அறைகுரையாக இருக்கிறது. இதனால் 70 கெட்ட சர்க்கரையும், 30 நல்ல சர்க்கரையும் இரத்தத்தில் கலக்கிறது என்ற வைத்துக்கொள்வோம். உடல் என்ன செய்யும் 70 கெட்ட சர்க்கரையை கண்டரிந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். 30 நல்ல சர்க்கரை செல்களுக்குள் சென்றுவிடும்.

இப்பொழுது மாத்திரை சாப்பிடுகிறீர்கள். இது என்ன செய்யும் நேரடியாக கணையத்திடம் சண்டையிட்டு 70 கெட்ட சர்க்கரைக்கும் இன்சுலின் வாங்கி கொடுக்கும் கொடூர செயலை செய்யும், இந்த 70 கெட்ட சர்க்கரையும் இன்சுலினுடன் இரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். செல்கள் இன்சுலின் இருப்பதால் கதவை திறந்து ஏற்றுக்கொள்ளும். இந்த கெட்ட சர்க்கரையை செல்களால் சரியாக எரிக்கப்பட்டு வெப்ப சக்தியாக மாற்ற முடியாது. எனவே முதல் முதலில் உங்கள் செல்களில் கழிவு தங்குகிறது.

உதாரணத்திற்கு நல்ல சர்க்கரையை வெயிலில் நன்கு காய்ந்த விறகாக கற்பனை செய்துகொள்ளுங்கள். கெட்ட சர்க்கரையை காயாத ஈர விறகாக கற்பனை செய்துகொள்ளுங்கள். செல்களை அடுப்புகளாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.

அடுப்பின் வேலை என்ன?.. விறகை எரித்து வெப்ப சக்தி வழங்குவது. செல்களின் முக்கிய வேலை என்ன?.. சர்க்கரையை எரித்து வெப்ப சக்தி வழங்குவது. நன்கு காய்ந்த விறகை அடுப்பில் எரித்தால் அங்கு என்ன மிச்சம் இருக்கும் ?... சிறிது சாம்பல் மட்டுமே. வெப்ப சக்தியும் முழுமையாக கிடைத்துவிடும். ஈர விறகை எரித்தால் என்ன நடக்கும் ?... சரியாக எரியாமல் புகைந்து புகைந்து விறகு அடுப்பில் தங்கிவிடும். சரியாக வெப்ப சக்தியும் கிடைக்காது. இது போல் தான் நம் செல்களும் கெட்ட சர்க்கரையை முழுமையாக எரிக்க முடியாமல் கழிவு செல்களில் தங்கிவிடுகிறது.

உலகத்தில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே காரணம்தான். அது என்ன ? இயற்கை விதிமீறல் செயல்களால் கழிவுகள் நமக்குள் தங்குவதே காரணம். கழிவு தேக்கம் நோய். கழிவு நீக்கம் குணம்.

உடல் சரியாக கெட்ட சர்க்கரையை கண்டரிந்து சிறுநீர் மூலம் வெளியேற்றிய தரமற்ற சர்க்கரையை நாம் சொந்த செலவில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு செல்களுக்குள்ளையே செலுத்துவதுதான் உங்கள் அறிவியலின் உச்சகட்ட அற்புத செயல்.

சாக்கடைக்கு செல்ல வேண்டிய ஒரு தேவையற்ற பொருளை, நாம் செல்களுக்குளே செலுத்துவதால் கழிவுகள் செல்களில் தங்கி அந்த செல் பாதிக்கிறது. இத தொடர்ந்து நடக்கும் போது. அந்து உறுப்பு பாதிக்கிப்படுகிறது. உறுப்புகள் பாதிக்கப்பட்டால் அதன் வேலையை சரியாக செய்ய முடியாது. இதனால் மேலும் கழிவுகள் உள்ளேயே தங்க, சொல்லிலடங்கா துயரங்களுக்கு ஆளாகுகிறோம்.

இப்பொழுது தெரிகிறதா சர்க்கரை நோய் வந்தால் ஏன் எல்லா நோய்களும் வருகிறதென்று. சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு பிரச்சனை வந்தால் எந்த நோயும் வராது. இதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி போடுவதின் மூலமே அனைத்து நோய்களும் வருகிறது.

சாதாரணமாக உள்ள செரிமானப்பிரச்சனையை சரி செய்திருந்தால் உங்கள் அனைத்து பிரச்சனையும் சரியாகியிருக்கும் அதைவிட்டுவிட்டு, பன்னாட்டு வியாபாரிகளின் கொடிய விசப் பொருட்களை துளி கூட சிந்திக்காமல், அப்படியே நாம் ஏற்றுக்கொண்டதால் உணர்ச்சியற்ற நோய் பிண்டங்களாக காட்சியளிக்கிறோம்.

நீரிழிவு காரணங்கள் !
--------------------------------
சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு பிரச்சனைக்கு மூன்றே காரணம்தான். அனைத்து நீரிழிவு நோயாளிகளும் இதில் அடங்குவார்கள்.
1 - அதிக கவலை
2 - அவசரமாக சாப்பிடுவது
3 - அதிக உடல் வெப்பம்
சர்க்கரை நோயாளி என்னு சொல்லப்படும் செரிமானக் கோளாறு உள்ளவர்கள் அனைவருக்கும் இதில் ஒரு காரணமாவது நிச்சயம் பொருந்தும். பரிசோதித்து பாருங்கள். என்னங்க நான் சொன்னது சரியா... ! https://www.youtube.com/channel/UCgBKNGCCD8eGGh7dH-xijFA http://www.agathiyarjanachithar.in/

*எப்படி குணப்படுத்துவது  ?*
-----------------------------------------
1 : கவலை - சாப்பிடும் பொழுது கவலை எல்லாம் மறந்து உணவின் மேல் முழுகவனமும் செலுத்தி சாப்பிட வேண்டும். கவலைக்கு உண்டான காரணங்களை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.

2 : அவசரமாக சாப்பிடுவது - அவசரமாக டிக்கட் எடுக்க விரும்புபவர்கள் தாராளமாக அவசரமாக சாப்பிடலாம். "நொறுங்கத்தின்றால் நூறு ஆயுசு", பசி எடுத்தால் மட்டுமே உணவெடுக்க வேண்டும்.

ஒரு முறை நன்கு சிந்தித்து பாருங்கள் நாம் எதற்காக இவ்வளவு பாடுபடுகிறோம் என்று, இறுதியில் சாப்பிடுவதற்காகவே என்று உணர்வீர்கள். அதை இப்பவே உணர்ந்து பொறுமையாக சாப்பிடலாமே. நம் நலனுக்காக நம் உடலை இவ்வளவு பாடுபடுத்துகிறோம், ஏன் உடல் நலனுக்காக நாம் 1/2 மணி நேரம் ஒதுக்கி பொறுமையாக சாப்பிடக்கூடாது.

சாப்பிடும் பொழுது உலகத்தையே மறந்துவிட வேண்டும். உணவிற்கு முன் இனிப்பான பழங்களை சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது உணவை பார்த்து நமது முழு கவனமும் உணவின் மேல் செலுத்தி மென்று ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும்.
கோதுமையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

3 : அதிக உடல் வெப்பம் - பச்சை தண்ணீரில் குளிப்பது. வாரம் இரண்டு நாள் எண்ணெய் குளியல். நீர்காய்கனிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
இனி இந்த செரிமானப்பிரச்சனையை யாரும் நோய் என்று சொல் வேண்டாம். நீரிழிவு என்பதே பொருந்தும். தேவையில்லாத, கெட்ட சத்து பொருட்கள் அனைத்தும் சிறுநீர் முலமே வெளியேறும், சர்க்கரை மட்டும் அல்ல. நீரிழிவை சரி செய்ய மேலே குறிப்பிட்ட மூன்று காரணத்தையும் சரி செய்தால் குணம் பெற்றுவிடுவீரகள்.

சர்க்கரை நோய் - செரிமானக்கோளாறால் ஏற்படும் நீரிழிவு பிரச்சனை.
தீர்வு - இனிப்பான பழங்களை சாப்பிடுவது. உணவை பசிக்கும் போது மென்று ரசித்து ருசித்து சாப்பிடுவது.

இனி நாம் யாரும் பன்னாட்டு வியாபாரிகளின், உயிரை குடிக்கும் இரசாயண மாத்திரைகளையும் இன்சுலின்களையும் எடுக்க மாட்டோம் என்று உறுதி எடுப்போம். மூளையில், மழுங்கி கிடக்கும் நமது முளையை சற்று பயன்படுத்தி சிந்திக்க துவங்குவோம்.

பன்னாட்டு கொலைகார வியாபாரிகளின், கொடூர வச தன்மை உள்ள பொருட்களை விற்கும் சந்தையாக உங்கள் உடலை மாற்றிவிடாதீர்கள்.

"உள்ளமே பெருங்கோவில்
ஊநுடலே ஆலையமாம்"

ஆலையத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
*சர்க்கரை நோய் - உச்சம் !*

உண்மையில் சர்க்கரை நோய் என்று ஒரு நோய் உலகில் இல்லை
இது முழுக்க முழுக்க மருந்து மாத்திரை கம்பனிக்காரர்களின் வியாபார தந்திரம்.
இனிப்பிற்கும், சர்க்கரை நோய்கும் 0.1% கூட சம்பந்தம் கிடையாது. 

இதற்கு சர்க்கரை நோய் என்று பெயர் வைத்ததிலேயே மிகப்பெரிய தந்திரம் இருக்கிறது.
லேசாக தலை சுற்றலே, சோர்வே, மயக்கமே வந்து விட கூடாது உடனே
நீங்கள் பயந்து போய், பரிசோதனை செய்து பார்ப்பீர்கள், அளவு அவர்கள் நிர்ணயித்ததை விட குறைவாகவே, அதிகமாகவோ இருக்கக்கூடும், உடனே உனக்கு சர்க்கரை நோய் உள்ளது, இந்தா இந்த மாத்திரையை போடுனு எழுதி கொடுத்துவிடுவார். 

இதோட நிறுத்தினால் பரவாயில்லை, மாத்திரை போடலைனா அது வந்துரும், இது வந்துரும் னு பயப்படுத்தி, ஒரு பெரிய பட்டியலை காட்டி இதோ பாருங்க சர்க்கரை நோய் வந்தா இந்த எல்லா நோய்களும் வந்துவிடும்னு சொல்வார். 

ஆனால், உண்மை என்ன தெரியுமா, சர்க்கரை நோய் வந்தால் எல்லா நோயும் வராது. சர்க்கரைக்கு அவர்கள் கொடுக்கும் மாத்திரை சாப்பிடுவதால் மட்டுமே எல்லா நோயும் வருகிறது. அந்த மாத்திரை பெட்டியிலேயே இதை சாப்பிட்டால் சிறுநீரக கேன்சர் வரும் என்று எழுதியிருப்பது யாருக்காவது தெரியுமா !

ஆங்கில மருத்துவம் நிர்ணயிக்கும் அளவுகள் எல்லாம் நம் ஆரோக்கியத்தை மையப்படுத்தி நிர்னையிக்கும் அளவுகள் அல்ல. 

அளவுகள் நிர்ணயிப்பது யார் தெரியுமா ? மருந்து மாத்திரை கம்பனிக்காரர்களே ! வியப்பாய் உள்ளதா, இது தான் உண்மை.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும், அவரவர் வாழும் பகுதி, செய்யும் வேலை, உணவு, மனம், சுற்றுச்சூழல் இதை பொருத்து சர்க்கரை அளவு மாறிக்கொண்டே இப்பது தான் இயற்கை.
இப்படி இருக்கும் போது, எதன் அடிப்படையில், உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான அளவை நிர்ணயம் செய்ய முடிகிறது. 

சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் சிறிய பிரச்சனைப்பற்றி மக்களுக்கு முழு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக படித்தவுடன் உங்களின் நண்பர்களுக்கு, அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கண்டிப்பாக பகிருங்கள். விழிப்புணர்வுடன் பகிர்ந்தால் குறைந்தபட்சம் ஒரு குடும்பத்தையாவது நிம்மதியுடன் வாழ வைக்க முடியும்.

”மதுரை போலீஸ் மாடசாமி எப்படி இல்லாத தீவிரவாதத்தை இருப்பதாகக் காட்டுகிறார்?”: நெல்பேட்டை அம்பலங்கள்

(ஆகஸ்ட் 13, 2016இல் வெளியான செய்தி மீள்பிரசுரமாகிறது.)
Thanks: ippodhu.com


”தமிழ்வீரன் எனும் ஒரு இந்துமுன்னணித் தலைவரைக் கொலை செய்ய முயன்றேன் என ஒரு வழக்குத் தொடர்ந்து குண்டர் சட்டமும் போட்டார்கள். அந்தத் தமிழ்வீரனே அது பொய் வழக்கு என நீதிமன்றத்தில் வாதாடி எனக்கு விடுதலை வாங்கித் தந்தார்,” என்று தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட வழக்குரைஞர் முகமது அலி ஜின்னா மனித உரிமை ஆர்வலர்களிடம் கூறியுள்ளார். இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்ற சம்பவம். மதுரை நெல்பேட்டையிலுள்ள ஏழை, எளிய முஸ்லிம்களின் பெயரில் வழக்குகள் போட்டு மதுரை காவல் துறையின் ஒரு பிரிவினர் எப்படி இல்லாத தீவிரவாதத்தை இருப்பதாகக் காட்டுகிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் விவரிக்கிறது தேசிய மனித உரிமைக் கூட்டமைப்பின் தலைவர் அ.மார்க்ஸ் பங்குபெற்ற இந்த உண்மை அறியும் குழுவின் அறிக்கை:
உண்மை அறியும் குழுவின் அறிக்கையின் முழு விவரம்
“தீவிரவாதிகளின் ‘ஹிட்லிஸ்டில்’ மதுரை முக்கிய இடத்தில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துக் கொண்டே இருக்கிறது” என்பது அக்டோபர் 22, 2013 அன்றைய தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளி வந்துள்ள செய்தி. இப்படித் தமிழகத்திலேயே மதுரை முஸ்லிம் தீவிரவாதத்தின் மையமாக உள்ளது என்றொரு கருத்தைப் பொதுப் புத்தியில் பதிப்பதில் தமிழக் காவல்துறை வெற்றி பெற்றுள்ளது. 2011 லிருந்து இன்று (2016) வரை மதுரை மாவட்டம் மற்றும் சுற்று வட்டாரங்களில் மட்டும் காவல்துறையினர் 17 வெடிகுண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அனைத்தும் டாஸ்மாக் கடைகள் பேருந்துகள், பொதுக்கூட்ட மேடைகள் முதலான மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டு வெடித்த மட்டும் வெடிக்காத குண்டுகள். இவற்றில் இரண்டு பார்சல் குண்டுகள்.
இப்படியான வெடிகுண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளால் அப்பாவிப் பொதுமக்கள் பெரிய அளவில் கொல்லப்படுவது என்பது உலகையே அச்சத்தில் உறைய வைத்துள்ள நேரத்தில் இப்படி மதுரை மாவட்டப் போலீஸ் 17 வெடிகுண்டு வழக்குகளைப் புலன் விசாரித்து வருவது என்பது இங்கு பொது மக்கள் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் இந்த தீவிரவாதத் தாக்குதல் முயற்சிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் செய்யப்படுவதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் பெரிய அளவில் அந்தச் சமூகத்தையே “சந்தேகத்திற்குரிய சமூகமாகவும்”, “பயங்கரவாதச் சமூகமாகவும்” பார்க்கக் கூடிய நிலைக்கும் இட்டுச் செல்கிறது.
எப்படி இருந்த போதிலும் இப்படியான பயங்கரவாதத் தாக்குதல்கள் கவனமாகப் புலன் விசாரித்துக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் பிரச்சினை என்னவெனில் ஆண்டுகள் ஐந்தாகியும் பெரிய அளவில் யாரும் இதில் கைது செய்ய்ப்படவில்லை. கைது செய்யப்பட்ட சுமார் பத்து பேர்களில் ஒன்பது பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மற்றவரும் இரண்டொரு நாளில் பிணையில் வெளிவருவார் எனச் சொல்லப்படுகிறது. தவிரவும் பயங்கரமான குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகளாக இவை காவல்துறையாலும் ஊடகங்களாலும் பிரமாதப் படுத்தப்பட்டாலும் இந்தப் 17 பயங்கரவாததாக்குதல் முயற்சிகளிலும் யாரும் ஒரு சிறிய அளவில் கூட பாதிக்கப்படவில்லை; சொத்திழப்புகளும் இல்லை.
இந்த வழக்கு விசாரணைகளில் குறைந்த பட்சம் மூன்று புலன் விசாரணை அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டபோதும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் ஏன் இந்த மெத்தனம்? குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் தறுவாயில் இதை முறியடிக்கும் நோக்கில் ஆய்வாளர் மாடசாமி எனும் புலன் விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என ஒரு குற்றச்சாட்டை மதுரை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் வைத்துள்ள ஒரு செய்தியும் பத்திரிகைகளில் பெரிதாய் வந்தது. வேறொரு புலன் விசாரணைக் குழுவில் உள்ள ஒருதலைமைக் காவலர் தீவிரவாதி ஒருவருடன் தொடர்பில் உள்ளார் எனவும் அவரிடமிருந்து பணம் பெற்றுள்ளார் எனவும் ஆதாரத்துடன் அதே கண்காணிப்பாளர் முன்வைத்துள்ள இன்னொரு புகார் பற்றிய செய்தியும் பத்திரிகைகளில் வந்தது. இது குறித்தெல்லாம் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரியவில்லை. ஆனால் வெடிகுண்டுகள் “வைக்கப்படுவதும்”, முஸ்லிம்கள் வழக்குகளில் சிக்க வைக்கப்படுவதும் தொடர்கின்றன. இது தொடர்பான வழக்கு விவரங்களை எல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது எங்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.
பல்வேறு புலன் விசாரணை முகமைகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடையில் மிகப் பெரிய வேறுபாடுகள் உள்ளன. ஒரே குற்றம் குறித்து இரண்டு முகமைகளும் வெவ்வேறு நபட்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கின்றன. இதெல்லாம் காவல்துறையினருக்கு இடையே யார் விரைவாகப் பதவி உயர்வு பெறுவது, பணப் பரிசுகளைப் பெறுவது என நடக்கும் போட்டி என நாம் வாளாவிருந்துவிட முடியாது. ஏனெனில் இந்தப் போட்டிகளுக்கிடையில் பல அப்பாவிகள் பாதிக்கப் படுகின்றனர். ஒரு சமூகத்தையே பயங்கரவாதிகளாக மற்றவர்கள் பார்க்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலை சமூக ஒற்றுமைக்கும் அடிப்படை நீதிவழங்கு நெறிமுறைகளுக்கும் எதிரானது என்கிற வகையில் இது குறித்து ஆய்வு செய்து உண்மைகளையும், ஐயங்களையும் பொது வெளியில் வைப்பதற்கென கீழ்க்கண்ட சமூக ஆர்வலர்கள் அடங்கிய ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.
உறுப்பினர்கள்
1. பேரா.அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை, 2. ரஜினி, மூத்த வழக்குரைஞர், உயர்நீதிமன்றக் கிளை, மதுரை, 3. வழக்குரைஞர் என்.எம்.ஷாஜஹான், மாநிலச் செயலர், NCHRO, மதுரை, 4. வழக்குரைஞர், ஏ.ராஜா, உயர்நீதிமன்றக் கிளை, மதுரை, 5. வழக்குரைஞர் எம். முஹம்மது அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர், NCHRO, சென்னை 6. வழக்குரைஞர் எஸ்.ஏ.எஸ்.அல்லாவுதீன்,உயர்நீதிமன்றக் கிளை, மதுரை,
இக்குழுவினர் இந்தப் 17 வெடிகுண்டு வழக்கு விவரங்களையும் முழுமையாக ஆராய்ந்தபின் சென்ற ஆக 5, 2016 அன்று மதுரை நகர காவல்துறை ஆணையர் ஷைலேஷ் குமார் யாதவ் ஐ.பி.எஸ், உளவுத்துறை உதவி ஆணையர் முத்து சங்கரலிங்கம், ஏ.டி.எஸ்.பி மாரிராஜன் ஆகிய காவல்துறை அதிகாரிகளையும் குற்ற வழக்குகளில் தொடர்பு படுத்தப்பட்டுள்ள மதுரை புதுராமநாதபுரம் சாலை முகமது முபாரக் எனப்படும் உமர் ஃபாரூக்(35) த/பெ மீரான் கனி, தற்போது கைது செய்யப்படுச் சிறையில் இருக்கும் நெல்பேட்டையில் செல்போன் கடை உரிமையாளர் அபூபக்கர் சித்திக்கின் தாய் ஜரீனா பேகம் க/பெ பீர் முகம்மது, நெல்பேட்டை பாண்டலி எனப்படும் முகமது அலி (39) த.பெ முகமது சுல்தான், நெல்பேட்டையில் பீடா கடை வைத்துள்ள சகோதரர்கள் ஃபரீத்கான் மற்றும் மன்சூர் கான் த/பெ அப்துல் ரீதிஃப் கான், நெல்பேட்டை வழக்குரைஞர் உ.முகமது அலி ஜின்னா த.பெ உமர் பாய், நெல்பேட்டை வழக்குரைஞர் சௌகத் அலி, காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனின் புகார்க்கடிதம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ரிட் மனு தாக்கல் செய்துள்ள வழக்குரைஞரும் SDPI கட்சியின் மதுரை மாவட்ட வழக்குரைஞர் அணித் தலைவருமான சையது அப்துல் காதர் த.பெ அப்துல் ரஷீது ஆகியோரையும் சந்தித்து விரிவாகப் பேசினர். மீண்டும் இவர்களில் சிலரைப் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர். மேலூரில் பள்ளிவாசல் முன்பு வாசனைத் திரவியங்கள் விற்கும் அப்பாஸ் மைதீன் த/பெ ஷேக்தாவூத், மேலூரில் தற்போது ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை செய்துவரும் முபாரக் த.பெ ஷேக் என்கிற மீரா மைதீன், ஆட்டோ ஓட்டுநர் யாசின் த.பெ காதர் மைதீன் மற்றும் பிரியாணி மைதீன் த.பெ பக்ருதீன் ஆகியோரை நேரில் சந்திக்காவிட்டாலும் தொலை பேசியில் அவர்களுடன் விரிவாகப் பேச முடிந்தது. இந்த வழக்குகள் சிலவற்றை தற்போது விசாரித்து வரும் ஆய்வாளர் சீனிவாசன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.
17 வெடிகுண்டு வழக்குகளின் சுருக்கமான விவரங்கள்
1. 30.04.11 – மதுரை மாட்டுத்தாவணி அருகில் ‘டாஸ்மாக்’ பாரில் குண்டு வெடிப்பு (கே.புதூர் காவல்நிலையக் குற்ற எண் 788/2011). பள்ளிவாசலுக்கு அருகில் டாஸ்மாக் இருந்ததால் குண்டு வைக்கப்பட்டது எனச் சொல்லப்பட்டது.
2. 30.09.2011 – கே.புதூர் பஸ் டெப்போவில் நின்றிருந்த அரசு பேருந்தில் வெடிக்காத குண்டு ஒன்று காணப்பட்டது (கே.புதூர் கா.நி.கு.எண் 1302/2011).
3. 07-12,2011 – திருவாதவூர் அருகே சித்தரடிகள் குளத்தில் குண்டு வெடிப்பு (மே.லூர் கா.நி.கு.எண் 757/2011) – பாபர் மசூதி தகர்ப்புக்கு எதிர்வினை எனக் காரணம் சொல்லப்பட்டது).
4. 01.05.2012 – மதுரை அண்ணா நகர் ஶ்ரீராமர் கோவில் கம்பி கேட் அருகில் சைகிள் குண்டு வெடிப்பு. (அண்ணா நகர் கா.நி.கு.எண் 404/2012) –பா.ஜ.க வின் தாமரை சங்கமம் நிகழ்ச்சிக்கு அத்வானி வருகையை எதிர்த்து எனச் சொல்லப்பட்டது).
5. 03.08.2012 – உமர் ஃபாரூக் என்பவர் கடைக்கு ஒரு பார்சல் குண்டு வந்தது (தெற்குவாசல் கா.நி.கு.எண் 736/2012) –சௌராஷ்டிர மாநாட்டுக்கு மோடி வருவதாகக் கேள்விப்பட்டு வைத்ததாகச் சொல்லப்பட்டது). இருவர் கைது.
6. 29.09.2012 – தேனி டாஸ்மாக் கடை அருகில் ஒரு வெடிகுண்டு (தேனி கா.நி.கு.எண் 692/2012) – இமாம்அலி நினைவாக எனச் சொல்லப்பட்டது.
7. 01.11.2012 – திருப்பரங்குன்றம் தர்ஹா அருகில் ஒரு வெடிக்காத குண்டு (திருப்பரங்குன்றம் கா.நி.கு.எண் 362/2012)
8. 20.11.2013 வழக்குரைஞர் அக்பர் அலி காரில் குண்டு வெடிப்பு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 120/2014).
9. 09.02.2014 – தினமணி தியேட்டர் அருகில் அ.தி.மு.க சாதனை விளக்கப் பொதுக்கூட்ட மேடை பின்புறம் குண்டு வெடிப்பு (தெப்பக்குளம் கா.நி.கு.எண் 88/2014).
10. 05.02.2014 – ராஜலிங்கம் வெங்காயக் கடை அருகில் ஒரு குண்டு கண்டெடுப்பு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 120/2014)
11. 14.03.2014 – நெல்பேட்டை ஜமாத் செயலர் காஜா மைதீன் பைக்கில் குண்டு வெடிப்பு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 196/2014).
12. 02.01.2015 – சிவகங்கை டாஸ்மார்க் பாரில் குண்டு வெடிப்பு (சிவகங்கை கா.நி.கு.எண் 02/2016) – பள்ளிவாசலுக்கு அருகில் டாஸ்மாக் இருந்ததால் எனச் சொல்லப்பட்டது.
13. 01.03.2015 – வில்லாபுரம் சம்சுதீன் என்பவரது வீட்டில் கத்தி மற்றும் குண்டு செய்வதற்குத் தேவையான பொருட்கள் சோதனையில் கண்டெடுக்கப் பட்டது (அவனியாபுரம் கா.நி.கு.எண் 262/2015 u/s 25(1)(a) of arms act r/w 201, 153 (A), 187, 120(B), 341 IPC).
14. 21.03.2015 – சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் குண்டு வைக்க மூலப் பொருட்கள் வைத்திருந்ததாக Q பிரிவு போலீஸ் வழக்கு குற்ற எண் 01/2015. 11 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். மூன்று வழக்குரைஞர்கள் உட்பட. இமாம் அலியைக் காட்டிக் கொடுத்தவர்களைப் பழிவாங்க உருவாக்கப்பட்ட ‘அல் முத்தஹீம் ஃபோர்ஸ்’ அமைப்பினர் செய்தது எனக் குற்றச்சாட்டு.
15. 29.09.2015 – ஆரப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இரண்டு பஸ்களில் குண்டு வெடிப்பு (கரிமேடு கா.நி.கு.எண் 859/2015). ஏழுபேர் குற்றம்சாட்டப்பட்டு ஐவர் பிணையில் உள்ளனர் இருவர் தலைமறைவு.
16. நெல்பேட்டை கல்பாலம் குண்டு வெடிப்பு – (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 769/21016).
17. .நெல்பேட்டை அம்சவல்லி ஓட்டல் அருகில் ஃபரீத்கான் என்பவர் பீடா கடையில் பார்சல் குண்டு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 900/2016).
மேலே உள்ள குண்டு வெடிப்பு வழக்குகள் எதிலும் யாரும் பாதிக்கப்படவில்லை. இந்த ‘வெடிகுண்டுகள்’ யாவும் பட்டாசுவகைக் குண்டுகள் எனவும் low intensity explosion எனவும் தான் காவல்துறையினரால் குறிப்பிடப்படுகிறது. இந்த வழக்குகள் பலவற்றின் குற்றப்புலனாய்வு அதிகாரியான ஏ.டி.எஸ்.பி மாரிராஜன் எங்களிடம் இக்குண்டுகள் பற்றிச் சொன்னது: “இந்த explosives எல்லாம் சும்மா சின்ன பட்டாசு வெடிங்கதான். உங்க பக்கத்தில இதை வச்சு வெடிச்சா பக்கத்துல இருக்கிற பேப்பர், துணி இதுதான் லேசா நெருப்பு பத்தி அணையும். வேற எந்த ஆபத்தும் இருக்காது. இந்தக் குண்டுகள் ஒவ்வொண்ணுக்கும் ஆகிற மொத்தத் தயாரிப்புச் செலவே ஒரு 150 ரூபாய்தான் இருக்கும்” பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் மதுரை காவல்துறை ஆணையரும் இவை சாதாரண பட்டாசுக் குண்டுகள்தான் என ஏற்றுக் கொண்டார். இந்த 17 வழக்குகளில் இதுவரை திருவாதவூர் பஸ் குண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கு, அ.தி.மு.க பிரச்சாரக் கூட்ட மேடைக்குப் பின் குண்டு வெடித்த வழக்கு, கவுன்சிலார் ராஜலிங்கம் அலுவலகம் அருகில் குண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கு, பிரான் மலை குண்டு தயாரிப்பு மூலப் பொருட்கள் வைக்கப்படிருந்தது என்கிற வழக்கு ஆகிய நான்கில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2011 முதல் 2014 வரையுள்ள அனைத்து வழக்குகள் மற்றும் கல்பாலம் வழக்கு ஆகியவற்றை சி.பி.சி.ஐ.டி காவல் பிரிவின் சிறப்புப் புலனாய்வுத் துறை (SIT) விசாரித்து வருகிறது. ஆரப்பாளையம் பஸ் குண்டு வழக்கு, சமீபத்திய நெல்பேட்டை பீடா கடை பார்சல் குண்டு வழக்கு ஆகிய இரண்டும் நகர காவல்துறையால் புலன் விசாரிக்கப்படுகிறது.
இந்தப் 17 வழக்குகளில் முதல் வழக்கு பதிவாகி ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன. நம் தமிழகக் காவல்துறை தன்னை ஸ்காட்லன்ட் யார்டுடன் ஒப்பிட்டுக் கொள்ளத் தயங்குவதில்லை. சுவாதி வழக்கில் ஒரு வார காலத்தில் குற்றவாளியைக் கண்டு பிடித்த பெருமையும் அதற்குண்டு. ஆனால் இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த 17 வழக்குகளில் நான்கில் மட்டுந்தான் அதனால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடிந்துள்ளது. நாட்டையே அச்சுறுத்தும் பயங்கரவாதம் தொடர்பான இவ்வழக்குகளில் இத்தனை மெத்தனம் ஏன்? இத்தனை வழக்குகளிலும் சுமார் 22 பேர்கள்தான் இதுவரை குற்றம் சாட்டப்பட்டு, அதிலும் 10 பேர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிலும் 9 பேர் இன்று பிணையில் வெளி வந்துள்ளனர். தமிழகக் காவல்துறையினர் வெடிகுண்டு வழக்குகளிலும் கூட இத்தனை இரக்கத்துடன் செயல்படக்கூடியவர்களாக இருக்கிறார்களே என வியப்பதா? இல்லை இவ்வளவுதான் இவர்களின் திறமை என நகைப்பதா? இல்லை இதற்கெல்லாம் பின் ஏதோ கரணங்கள் உள்ளன என சந்தேகப்படுவதா? இதற்கு விடை காண இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்ட முறைகளையும் அதனூடாக இன்று மேலெழுந்துள்ள சில பிரச்சினைகளையும் ஆராய வேண்டும்..
காவல்துறை மீது காவல்துறையே வைக்கும் குற்றச்சாட்டு
வெடித்ததெல்லாம் பட்டாசுக் குண்டுகள்தான் என்ற போதிலும் பெரும்பாலான முதல் தகவல் அறிக்கைகளில் குற்றவாளிகள் யார் எனப் பெயரிடப்படாத போதும், இந்த வழக்கு விசாரணைகளில் மதுரை முஸ்லிம்கள், குறிப்பாக நெல்பேட்டை வாழ் ஏழை எளிய முஸ்லிம் இளைஞர்கள் மிகக் கொடுமையாகத் துன்புறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஏ.டி.எஸ்.பி மயில்வாகனன் மற்றும் ஆய்வாளர் மாடசாமி ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்ட தனிப்படை ( Special Team) சுமார் 500 முஸ்லிம் இளைஞர்களைக் கடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தி விசாரித்தது. நெல்பேட்டை வாழ் பெண்களும் கூட பெண் போலீஸ் அதிகாரிகள் முன்னிலை இல்லாமல் விசாரிக்கப்பட்டனர். சுமார் ஓராண்டுக்கு முன் நெல்பேட்டை மக்கள் மத்தியில் இது தொடர்பாக விசாரித்த எங்கள் குழு முன் இப்படிப் பலரும் வந்து தாங்கள் அப்பாவிகள் எனவும், தங்களைத் துன்புறுத்துவதாகவும் பதிவு செய்தனர். இவர்களின் விசாரணை முறை எத்தனை அநீதியானது, இவர்களது விசாரணையில் எப்படி முஸ்லிம் வெறுப்பு அடிநாதமாக உள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லலாம்.
2011ல் இந்த மயில்வாகனன் – மாடசாமி ‘டீம்’ பரமக்குடி பா.ஜ.க பிரமுகர் முருகன் என்பவர் கொலையைப் புலனாய்வு செய்தது. பரமக்குடி – இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மதார் சிக்கந்தர் என்பவர் திருச்சி சிறையில் காவலராக இருந்தார். இவரையும் இந்தப் பகுதியைச் சேர்ந்த இத்ரிஸ் என்பவரையும் இந்தக் கொலை வழக்கில் தொடர்பு படுத்த மாடசாமி குழு முடிவெடுத்துக் களத்தில் இறங்கியது. இவர்கள் மதாரையும் இத்ரிசையும் கடத்திச் சென்று திருச்சியில் ஒரு விடுதியில் தங்க வைத்துச் சித்திரவதை செய்தனர். இதே நேரத்தில் இந்த ஊரைச் சேர்ந்த சுந்தரவேலு, பாண்டி என்னும் இரு இளைஞர்கள் வேறொரு வழக்கில் பிணை கிடைத்து திருச்சி நீதிமன்றத்தில் கையெழுத்திட ஆணையிடப்பட்டனர். கையெழுத்திடவந்த இந்த இளைஞர்கள் இருவரையும் மாட்சாமி டீம் கடத்திச் சென்று அவர்களை என்கவுன்டர் செய்வதாக மிரட்டியது. இறுதியில் அந்த மிரட்டலுக்கான காரணத்டை வெளிப்படுத்தினர். அவர்கள் இருவரும் கையெழுத்துப் போடுவதற்காக திருச்சியில் இருந்த போது அவர்கள் ஊர்க்காரரான மதாரின் அறையில் தங்கி இருந்ததாகவும் அப்போது அவர்களுக்குத் தெரிந்த இத்ரிஸ் அங்கு வந்ததாகவும் மதாரும் இத்ரிசும் சேர்ந்து முருகனைக் கொல்லச் சதித் திட்டம் செய்ததைத் தாங்கள் கண்டதாகவும் சாட்சி சொல்ல அவர்களை மாடசாமி டீம் மிரட்டியது.
திருச்சியில் உள்ள குரு லாட்ஜில் தங்கவைத்து அவர்கள் இவ்வாறு மிரட்டப்பட்டனர். அடுத்த நாள் நீதிமன்றத்தில் கையெழுத்திட அவர்கள் வந்தபோதும் கூடவே வந்த மாடசாமி டீம் வாசலில் காத்திருந்தது. அப்போது இந்த இளைஞர்கள் இருவரும் ஓடி அங்கு இருந்த வழக்குரைஞர் கென்னடியிடம் நடந்தவற்றைச் சொன்னார்கள். அவர் உடனடியாக மாஜிஸ்ட்ரேட் முன் (Judicial Magistrate Court No 2, Thiruchirappalli)அழைத்துச் சென்று அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். நீதிபதி ராஜாராம் அவர்கள் மாடசாமி மற்றும் அவரது குழுவில் இருந்த 16 காவலர்கள் மீதும் கொலை செய்வதாக மிரட்டியது, பொய்சாட்சிகளை உருவாக்கியது, மனித உரிமைகளை மீறியது ஆகிய அடிப்படைகளில் விசாரணை நடத்த வேண்டும் என CBCID காவல் பிரிவுக்கு ஆணையிட்டார் (ஆக 1, 2011). இந்த ஒரு சான்று போதும் மயில்வாகனன் – மாடசாமி குழு எவ்வளவு முஸ்லிம் வெறுப்புடன் விசாரணைகளை மேற்கொண்டனர் என்பதற்கு. இந்தக் குழு மீது CBCID விசாரணை தொடங்கிய பின்னும் தொடர்ந்து அந்தக் குழு மதுரை வெடிகுண்டு வழக்கு விசாரணைகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டது. தனது அதிகாரிகள் விசாரணை என்கிற பெயரில் மேற்கொள்ளும் கொடும் மனித உரிமை மீறல்களைக் காவல்துறை தண்டித்ததாக வரலாறே இல்லை என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சி.
இந்தப் பின்னணியில்தான் அப்போது மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த வி.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் காவல்துறைத் தலைவருக்கு (DGP) எழுதிய இரு கடிதங்கள் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தன. 23.08.2013 அன்று எழுதப்பட்ட முதல் கடிதத்தில் மயில்வாகனன் – மாடசாமி டீம் தனது நேரடி வழிகாட்டலில் மிகச் சிறப்பாக மதுரை வெடிகுண்டு வழக்குகளைப் புலனாய்வு செய்து வருகிறது எனவும், ஆனால் குற்றவாளிகளைச் சரியாக அடையாளம் கண்டு கைது செய்ய இருந்த நிலையில் அவர் திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனவும் இந்த இடமாற்ற ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரி இருந்தார். 29.03.2013 அன்று டி.ஜி,பி க்கு பாலகிருஷ்ணன் எழுதிய இரண்டாவது கடிதத்தில் மதுரை வெடிகுண்டு வழக்குகளை விசாரித்து வந்த பல்வேறு புலனாய்வு மற்றும் உளவுப் பிரிவுகளான மதுரை SID, மதுரை SIT, மதுரை நகர SIC ஆகியவற்றுக்கும் முஸ்லிம் அடிப்படைவாதிகளாகவும் காவல்துறையின் தகவலாளிகளாகவும் (informants) செயல்படும் இஸ்மத், வகாப் ஆகியோருக்கும் இடையே நிலவும் ஆபத்து நிறைந்த இரகசிய உறவுகள் குறித்த தன் கவலைகளைப் பகிர்ந்திருந்தார். அப்படியான ஒரு ‘தீவிரவாதியிடம்’ இருந்து 25,000 ரூபாயை உளவுப் பிரிவைச் சேர்ந்த விஜய பெருமாள் எனும் தலைமைக் காவலர் பெற்றுக் கொண்டதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இருந்தார். அதோடு காவல்துறையைச் சேர்ந்த விஜய பெருமாளும் இந்த முஸ்லிம் ‘தீவிரவாதிகளும்’ சேர்ந்து பரமக்குடியில் சிலரை மிரட்டிப் பணம் பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டிய பாலகிருஷ்ணன் விஜய பெருமாளின் நடவடிக்கைகள் மதுரை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வெடிகுண்டுகள் வைப்பதற்கும் பயன்பட்டுள்ளது என்கிறார். இன்றுவரை விஜயபெருமாள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. மாடசாமியின் இடமாற்றமும் ரத்தாகவில்லை.
கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் முறையீடு செய்தும் தன் இடமாற்றம் ரத்தாகாததைக் கண்ட மாடசாமி நேரடியாக ஊடகங்களிடம் பேசத் தொடங்கினார். ‘தி இந்து’ நாளிதழிலும் (அக் 23, 26, 2013), ஜூனியர் விகடனிலும் (நவ 03, 2013) அவரது கருத்துக்கள் வெளியாயின. அவற்றில் மதுரைக் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான மூன்று பேர்களைத் தான் கண்டுபிடித்து விட்டதாகவும் ஆனால் காவல்துறையின் CBCID பிரிவின் Special Investigation Division ஐச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் மாரிராஜன் என்கிற இரு ADSP கள் தடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். காவல்துறைப் பிரிவுகளுக்கிடையே இருந்த இந்த முரண்கள் அம்பலத்துக்கு வந்ததில் ஒன்று தெளிவாகியது. இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் காவல்துறைக்கும் தொடர்புண்டு அல்லது யார் அதைச்செய்திருப்பார் என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதுதான் அது. உண்மைகள் வெளிவந்தால் காவல்துறைக்கே பிரச்சினைகள் வரும் என்பதாலேயே ஐந்து ஆண்டுகள் ஆகியும் இந்தப் புலன் விசாரணைகள் இறுதியை எட்டவில்லை. இந்த அறிக்கைகளை எல்லாம் சுட்டிக்காட்டி SDPI கட்சியின் மாவட்ட வழக்குரைஞர் அணிச் செயலாளர் அப்துல் காதர் ஒரு ரிட் மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்தார் (W.P –MD- No. 4711 of 2014). தமிழ்நாடு காவல்துறை விசாரித்தால் உண்மைகள் வெளிவராது எனவும் மதுரை வெடிகுண்டு விசாரணை முழுமையையும் CBI க்கு மாற்றுமாறும் அவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.
மதுரை காவல்துறை மேற்கொண்டுள்ள சமாளிப்பு நடவடிக்கைகளும் அதன் மூலம் வெளிப்படும் முரண்களும் இந்த வெடிகுண்டு வழக்குகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக CBI விசாரணைக்கு மாற்றப்படும் வாய்ப்புள்ளது என்பதை அறிந்த மதுரை காவல்துறையினர் விரைந்து இந்த வழக்கு விசாரணைகளில் சில் மாற்றங்களைச் செய்தனர். இதன் முதற் கட்டமாக ஒரு புதிய ஆணையை வெளியிட்டனர் (மாநகர் சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் செயல்முறை ஆணை C.No.66/ Camp/ DC/ L&O/ M.C. 2015 dated 25.01.2015). இதன்படி மதுரை மாநகர் எல்லைக்குட்பட்ட வெடிகுண்டு வழக்கு விசாரணைகளை விசாரிக்க அண்ணா நகர் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் என்பவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த “மார்ச் 01, 2015 அன்று தனக்குக் கிடைத்த இரகசிய தகவல்” ஒன்றின் அடிப்படையில் அண்ணா நகர் இராமர் கோவில் சைக்கிள் குண்டு வெடிப்பு வழகில் (குற்ற எண் 404/2012) தொடர்புடைய சம்சுதீன் என்பவரைக் கைது செய்துள்ளதாக அறிவித்தார். அந்த சம்சுதீன் மீது அவனியாபுரம் காவல் நிலையத்தில் புதிய வழக்கொன்றைப் (262/2015) பதிவு செய்து, அவரது “ஒப்புதல் வாக்குமூலம்” நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி மதுரையைச் சுற்றி நடந்த குண்டு வெடிப்புகள் பலவற்றை இந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கண்டுள்ள நபர்கள்தான் செய்தனர் எனக் கூறப்பட்டது. இத்தகைய ஒப்புதல் வாக்குமூலங்கள் பலவும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வாக்குமூலம் அளிப்பவரிடம் படித்துக் கூடக் காட்டாமல் கையொப்பம் பெறப்படுபவை என்பது குறிப்பிடத் தக்கது.
மதுரை காவல்துறை இந்த வழக்குகளின் விசாரணையில் ஏற்படுத்தும் இடியாப்பச் சிக்கல் இத்தோடு முடியவில்லை. சிவகுமாரின் இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே இந்த குண்டு வெடிப்புகள் குறித்து மார்ச் 21, 2015 அன்று மதுரை Q பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை இன்னொரு வழக்கைப் பதிவு செய்தது. இந்தப் புதிய வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் நாம் தொடக்கத்தில் குறிப்பிட்ட 2011 முதல் 2015 வரையிலான அனைத்து வெடிகுண்டு வழக்குகளையும் கொண்டுவந்தனர். இந்த வழக்குகள் அனைத்திலும் 1908 ம் ஆண்டு Explosive Substances Act பிரிவுகள் 3,4,5 மற்றும் 120 (B) and 34 of IPC ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றங்கள் சுமத்தப்பட்டன. இதில் 11 பேர்கள் பெயர் குறிப்பிட்டும் மற்றும் சிலர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் அனைத்திற்கும் ஏற்கனவே அந்தந்தக் காவல் நிலையங்களில் தனித்தனியே வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் பழைய முதல் தகவல் அறிக்கைகளுக்கும் இன்றைய அறிக்கைக்கும் இடையில் பல முரண்கள் உள்ளன. இந்த முரண்கள் அவை அனைத்தும் அப்பட்டமாக ஜோடிக்கப்பட்ட பொய் வழக்குகள் என்பதைக் காட்டுகின்றன். எமது வழக்குரைஞர் குழு சுட்டிக்காட்டியுள்ள அப்படியான முரண்களில் சில இங்கே: 1. 2011 மாட்டுத்தாவணி டாஸ்மாக் குண்டு வெடிப்பு வழக்கு: ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான விசாரணையில் குண்டு வைத்தது உமர் ஃபாரூக் எனப் பதிவாகியுள்ளது. இன்றைய Q பிரிவு முன்வைக்கும் வாக்குமூலத்தின்படி அதைச் செய்தது ஹாரூன் எனச் சொல்லப் படுகிறது. 2. 2011 கே. புதூர் அரசு டிப்போ பேருந்து குண்டு வழக்கு: பழைய வாக்குமூலப்படி குண்டு வைத்தது இஸ்மத்; Q பிரிவு விசாரணையின்படி இது ஹாரூன். 3. 2012 இராமர் கோவில் சைக்கிள் குண்டு வழக்கு: சிவகுமார் விசாரணையில் இதைச் செய்தது பிலால் மாலிக், தௌபீக் ஆகியோர், ஹாரூன். Q பிரிவு விசாரணையில் தவ்பீக் பெயர் மட்டும் உள்ளது. 4. 2013 நவம்பர் சுங்கம் பள்ளிவாசல் அக்பர் அலி கார் குண்டு வழக்கு: சிவகுமார் விசாரணையின்படி இதைச் செய்தது ஹாருனுன் அசாருதீனும். Q பிரிவு விசாரணையில் இது மைதீன் பீர் ஆக மாறுகிறது. 5. 2014 சுங்கம் பள்ளிவாசல் காஜா மைதீனின் இரு சக்கர வாகனத்தில் குண்டு வெடித்த வழக்கு: சிவகுமார் விசாரணையின்படி அது உமர் ஃபாரூக்; Q பிரிவு விசாரணையின்படி அது மைதீன் பீர். 6. 2012 ஆகஸ்டில் உமர் ஃபாரூக் கடைக்கு வந்த பார்சல் குண்டு வழக்கு: சம்பவம் நடந்த உடன் பதியப்பட்ட தெற்குவாசல் காவல் நிலையமு.த.அ யின் அடிப்படையில் 96 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு குற்றவாளி அசாருதீன்தான் என அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இன்றைய Q பிரிவு விசாரணையின்படி பார்சல் குண்டைக் கொண்டு வந்தது தவ்பீக். விசாரணையில் இப்படி ஏற்படுத்திய அதிரடித் திருத்தங்கள் இத்தோடு முடியவில்லை. அடுத்து மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார்கள். திடீரென இந்த வழக்குகள் C.B.C.I.D யின் S.I.D வசம் ஒப்படைக்கப்பட்டது. C.B.C.I.D யின் ADSP மாரிராஜன் கடந்த 24.03.2015 அன்று இதை மறு வழக்காக மீள்பதிவு (Re – Register) செய்தார். அதன்பின் இந்த வழக்குகளின் விசாரணை அதிகாரிகளாக சீனிவாசன், முருகவேல், மணிவண்ணன், சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டாலும் நடைமுறையில் இந்த வழக்குகள் அனைத்தையும் இப்போது மாரிராஜனே விசாரித்து வருகிறார். நாங்கள் சந்தித்த அனைவரும் இதை உறுதி செய்தனர்.
இந்தப் புதிய திருப்பங்களின் ஊடாக இவர்கள் உருவாக்கிய ஒரு புதிய வழக்கு அதிர்ச்சியை அளைக்கக் கூடியது. மார்ச் 21, 2015 அன்று மேலூரில் அப்போது கூரியர் ஏஜன்சி ஒன்றை வைத்திருந்த அப்பாஸ்மைதீன் (43) என்பவரை Q பிரிவு போலீசார் பெரும் படையுடன் வந்து இழுத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் அவரைக் கடுமையாக அச்சுறுத்தி இறுதியில் பிரான் மலைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த ஏராளமான காவல்துறையினர் முன் அவரை நிறுத்தி, அடித்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு வாளியைக் கை நீட்டிக் காட்டச் சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கீழே காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கும் அந்த வாளி குண்டுக்குக் காரணமானவர் அப்பாஸ் மைதீன் தான் எனச் சொல்லப்பட்டது. பின் அவரிடம் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒரு வாக்குமூலத்தில் கையொப்பமும் பெறப்பட்டது. பின் மீண்டும் மார்ச் 31, 2015 அன்று அவரை ADSP மாரிராஜன் ‘கஸ்டடி’ எடுத்து இன்னொரு வாக்குமூலத்தில் கையொப்பம் வாங்கினார். ஒரே நபர், ஒரே வழக்கு குறித்துத் “தந்துள்ள” இரு வாக்கு மூலங்களிலும் பல வேறுபாடுகள் உள்ளன. Q பிரிவு முன் வைத்துள்ள வாக்குமூலத்தில், “2011 ம் ஆண்டு ஹாரூன் மூலம் ஒரு வெடிகுண்டு வைத்தோம். அது வெடித்தது” என அப்பாஸ் மைதீன் கூறுவதாக உள்ளது. பத்து நாட்களுக்குப் பின் ADSP மாரிராஜன் பதிவு செய்துள்ள வாக்குமூலத்தில், “பேக் கடை செய்யதுவும், ஹாருனும் வெடிகுண்டை மதுக்கடை முன் வைத்து வெடிக்கச் செய்வது எனத் தீர்மானம் செய்யப்பட்டது. உமர்ஃபாரூக் வெடிகுண்டு செய்து தருவதாகக் கூறினார். அப்போது செல்வகனி, தலைவர் சீனி, வக்கீல் பயாஸ், வக்கீல் சௌகத் அலி, ஆட்டோ யாசின் ஆகியோர் தங்களிடம் இருந்த பணம் 5000 த்தை வெடிமருந்துப் பொருள் வாங்குவதற்கு உமர் ஃபாரூக்கிடம் கொடுத்தனர். இரண்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நாங்கள் செருப்புகடை செய்யது கடைக்கு வந்தோம். அப்போது உமர் ஃபாரூக் கையில் ஒரு பேக் கொண்டு வந்திருந்தார். அதிலிருந்து பேட்டரி, வெடிமருந்து மற்றும் டைமருடன் கூடிய ஒரு டப்பாவை வெளியில் எடுத்தார். பேக் கடை செய்யதுவிடமும் ஹாருனிடமும் அதை எப்படி வெடிக்கச் செய்வது என்று சொல்லிக் கொடுத்தார். பின்னர் வெடிகுண்டை எடுத்து சென்று மதுக்கடை பார் முன்பு வைக்கச்சொல்லி பேக் கடை செய்யதுவிடமும் ஹாருனிடமும் சொல்லிவிட்டு நாங்கள் அங்கிருந்து கிளம்பி விட்டோம். அன்று இரவு மாட்டுத்தாவணி எதிரே உள்ள மதுக்கடையில் வெடிகுண்டு வெடித்தது” என விரிவாக உள்ளது. நாங்கள் நெல்பேட்டையில் சந்தித்த பலரும் “உன்னை 13 வழக்குகளிலும் சிக்க வைத்து விடுகிறேன்” என மாரிராஜன் உள்ளிட்ட காவல்துறையினர் மிரட்டி வருவதாகக் கூறினர். யாரை எல்லாம் காவல்துறை குறி வைத்துள்ளதோ அவர்களை எல்லாம் இப்படிக் காவல்துறையாலேயே தயாரிக்கப்பட்ட இந்த அப்பாஸ் மைதீனின் வாக்குமூலத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
நாங்கள் சந்தித்தவர்கள் சொன்னவை
முகமது முபாரக் எனப்படும் உமர் ஃபாரூக் (35), புது ராமநாதபுரம் : “தற்போது 13 வழக்குகள்ல என்னைச் சேர்த்துள்ளதாக நேற்று கூட ஆய்வாளர் சீனிவாசன் சொன்னார். இப்டி பொய் வழக்கு போடுறீங்களே, நீங்க நல்லா இருப்பீங்களா, என் பெண்டாட்டி பிள்ளைங்க மாதிரி உங்க பெண்டாட்டி புள்ளைங்க கஷ்டப்பட மாட்டாங்களான்னு கேட்டேன். ‘என்ன சபிச்சிராதப்பா. நான் என்ன பண்றது. எனக்கு எல்லாம் தெரியும். என்ன செய்யிறது Q பிராஞ்ச் ஏற்கனவே உன்னை இந்த வழக்குகள்ல சேர்த்துருக்கதால ஒண்ணுமே பண்ண முடியல. நீ 13 வழக்குலயும் AB (முன் ஜாமீன்) வாங்கிடு’ என்றார். நான் இமாம் அலிக்கு அடைக்கலம் கொடுத்தது அப்படி இப்படின்னு 2004 முதல் 2007 வரை மூணரை வருஷம் ஜெயில்ல இருந்தேன். ஹை கோர்ட்ல எல்லா வழக்கிலயும் விடுதலை ஆனேன். இப்ப மீன் வியாபாரமும் ரியல் எஸ்டேட்டும் பண்றேன். விஜய பெருமாள் என்கிற ஏட்டு என்னிடம் வந்து ஒரு ரியல் எஸ்டேட் டீல்ல அவருக்கு வேண்டிய ஒரு மூணாவது நபருக்குச் சலுகை பண்ணச் சொன்னார். என்னால முடியல. இப்ப என்னைப் பழி வாங்குறாங்க. இமாம் அலி வழக்குபோது நான் தலைமறைவா இருந்தப்போ போலீஸ் தொல்லை தாங்காம எங்க அப்பா மீரான் கனி மனித உரிமை செல்பாட்டாளரான ஹென்றி டிபேனிடம் உதவி கேட்டதுக்காக வங்கிக் கொள்ளை வழக்கு ஒண்ணுல அவரையும் என் அக்கா மாப்பிளையையும் பொய் வழக்கு போட்டு உள்ள தள்ளினாங்க. அதிலேயும் அவங்களை நீதிமன்றம் விடுதலை பண்ணிச்சு”
பாண்டு அலி என்கிற முகமது அலி (39), த.பெ முகமது சுல்தான் நெல்பேட்டை: “என்னையும் 13 வழக்குகள்ல சேர்த்திருக்காங்க. அந்த வழக்குகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இந்த வழக்குகள் எதுலயும் நான் இதுவரை கைது செய்யப்படல. உமர் ஃபாரூக் என்னோட மைத்துனர். இமாம் அலி தொடர்பான வழக்குல 10 வருஷம் ஜெயில்ல இருந்துருக்கேன். அதுக்குப் பிறகு நான் எந்த தீவிர நடவடிக்கையிலயும் இல்ல. ADSP மாரிராஜன் என்கிட்ட நல்லா பேசுவாரு. தேனி வெடிகுண்டு வெடிப்புக்கு முதல் நாள் நெல்பேட்டை பக்கம் வந்தாரு. நான் தேசிய லீக் கட்சியில இருந்து செயல்படுறேன். அவங்க 2012, செப் 29 அன்னிக்கு கம்பத்தில இமாம் அலி நினைவுநாள்னு அறிவிச்சிருந்தாங்க. அதுக்குப் போகலியான்னு மாரிராஜன் என்னைக் கேட்டாரு. ‘அவசியம் போப்பா. கட்சியில் பொறுப்புல இருக்கிறவங்க நிகழ்ச்சிகள புறக்கணிக்கக் கூடாதுல்ல’ என்றார். அதுல ஏதோ சூது இருக்குன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு. அதே மாதிரி அன்னிக்கு தேனியில குண்டு வெடிச்சுது…”
வழக்குரைஞர் சவுக்கத் அலி (36), த.பெ அப்துல் அஜீஸ், நெல்பேட்டை: “நான் ஹைகோர்ட்ல வழக்குரைஞரா இருக்கேன். என்னையும் 13 வழக்கில சேர்த்திருக்காங்க. ஒரு வழக்கில named accused. மற்ற வழக்குகள்ல confession ல கொண்டு வந்திருக்காங்க. நான் இதுக்கு முன்னாடி எந்த வழக்குலையும் சம்பந்தப்பட்டதோ விசாரிக்கப்பட்டதோ இல்லை. உமர் ஃபாரூக்கிற்கு நான் வழக்குரைஞர். அவரோட ரியல் எஸ்டேட் பார்ட்னர். அதனால என்னைப் பழி வாங்குறாங்க”
ஜரீனா பேகம் க/பெ பீர் முகம்மது, நெல்பேட்டை (ராமர் கோவில் குண்டு வழக்கில் இரண்டு வாரங்களுக்கு முன் கைதாகிச் சிறையில் உள்ள அபூபக்கர் சித்திக்கின் அம்மா): “என் மகன் எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டான். அரசியலுக்கும் அவனுக்கும் சம்பந்தமில்ல. அவன் ஒரு செல்போன் கடை வச்சிருக்கான். அதுல ஏதாவது திருட்டுபோன் பிரச்சினையில ரெண்டொரு தடவை கூப்பிட்டு விசாரிச்சுருக்காங்க. மத்தபடி இந்த குண்டு வழக்குகள் எதுலையும் அவனை விசாரிச்சது இல்ல. பெருநாள் முடிஞ்சு டூர் போய்ட்டு வந்தான். இப்டி அவனைப் புடிச்சுட்டுப் போயி ராமர் கோவில் வழக்குல சேர்த்துட்டாங்க…” ஜரீனா பேகம் அழுதுகொண்டே இதைச் சொன்னபோது அங்கிருந்தவர்கள் அதோடு இன்னொரு சம்பவத்தைச் சொன்னார்கள். ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் ஒரு குழு வந்து சித்திக்கைக் கைது செய்தபோது அவரது கடையில் வேலை செய்யும் சையது முகமது அதை வீடியோ எடுத்துள்ளார். உடனே அவர் செல்போனை சீனிவாசன் டீம் பிடுங்கிச் சென்றுள்ளது. அதைத் திரும்பப் பெறக் காவல் நிலையம் சென்றபோது சையது முகமதுவை ஒரு நாள் முழுக்க ஸ்டேஷனிலேயே காக்க வைத்து விசாரித்துள்ளனர். விசாரணை முடிந்து வந்த சையது மிகவும் மனம் சோர்ந்து காணப்பட்டுப் பின் தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையின் மிரட்டல் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். சையதுவின் உடல் அடக்கம் செய்யப்படும்போது தேவை இல்லாமல் ஆய்வாளர் சீனிவாசன் அந்த இடத்தில் ரொம்ப நேரம் சுற்றிச் சுற்றி வந்தார் எனவும் கூறுகின்றனர்.
வழக்குரைஞர் முகமது அலி ஜின்னா த.பெ கே.ஏ. உமர் பாய், நெல்பேட்டை: “என்னையும் 13 வழக்குகளில் சேர்த்துள்ளனர். எனது 17 வயதில் போலீசை அடித்ததாக என் மீது ஒரு வழக்கு. அதன் பின் 2005 வரை ஏழு வழக்குகள் போட்டார்கள். அதில் ஆறு வழக்குகளில் நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். மற்ற ஒரு வழக்கும் ரத்தாகி விட்டது. தமிழ்வீரன் எனும் ஒரு இந்துமுன்னணித் தலைவரைக் கொலை செய்ய முயன்றேன் என ஒரு வழக்குத் தொடர்ந்து குண்டர் சட்டமும் போட்டார்கள். அந்தத் தமிழ்வீரனே அது பொய் வழக்கு என நீதிமன்றத்தில் வாதாடி எனக்கு விடுதலை வாங்கித் தந்தார். இந்த ஆண்டு பிப்ரவரி 25 ந்தேதி ஒரு 30 போலீஸ்காரகள் வந்து என் வீட்டில் ‘சர்ச் வாரன்ட்’ காட்டித் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். என்னை மரியாதைக் குறைவாகப் பேசவும் செய்தார்கள். கடைசியில் ஒன்றும் கிடைக்கவில்லை என எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்கள். இமாம் அலியைக் காட்டிக் கொடுத்தவர்களைப் பழி வாங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் ‘அல் முத்தகீம் ஃபோர்ஸ்’ என்கிற தீவிர அமைப்பிற்கு நான் தலைவன் என அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்கள். அது அப்பட்டமான பொய். நான் கவுரவமாக வக்கீல் தொழில் நடத்துகிறேன். நான் எந்த வழக்கில் வக்கீலாக ஆஜர் ஆனேனோ அதே வழக்கிலும் என்னைக் குற்றவாளியாகச் சேர்த்தார்கள். குற்றம் சுமத்தப்பட்டவர்களோடு ஒரு வழக்குரைஞர் என்கிற முறையில் பழகுவதே தவறா? நான் மன நிம்மதி இன்றித் தவிக்கிறேன்,….”
அம்சவல்லி ஓட்டல் அருகில் பீடா கடை வைத்துள்ள ஃபரீத்கான் அவரது சகோதரர் மன்சூர்கான் இருவரையும் நாங்கள் சந்தித்தபோது அவர்கள், தங்கள் கடையில் சில நாட்களுக்கு முன் யாரோ ஒருவர் இரவு 11 மணி வாக்கில் வந்து 10 இனிப்பு பீடா ஆர்டர் செய்துவிட்டு, “தயாரித்து வையுங்கள். வருகிறேன்” எனச் சொல்லி ஒரு பையையும் கொடுத்து விட்டுச் சென்றதாகவும் பின் வரவே இல்லை என்பதால் அடுத்த நாள் அந்தப் பையைத் திறந்து பார்த்தபோது அது வெடிகுண்டு போலத் தெரிந்ததால் காவல்துறைக்குச் சொன்னதாகவும், அவர்கள் வந்து சோதனையிட்டு அதை எடுத்துச் சென்றதாகவும் கூறினர்.

ஆட்டோ யாசின் த.பெ காதர் மைதீன், நெல்பேட்டை மீன்மார்கெட் அருகில்: ”எந்த வழக்குன்னு தெரியல. ஆனா வழக்கில சேர்த்துருக்காங்களாம். வக்கீல் சொன்னாரு. இதுக்கு முன்னாடி எந்த வழக்கும் என்மீது கிடையாது. 2013ல் மயில்வாகனன், மாடசாமி டீம் நிறைய நெல்பேட்டைப் பையன்கள அழைச்சிட்டுப் போயி அடிச்சு சித்திரவதை பண்ணினாங்க. என்னையும் எந்தத் தப்பும் பண்ணாமலேயே ADSP ஆபீசில் வச்சு அடிச்சாங்க. நான் வெளியே வந்து அமானுல்லா என்கிற வழக்குரைஞர் மூலமா இன்ஸ்பெக்டர் மாடசாமி மேல ஒரு பிரைவேட் கம்ப்ளெயின்ட் கொடுத்தேன். அந்த கோவத்துல இப்ப என் மேல பொய் வழக்கு போடுறாங்க. எனக்கு இந்த ஆட்டோ தொழில் தவிர வேற வருமானம் இல்ல..”
பிரியாணி மைதீன் த.பெ பக்ருதீன், நெல்பேட்டை: “கல்யாண ஆர்டர்க்கு பிரியாணி செஞ்சு கொடுப்பது என் தொழில். 2002ல் இமாம் அலி வழக்கில என்னை சேர்த்திருந்தாங்க. அதுல எனக்கு 2 வருஷம் தண்டனை. அதுக்கு அப்புறம் எட்டு வழக்கு போட்டாங்க. ஒரு கொலை கேஸ் உட்பட. எல்லாத்துலையும் நான் விடுதலை ஆயிட்டேன். இப்ப பிரியாணி தொழில்தான் செய்றேன். அன்னிக்கு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வந்து என்னை வழக்கில் சேர்த்துள்ளதா சொன்னாரு. எந்த வழக்குன்னு தெரியல.
அப்பாஸ் மைதீன் (43) த.பெ ஷேக் தாவூது, மேலூர்: “நான் ரொம்ப சாதாரண குடும்பம். எனக்கு இரண்டு மனைவி. முதல் மனைவிக்குக் குழந்தை இல்ல. இரண்டாவது மனைவிக்கு நாலு பிள்ளைகள். ஒரு கூரியர் ஏஜன்சி எடுத்திருந்தேன். எனக்கு எந்த அரசியல் தொடர்பும் கிடையாது. மார்ச் 21, 2015 அன்னிக்கு யாரோ வந்து நூறு தேங்கா கூரியர் அனுப்பனும்னு கூப்பிட்டாங்க. கீழே இறங்கிப் போனா ஒரு வேன்ல ஏற்றிக் கொண்டு போய்ட்டாங்க. இரவு வரை என்னை என்னென்னவோ கேட்டாங்க. யார் யாரோ வந்து ஏதேதோ விசாரிச்சாங்க. ஒண்ணும் எனக்குப் புரியல. பயந்து போனேன். சாயந்திரம் என்னை பிரான் மலைக்கு அழைச்சிட்டுப் போனாங்க. அங்கே நிறைய பத்திரிகையாளருங்க இருந்தாங்க. மேலே கொண்டுபோனாங்க. ஏராளமாக அங்கே போலீஸ் அதிகாரிங்க இருந்தாங்க. அங்கே தூரத்தில ஒரு வாளியில என்னமோ இருந்துச்சு.. அதைக் கையை நீட்டி காமிக்கச் சொன்னாங்க. “ஏன்” ன்னேன். “என்னடா எதிர்த்தா பேசுறேன்னு அடிச்சாங்க. நான் கையை நீட்டினேன் போட்டோ பிடிச்சுட்டாங்க. அந்த வாளியில என்ன இருந்துச்சுன்னு கூட எனக்கு முழுசா தெரியாது. அப்ப அங்கே எங்க ஊரு முபாரக்கையும் கொண்டு வந்து அடிச்சு அதே மாதிரி கையை நீட்டச் சொல்லி போட்டோ எடுத்தாங்க. சார், அவன் என்னைவிட ரொம்ப அப்பாவி, என் சொந்தக்காரந்தான். ஆனாலும் அவன் கிட்ட நான் அதிகமாப் பேசுனது கூடக் கிடையாது. எங்க இரண்டு பேருக்கும் எந்த இயக்கத் தொடர்பும் கிடையாது. நானாவது தாடி வச்சிருக்கேன். தொழுகைக்குப் போவேன். இஸ்லாமிய ஒழுக்கங்களைக் கடை பிடிப்பேன். அவன் அதையும் செய்யுறது கிடையாது. அப்புறம் எங்களை தனித்தனியா கொண்டு போயி அடுத்த நாள் Q பிராஞ் போலீஸ் எதையோ கொண்டு வந்து என் கிட்ட கையெழுத்து வாங்கினாங்க. படிச்சு கூட காட்டல. பத்து நாளைக்கப்புறம் கஸ்டடியில் எடுத்து மாரிராஜன் டீம் மறுபடியும் ஒரு வாக்கு மூலத்தை அவங்களாவே எழுதி கையெழுத்து வாங்கினாங்க. சார். இது ரொம்ப அநியாயம். என் பழைய தொழில் போச்சு. இப்ப ஒரு செருப்புக் கடையில் வேலை செய்றேன். எனக்கு இது தாங்க முடியாத அனுபவம். என்னை ஏன் இதற்குத் தேர்ந்தெடுத்தாங்கன்னு என்னால புரிஞ்சுக்கவே முடியல. படுத்தா தூக்கம் வரமாட்டேங்குது சார்…”
அடுத்து அப்பாஸ் மைதீனுடன் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள முபாரக்கிடம் (வயது 24, த.பெ ஷேக் என்கிற மீரான் மைதீன், மேலூர்) பேசினோம். சின்னப் பையன் என்பதும் மிகவும் பயந்துபோயுள்ளான் என்பதும் குரலிலேயே தெரிந்தது. அப்பாஸ் சொன்ன அதே கதையை அவனும் திருப்பிச் சொன்னான். இந்தச் சின்ன வயதில் அந்தக் கோடூரமான அனுபவத்தை அவன் சந்தித்தபோது குணாளன் என்பவரது செருப்புக் கடையில் வேலை செய்து கொண்டு இருந்திருக்கிறான். ஆறு மாதம் கழித்து பிணையில் அவன் வெளியே வந்தபோது யாரும் அவனுக்கு வேலை கொடுக்கத் தயாராக இல்லை. கடந்த ஆறு மாதமாக ஏதோ ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை செய்கிறான். தினம் 170 ரூ ஊதியமாம். அதை வைத்துத்தான் குடும்பம் நடக்கிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. இதை எழுதும்போது ஏதோ ஒரு தகவலை உறுதி செய்ய போனில் தொடர்பு கொண்டோம். அவன் அம்மா பேசினார்கள். வேலைக்குப் போவிட்டானாம். “ஐயா, நாங்க எல்லாம் ஏழைங்க அய்யா, எங்களுக்கு யாரும் ஆதரவு இல்லைங்க அய்யா. இது ரொம்ப அநியாயம் அய்யா. அவன் ரொம்பச் சின்னப் பையன் அய்யா.. அவனுக்கு யாரும் இப்ப வேலை கூடக் குடுக்க மாட்டெங்குறாங்க அய்யா..” என அந்த அம்மா புலம்பி அழுதார்.
அதிகாரிகள் சந்திப்பு
சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் ADSP மாரி ராஜனை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். மிக்க பொறுமையாகவும் விரிவாகவும் அவர் எங்களுடன் பேசினார். இந்த வெடிகுண்டுகள் அனைத்தும் மிகச் சாதாரணமான பட்டாசுக் குண்டுகள் என அவர் சொல்லியதை வேறோர் இடத்தில் பதிவு செய்துள்ளோம். இந்த வெடிகுண்டு வழக்கு விசாரணையைப் பற்றி அவரிடம் கேட்டபோது, “நான் இப்ப அதிலேருந்து விலகிட்டேன். இந்த வழக்குகளை நாங்க விசாரிக்கக் கூடாதுன்னு ரிட் மனு ஒன்னு போட்ருக்காங்க அதனால நான் அந்த விசாரணையில இப்ப ஈடுபடுவதில்லை” என்றார். கைது செய்யப்படுகிறவர்கள் பலரும் அப்பாவிகள் எனக் கேள்விப்படுகிறோமே என நாங்கள் கேட்டபோது அவர் அதை மறுக்கவில்லை. “அப்பாவிகளும் இருக்கலாம். முஸ்லிம்களுக்குள் பல உட் பிரிவுகள் இருக்கு. இவங்களுக்குள்ளேயே போட்டி பகைமைகள் இருக்கு. ஒருவர் மேல ஒருவர் புகார் கொடுத்துக்கிறாங்க. அதனாலதான் இப்படிக் கைதுகள் நடக்குது. அப்புறம் இந்த முஸ்லீம்கள்கிட்ட இருக்கிற ஒரு கெட்ட பழக்கம் இவங்க எல்லாம் போலீசுடன் நெருக்கமா இருக்கிறதை ஒரு பெருமையா நினைக்கிறாங்க. அதனாலயும் சில பிரச்சினைகள் ஏற்படுது….”

“ஆய்வாளர் மாடசாமி என்பவர் உங்கள் மீதெல்லாம் கொடுத்துள்ள புகார் விசாரிக்கப்பட்டதா, ஏட்டு விஜயபெருமாள் ஒரு தீவிரவாதியிடமிருந்து பணம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு உள்ளதே அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?” எனக் கேட்டோம். “மாடசாமியிடம் விளக்கம் கேட்டு இருக்காங்க. அது குறித்து மேலதிகாரிங்களைத்தான் கேட்கணும் .விஜயபெருமாளிடம் விளக்கம் கேட்டதுக்கு அவர் தனக்கு அந்த நபர் கொடுக்க வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார்னு பதில் சொல்லி இருக்கார்” என்றார்.
நாங்கள் புறப்படும்போது, “ஆண்டவன் செயலால் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அப்பாவிகளை விடுதலை செய்வதில் தடையில்லை. என் மீதுள்ள ரிட் வழக்குகள் திரும்பப் பெறப்பட்டால் நானே இந்த வழக்குகளை விசாரித்து நல்லபடியாய் முடித்து வைப்பேன்” என்றார்.

அடுத்து நாங்கள் உளவுத் துறை உதவி ஆணையர் முத்துராமலிங்கம் அவர்களைச் சந்தித்தோம். “ஆரப்பாளையம் பஸ் குண்டு வழக்கு, பீடா கடை பார்சல் குண்டு வழக்கு இந்த இரண்டையும்தான் நகர காவல்துறை (city police) விசாரிக்குது. மற்றதெல்லாம் Q பிராஞ், CBCID இவங்க கிட்ட கொடுத்தாச்சு. இந்த இரண்டையும் கூட அவங்க கிட்ட மாத்தலாம்னு இருக்கோம். மற்ற வழக்குகளைப் பற்றித் தெரியணும்னா அந்த வழக்குகளை இப்போ விசாரிக்கிற ஆய்வாளர் சீனிவாசனைத்தான் நீங்க கேட்கணும்” எனச் சொல்லி அவரது தொடர்பு எண்ணையும் எங்களுக்குத் தந்தார்.
அடுத்து நாங்கள் நகர காவல் ஆணையர் ஷைலேந்திர குமார் யாதவ் அவர்களைச் சந்தித்தோம். பொய் வழக்குகள் பற்றிய எங்களின் புகார்களைச் சொன்ன போது, “ஆரப்பாளையம் பஸ் குண்டு வழக்கைத்தான் நாங்க விசாரிக்கிறோம். அது நேரடியா என் கண்காணிப்பில் விசாரிக்கப்படுது. அது பொய் வழக்கு இல்ல. குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒத்துக் கொண்டு தெளிவாக வாக்குமூலம் கொடுத்திருக்காங்க. மற்ற வழக்குகள் பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது” என முடித்துக் கொண்டார். பல்வேறு புலன் விசாரணை முகமைகளுக்கு இடையில் உள்ள போட்டிகளால் அப்பாவிகள் பலர் பாதிக்கப்படுவது பற்றி நாங்கள் கேட்கத் துவங்கியபோது, “ஒரு குற்ற விசாரணை என்பது போலீசின் புலன் விசாரணையோடு முடிந்து விடுவதில்லை. அதற்குப் பின் நீதிமன்றம் இருக்கிறது. குறுக்கு விசாரணைகள் இருக்கின்றன, வக்கீல்களின் வாதங்கள் இருக்கிறது. அவற்றின் மூலம் உண்மைகளைக் கொண்டுவரலாமே” என்றார்.
தற்போது இந்த வெடிகுண்டு வழக்குகளை விசாரித்து வரும் ஆய்வாளர் சீனிவாசன் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது தான் விசாரிக்கும் வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதாகவும், உயர் அதிகாரிகளைக் கேட்காமல் தான் ஏதும் பேச இயலாது எனவும் குறிப்பிட்டார். அப்பாவிகள் பலர் வழக்கில் சிக்கவைக்கப் பட்டுள்ளார்களே என்றபோது அதைப் பற்றியெல்லாம் விசாரணையில் உள்ளதால் ஒன்றும் சொல்வதற்கில்லை எனவும் எதற்கும் நேரில் வாருங்கள் எனவும் கூறினார்.
எமது பார்வைகள்
இந்திய அளவில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதும். பிணையில் வெளிவர இயலாமல் அவர்கள் நீண்ட வருடங்கள் சிறைகளில் வாடி, தங்களின் இளமையைத் தொலைத்து இறுதியில் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்படுவதும் இன்று கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. இப்படிப் பாதிக்கப்படுவது பெரும்பாலும் ஏன் முஸ்லிம்களாகவே உள்ளனர்? அவர்களைக் கைது செய்வது எளிது. அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றங்களை நிறுவுவதற்கு அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. அவர்கள் மீது குற்றத்தைச் சுமத்தினாலே போதும். அதுவே அந்தக் குற்றங்களின் நிரூபணங்களாகவும் ஆகிவிடுகின்றன. இந்த நிலை மிகவும் கவலைக்குரிய ஒன்று.
இதன் பொருள் குண்டு வைப்பவர்கள் மீது கடுமை காட்டக் கூடாது என்பதல்ல. அதே நேரத்தில் எக்காரணம் கொண்டும் குற்றமற்ற அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான். இப்படிச் சொல்வது வெறும் அற அடிப்படையான கூற்று மட்டுமல்ல. ஒரு ஜனநாயக அமைப்பு உறுதியாக நிலைப்பதற்கான அடிப்படியான நிபந்தனை இது. இந்த அமைப்பில் நமக்கு நீதி கிடைக்காது என்கிற எண்ணம் எந்தத் தரப்புக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. அப்படி உருவாகும் அவநம்பிக்கை (despair) அமைப்பின் மீது மட்டுமல்ல, சகமனிதர்கள் மீதும் வெறுப்பை விதைக்கிறது. இந்த வெறுப்பு அவரை வன்முறையாளராக்குகிறது. “அவநம்பிக்கை ஒரு குடிமகனை வன்முறையாளனாக்குகிறது. வேட்டையாடப்படுபவன் வேட்டை ஆடுபவனாக மாறுகிறான். அவநம்பிக்கை ஒரு கொடூரமான கொலை ஆயுயதம்” (Despair can turn you from citizen to perpetrator. From the hunted to the hunter. Despair can be a deadly weapon) என ஷோமா சவுத்ரியை மேற்கோள் காட்டி நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு சொல்வது கவனத்துக்குரியது.
பெருகிவரும் தீவிரவாதச் சூழலில் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்குப் பின் என்னதான் வழி? விஞ்ஞானபூர்வமான புலனாய்வு என்பதுதான் ஒரே வழி. கிரிமினல் குற்றப் புலனாய்வு என்பது ஒரு அறிவியல். இன்று அது பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. தீவிரமாக முயன்றால் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. ஆனால் மதுரையில் என்ன நடக்கிறது? முறையான புலனாய்வு நடைபெறுவதே இல்லை. நாங்கள் விசாரித்தவர்களில் ஒருவர் சொன்னது போல பெரும்பாலான நேரங்களில் அவர்கள் செல் போனை நோண்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதுதான் அவர்களின் வேலையாக உள்ளது. இது ஏன்?
இந்தக் கேள்விக்குப் பதில் காண்பதற்கு முதற்படியாக நாம் இதுவரை கண்டவற்றைத் தொகுத்துக் கொள்வோம்?

1. இந்த 17 குண்டுவெடிப்புகளும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தக் கூடியவை அல்ல. வெறும் பட்டாசு வெடிகுண்டுகள்.
2. ஐந்து ஆண்டுகள் ஆகியும் வெறும் ஐந்து வழக்குகளில்தான் குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
3. வழக்கு விசாரணையில் ஏகப்பட்ட குழப்பங்களும் முரண்களும் உள்ளன. ஒரு புலனாய்வு முகமை குற்றவாளியை நெருங்கும் நேரத்தில் இன்னொரு புலனாய்வு முகமை அதைத் தடுப்பதாக ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொள்கிறார்கள்.
4. ADSP மாரிராஜன், ADSP கார்த்திகேயன், தலைமைக் காவலர்கள் மாரியப்பன், விஜய பெருமாள் ஆகியோருக்கும் நகர காவல்துறைக்கும் இடையில் முரண் உள்ளது.
5. மேற் குறிப்பிட்ட இந்த நால்வர் குழு தீவிரவாதிகள் எனக் குற்றம் சாட்டப் பட்டவர்கள் சிலருடன் நெருக்கமாக இருக்கிறார்கள். விஜய பெருமாள் எனும் தலைமைக் காவலர் அப்படி ஒருவரிடம் பணம் பெற்றுள்ளது இன்று உறுதியாகியுள்ளது.
6. இன்று வழக்கு பதியப்பட்டவர்களில் அப்பாவிகளும் உள்ளனர் என்பதை வெளிப்படையாக ஒரு அதிகாரி ஒத்துக் கொள்கிறார்.
7. வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட முஸ்லிம்களைப் பொருத்த மட்டில் அ) இமாம் அலி காலகட்ட வழக்குகளில் தண்டிக்கப்பட்டுப் பின் இப்போது குடும்ப வாழ்க்கை, தொழில் என வாழ்ந்து கொண்டிருப்போர் ஆ) ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில்களில் இருப்போர் இ) காவல்துறையுடன் நேரடியாக முரண்பட்டோர் ஈ)மேலே சொன்ன இவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் ஆகியோர் தவிர உ) முற்றிலும் எந்த அரசியலிலும் தொடர்பில்லாத அப்பாவிகள் என அவர்களை அடையாளம் காண முடிகிறது.
8. முன்னதாக வழக்குகளில் சம்பந்தப்பட்டுச் சிறை சென்றவர்கள் ஆயினும் அவர்களில் பலருக்கும் இப்போது அவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் தொடர்பு இல்லை. பெரும்பாலும் அவை பொய் வழக்குகள்.
9. அல்முத்தகீம் ஃபோர்ஸ் எனும் அமைப்பைக் காரணம் காட்டி உ.முகமது அலி ஜின்னா போன்ற வழக்குரைஞர்கள் சிக்கலுக்குள்ளாக்கப்பட்ட போதிலும் அப்படி ஒரு அமைப்பு செயல்படுவதற்கான சான்றுகள் இல்லை. ஒருமுறை தமுமுக பிரமுகர் ஒருவரது லெட்டெர் பேடில் SIT தலைமைக் காவலர் மாரியப்பன் என்பவரே ‘அல்முத்தஹீம் ஃபோர்ஸ்’ குறித்து ஒரு புகார் டைப் செய்து வந்து தந்து அனுப்பச் சொன்னர் என நாங்கள் சந்தித்த முகமது அலி கூறினார்.
10. வழக்குகளில் தண்டிக்கப்பட்டு வெளி வந்து திருமணம் தொழில் என யாரும் திருந்தி வாழ காவல்துறை அனுமதிப்பதில்லை. அவர்கள் தொடர்ந்து காவல்துறையால் உளவு சொல்வதற்கும் பிற சட்ட விரோத காரியங்களுக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
11. ரியல் எஸ்டேட் முதலான சிக்கலான தொழிலில் ஈடுபடுவோர்கள் காவல்துறையினரால் எளிதில் பயன்படுத்தக் கூடியவர்களாகவும் பழிவாங்கப்படக் கூடியவர்களாகவும் ஆகிறார்கள்.
12. SIT முதலிய சிறப்புப் படைகளைத் தக்க வைத்துப் பலன் பெறுவதற்கும், பதவி உயர்வு, பணப் பரிசுகள் முதலியவற்றைப் பெறுவதற்கும் காவல் துறையில் சிலருக்குத் தொடர்ந்து இந்த மாதிரியான குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தேவைப்படுகின்றன.
13. இந்தத் “தீவிரவாதிகள்” என முத்திரை குத்தப்படுபவர்களில் ஒருவரான முகமது அலியுடன் அண்ணன் தம்பி உறவுமுறையுடன் செல்போனில் ADSP மாரிராஜன் ‘சாட்’ செய்துள்ளதைக் கண்டோம். ஆனால் அதே அண்ணன் தம்பிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்படும்போது ஏராளமான ஆயுதக் காவலர்கள் புடை சூழ அவர்களைக் கொண்டு வந்து மக்கள் மத்தியில் இவர்கள் பீதி ஊட்டுவதைக் காணலாம்.
14. வழக்கு விசாரணை தவறாகச் செய்யப்பட்டாலும் நீதிமன்றத்தில் நீதி கிடைக்குமே என கண்காணிப்பாளர் ஷைலேஷ் யாதவ் அவர்கள் சொன்ன பதில் மிகவும் பொறுப்பற்ற ஒன்று. வழக்கு என போடப்பட்டுச் சிக்க வைக்கப்பட்டால் இத்தகைய வழக்குகளில் பிணையில் வெளிவருவது எளிதல்ல. இதனால் அவர்களின் எதிர்காலமும் குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. அவர்களின் பிள்ளைகள் குற்றவாளிகளின் பிள்ளைகளாகக் காணப்படும் கொடுமையும் நிகழ்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சமூகமே இத்தகைய வழக்குகள் மூலம் சந்தேகத்துக்குரிய ஒரு சமூகமாகக் கட்டமைக்கப்படுகிறது.
15. இந்தக் காவல்துறை அதிகாரிகள் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டிக் கொண்டாலும், முரண்பட்டுக் கொண்டாலும் ஒரு அம்சத்தில் மிகவும் ஒற்றுமையாகச் செயல்படுகின்றனர். நெல்பேட்டை போன்ற பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய முஸ்லிம் சமூகத்தை ஒட்டுமொத்தமாக ஒரு தீவிரவாதச் சமூகமாகக் கட்டமைப்பது என்கிற அம்சம்தான் அது. காவல்துறையினர் மத்தியில் உயர்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை சமூக ஒற்றுமை மற்றும் மதச்சார்பின்மை குறித்த உணர்வூட்டும் பயிற்சித் திட்டம் (sensitization programme) ஒன்றை நிறைவேற்றுவது அவசியமாகிறது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு தலித் பிரச்சினைகளிலும், பெண்ணுரிமை சார்ந்த பிரச்சினைகளிலும் தமிழகத்தில் இத்தகைய பயிற்சிமுகாம்கள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.
எமது முடிவுகளும் கோரிக்கைகளும்
1. இந்த வெடிகுண்டு வழக்குகள் 17 லும் இங்குள்ள பல்வேறு விசாரணை முகமைகளாலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெரும்பான்மையோருக்கு இந்தக் குற்றங்களில் தொடர்பு இல்லை.

2. இமாம் அலி காலத்திலிருந்து மதுரை முஸ்லிம் தீவிரவாதத்தின் மையமாக உள்ளது என தமிழகக் காவல்துறை மக்கள் மத்தியில் ஒரு பீதியை உருவாக்கிப் பரப்பும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. போலீஸ் பக்ருதீன் போன்றவர்கள் கைது செய்யப்பட்ட பின்னும் இன்னும் அங்கு ஆபத்து உள்ளது என ஒரு புனைவை உருவாக்குவது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இதுவரை மயில்வாகனன் – மாடசாமி டீம் இப்பகுதி இளைஞர்களைச் செய்த கடும் சித்திரவதைகள் எல்லாம் நியாயமானவைதான் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துவது ஆகியன இந்தப் பொய்வழக்குகளின் நோக்கங்களாக் உள்ளன. இதன் மூலம் ஒரு சமூகப் பிரிவின் மீது மக்கள் மத்தியில் வெறுப்பும் கோபமும் ஏற்படுவது பற்றியும், இது சமூக ஒற்றுமையைக் குலைப்பது பற்றியும் காவல்துறை இம்மியும் கவலைப்படுவதில்லை. ADSP மாரிராஜன், கார்த்திகேயன், மயில்வாகனன் ஆய்வாளர் மாடசாமி, காவலர்கள் விஜயபெருமாள், மாரியப்பன் போன்றோரின் சார்பு நிலை மற்றும் பொய் வழக்குகள் மூலம் மக்களுக்கு எண்ணற்ற துயரங்களை. உருவாக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை இக்குழு கவலையோடு சுட்டிக் காட்டுகிறது.
3. காவல்துறை மற்றும் உளவுத்துறையுடன் முஸ்லிம்கள் கொண்டுள்ள வெளிப்படையான மற்றும் இரகசியமான தொடர்புகள் இறுதியில் அவர்களுக்கும் அவர்களின் சமுதாயத்திற்கும் உலை வைப்பதாகவே உள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என இக்குழு அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.
4. தீவிரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் திருந்தி வாழ காவல்துறையினர் அனுமதிக்காத நிலை மிகவும் அநீதியானது. இதை வன்மையாக இக்குழு கண்டிக்கிறது.
5. உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியாமல் உள்குத்து வேலைகள் நடப்பது அதிகாரபூர்வமாக கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனால் அம்பலப்பட்டுத்தப்பட்ட பின்னும் அதன் அடிப்படையில் ரிட்மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் உடனடியாக வழக்குகளைத் திசை திருப்பிக் கொண்டு போகும் நோக்கில் காவல் துறையின் ஒரு பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்ட முற்றிலும் பொய்யான ஒரு நடவடிக்கைதான் பிரான் மலை வெடிகுண்டு வழக்கு. முற்றிலும் அப்பாவியான அப்பாஸ் மைதீன், முபாரக் என்கிற இரு நபர்கள் இதில் பலியாக்கப்பட்டுள்ளனர். வழக்கைத் திசை திருப்பும் நோக்குடன் ADSP மாரி ராஜனே அவர்களின் வாக்குமூலம் என ஒன்றைத் தயாரித்து அவரை மிரட்டிக் கையொப்பம் பெற்றுள்ளார். அவரால் குறி வைக்கப்பட்ட நெல்பேட்டை இளைஞர்கள் பலரும் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இது குறித்து ADSP மாரிராஜன் உள்ளிட்ட குழுவினர் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
6. கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கொடுத்துள்ள இரண்டு குற்றச்சாட்டுகளையும் பதவியில் உள்ள ஒரு நீதிபதியைக் கொண்டு விசாரிக்க வேண்டும்.
7. இந்தப் 17 வழக்குகளையும் தமிழகக் காவல்துறை விசாரித்தால் நீதி கிடைக்காது என்பதால் இந்த வழக்கு விசாரணை முழுமையையும் உடனடியாக மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (CBI) மாற்ற வேண்டும். 

Source:
http://ippodhu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%aa/

’இஸ்லாத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்பில்லை’ : போப் பிரான்சிஸ்




இஸ்லாத்தைப் பயங்கரவாதத்தோடு ஒப்பிடுவது நியாயமற்றது, தவறானது என்று ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவப் பிரிவின் தலைவர் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்; பிரான்சில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரை பயங்கரவாதிகள் கொன்றதை ஏன் போப் இஸ்லாத்துடன் இணைத்துப் பேசவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்; “இஸ்லாத்தை வன்முறையோடு தொடர்புபடுத்துவது சரியானதல்ல” என்று போப் பதிலளித்தார்.
போலந்திற்கு புனிதப்பயணம் மேற்கொண்டுவிட்டு ரோமுக்குத் திரும்பிய சிறப்பு விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் போப் பிரான்சிஸ்; ”எல்லா மதங்களிலும் அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள்; ஒரு வன்முறையை இஸ்லாமிய வன்முறை என்று முத்திரை குத்தினால், இன்னொரு வன்முறையை கத்தோலிக்க வன்முறை என்று முத்திரை குத்த வேண்டிவரும்; அவ்வாறு செய்வது நியாயமானதல்ல” என்றார் போப்.
”மதங்கள் அமைதியைப் போதிக்கின்றன; சில மக்கள் குழுக்கள்தான் பணம், இயற்கை வளம் ஆகியவற்றுக்காக போரிடுகிறார்கள்; பொருளாதாரம், அரசியலோடு தொடர்புள்ள இதனை மதத்தோடு தொடர்புபடுத்துவது தவறு” என்று சொன்னார்.
ஐ.எஸ் எனப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் பற்றிக் கேட்டபோது, ”அது வன்முறைக் குழுவாக இருக்கிறது; ஆனால் அது இஸ்லாம் அல்ல” என்றார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் ரோமில் பேசிய போப் பிரான்சிஸ், புனித பைபிளிலுள்ள போதனைகளைப்போலவே புனித குர்ஆனின் போதனைகளும் உண்மையானவை என்று விளக்கமளித்தார். 

Thanks.
Source: ippodhu.com August 16, 2016

Happy Independence Day!

இந்திய சுதந்திரத்திற்க்காக, உடலாலும் உயிராலும் பொருளாலும் தியாகத்தாலும் போராடி பெற்று தந்த இஸ்லாமிய சமுதாயத்தின் பங்களிப்போடு 70வது சுதந்திர ஆண்டை அடைந்துள்ளோம். உண்மையான சுதந்திரத்தை அடைந்தோமா என்பதினை தேடிக்கொண்டே இருக்கின்றோம்,
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் இந்த ஆட்சியாளர்கள்.









வெள்ளத்தில் புத்தகங்களை தவற விட்டீர்களா?: இவர்களை தொடர்பு கொள்ளவும்



Source: http://ippodhu.com/

Message 2:

Any 10th or 12th std students whose books got washed away don't worry. Contact this below number, they will get you the full set.
PH: 9663123165

ஜிஹாத் - Jihad




ஜிஹாத் என்றாலே பலரும் தீவிரவாதம் என்றும், நாச வேலைகளில் ஈடுபடுவதும் என்றும் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அது தவறு.

ஜிஹாத் 
என்பது மற்றவர் மீது அன்பு செலுத்துதல், எவ்வளவு கடினமாக இருப்பினும் உண்மைக்காக அயராது உழைத்தல், எக்காரணம் கொண்டும், எந்த தருணத்திலும்

பொய் கூறாமல் இருப்பது.
 உண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா? உணர்ச்சி, செயல்பாடு, வாய்மை, உழைப்பு என அனைத்து வகையிலும் உண்மைக்காக போராடுவது. இஸ்லாமிய இறைமார்க்கத்தைக் கற்கும் வழியில் மனத்தைப் பக்குவப்படுத்துவது, கடினமான வேளைகளிலும் மனத்தை பொறுமையாக வைத்துக் கொள்வது போன்றவை தான் உண்மையான ஜிஹாத்....


இன்முகம் காட்டுதல் 
கடுமையான, துயரமான நேரங்களில் கூட இன்முகம் காட்டி பழகுதல் தான் ஜிஹாத்தின் உண்மை பொருள். உண்மைக்காக போராடுவது, அன்பு செலுத்துவது, தீயது செய்தாலும் அவரை மறந்து மன்னிப்பது.

அயராத உழைப்பு 

எதுவாக இருப்பினும் அது உண்மை எனின், நல்லதை விளைவிக்கும் எனின் அதற்காக அயராது உழைப்பது தான் ஜிஹாத். தொடர்ந்து அந்த உண்மையை
நிலைநிறுத்த போராட ஜிஹாத் ஒருவருக்கு தேவைப்படுகிறது.

மீண்டு வருதல் 

ஒருவர் தனது வலுவின்மையில் இருந்து மீண்டு வருதல், தனது கடமையை செய்ய முயற்சித்து எழுவது போன்றவை தான் ஜிஹாத்தின் உண்மை பொருள்.


வாய்மை
 உண்மையை பேசுதல், உண்மையை மட்டுமே மற்றவரிடம் பரப்புதல். எந்த தருணத்திலும், எந்த காரணத்திற்காகவும் பொய் புகழாது இருப்பது.

 செயல்
 நல்ல காரியங்கள் மட்டுமே செய்தல், அநீதியை எதிர்த்து போராடுதல் எதிர்மறை செயல்களை தடுத்தல் போன்றவை தான் ஜிஹாத்தின் செயல்கள்.

 மனதை அடக்குதல் 

பேராசை, தீங்கு விளைவிப்பது போன்ற தீய எண்ணங்களின் வழியில் மனது பயணிக்கும் போது / பயணிக்க விரும்பும் போது அந்த உணர்வுகளை கட்டுப்படுத்துதல், அதைவிட்டு வெளிவருதல்.

நல்வழியில் ஈடுபடுதல் 

மனத்தின் தீய எண்ணங்களை எதிர்ப்பது மட்டுமின்றி, மனதை நல்வழியில் ஈடுபட வைப்பதும் கூட ஜிஹாத் தான்.


பொறுமை

 இறைமார்க்கத்தைக் கற்கும் வழியில் மனத்தைப் பக்குவப்படுத்துவது. இஸ்லாமியக் கடமைகளைச் செய்வது, இறை நெறியின்பால் அழைக்கும் பணியில் மனத்தைப் பொறுமையுடன் ஈடுபடுத்துவது போன்றவையும் ஜிஹாத் தான்.

Source Thanks: Tamil.oneindia.com

http://tamil.boldsky.com/insync/pulse/2015/what-does-jihad-mean-islam-009670.html







.Net Project Lead - Urgent!


.Net Project Lead - Job description
· Minimum 8 years of experience with good experience in windows based application development
· Bachelor’s degree in Computer Engineering or related
· Should have sound analytical skills, creativity
· Should be a quick learner and good judgmental person architecting solutions to various client problems by understanding their needs
· Should have very good communication skills with experience in interacting with clients from USA and others
· Should have good experience in systems integration and development, package implementation, user-centered analysis, evaluation techniques and interactive design.
· Should have good hands on experience in developing Plugins as needed
· Should have good experience in OO design principles in creating custom software solutions or modifying package solutions
· Should lead the team on coding standards, scalability, architecture, performance of application and adoptability and reusability of solutions.
Technology Stack Required
· VB.NET 2010 and above
· Should be good in following concepts and its implementation in projects
o Linq, Lambdas, Multi-threading, tasks, xelements, templating & generics
o WPF, XAML, MVVM, XAML resource dictionaries, WPF binding, WPF Converters, WPF commands, Winforms.
o VB.NET unit testing, private objects, VB.net UI tests
o Namespaces
o XML and XSD
o Exception Handling
o Synclocks
o State machines, SFC, flow chart patterns
o Odata
o Plugin pattern
o Plugins Development
o ActiveX - COM/DCOM
o Socket Programming - Winsock, TCP IP
o Tracing
o WCF
o .NET extension methods
o VB.NET attributes, observable collections, concurrent collections
o Serialization
o Reflection
o Mutli-tier systems
o Tcp/ip sockets
o Localization (translation)
o Factory pattern
o DAL (data access layer)
· SQL Server 2005
· Object Oriented Design Principles
· Service Oriented Architecture
· Technical Documentation
· Experience in the following will be highly preferred
o RS Logix 5000, RS Linx, RS Emulate/SoftLogix
o Prism
o Kepware
· PLCs experience will be an advantage

· Google docs knowledge will be an advantage

Send Resume to : hyder.oei@openwavecomp.in

நன்றி பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அவர்களே

நன்றி பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அவர்களே: நன்றி பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அவர்களே இஸ்லாத்துக்கு தாங்கள் புரிந்த சேவைக்காக (செப்டம்பர் 11 அன்று குரானை எரிக்க போவதாக சொன்னவர் இப்பாதிர...

14th September 2015 Makkah Fajr Sheikh Humaid

திப்புசுல்தானாக ரஜினி நடிக்கக் கூடாது: இந்து முன்னணியின் பிணம்தின்னி அரசியல்


Thanks Ippodhu.com
Source:http://ippodhu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8/
சந்தர்ப்பங்களை உருவாக்கியேனும் மதவெறியை முன்வைக்கும் அமைப்பு இந்து முன்னணி. திப்புசுல்தானாக ரஜினி நடிக்க வேண்டும் என்று கன்னடப்பட தயாரிப்பாளர் அசோக் கெனி விடுத்த அழைப்பு, வெறும் வாயை மென்று கொண்டிருந்த இந்து முன்னணிக்கு கிடைத்த அவல். திப்புசுல்தானை இந்து விரோதியாக்கி மதவெறியை மென்று துப்பியிருக்கிறது, இந்து முன்னணியின் தலைமை.
இந்து முன்னணியின் அமைப்பாளர் ராம.கோபாலன் இது குறித்து துவேஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“திப்புசுல்தான் வேடத்தில் தமிழ் நடிகர்கள் நடிப்பது தமிழர்களை அவமானப்படுத்துவதற்கு சமம். திப்பு சுல்தான் தமிழர்களுக்கும் குறிப்பாக இந்துக்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல்கள் பற்றி பல வரலாற்று புத்தகங்களில் இருந்து அடையாளம் காட்ட முடியும்.
தமிழர்களை துரத்தியடித்த திப்புசுல்தானை சிறந்த சுதந்திர போராட்ட தியாகியாக சித்தரிப்பதற்கான முயற்சிதான் இந்த பட தயாரிப்பு. முன்னாள் முதல்– அமைச்சர் எம்.ஜி.ஆரின் மூதாதையர்கள் கொங்கு நாட்டில் உள்ள பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள். அந்த பகுதி மைசூர் சமஸ்தானத்தில் ஐதர் அலி ஆளுகையில் இருந்த போது இந்துக்களை மதம் மாறும்படி கட்டாயப் படுத்தினார்கள். மதம் மாற விருப்பம் இல்லாதவர்கள் அங்கிருந்து பாலக்காட்டுக்கு குடி பெயர்ந்தனர். அவ்வாறு குடி பெயர்ந்தவர்களில் எம்.ஜி.ஆரின் மூதாதையர்களும் அடங்குவர்.
எனவே எனது வேண்டுகோள் தமிழையும், தமிழரையும் நேசிப்பவர்கள் யாரும் திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க கூடாது. அந்த படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாம் வாழும் காலத்தில், மும்பையில் தமிழர்களை அடித்துத் துரத்திய சிவசேனாவையும், பால்தாக்கரேயையும் விமர்சிக்க இந்து முன்னணி அமைப்பாளருக்கு அன்று வாயோ, வார்த்தைகளோ இருக்கவில்லை. சாதியின் பெயரால் தினந்தோறும் தலித்துகள் தாக்கப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள். அந்த இந்துக்களுக்காக பேச இந்து முன்னணிக்கு நாவில்லை.
ஆனால், சரித்திரத்தை திரித்து இவர்கள் கூறும் புரட்டு கதைகளை நம்பி, திப்புசுல்தான் படத்தில் ரஜினி நடிக்கக் கூடாது. நடித்தால் அது தமிழையும், தமிழரையும் அவமதிக்கும் செயல் (ரஜினி இந்தப் படத்தில் இந்து முன்னணி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நடிக்கப் போவதில்லை என்பது வேறு விஷயம்).
நிகழ்காலத்தில் நடக்கும் சமூக கொடுமைகளுக்கு கள்ள மவுனம் இருந்துவிட்டு, இறந்தகாலத்தை தோண்டியெடுத்து மதவெறி அரசியல் செய்யப் பார்க்கிறது இந்து முன்னணி.
இந்த தேசவிரோத செயலை கண்டிப்பதும், புறக்கணிப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும்.


Online Basic Quran Class -WhatsApp

Online (WhatsApp) Basic Quran Class.


We are conducting online Quran classes through WhatsApp.

If you’re interested to join, please WhatsApp your name and number to +91-9444436633

Format: OK [SPACE] Your Name


QR Code Generator Using PHP

class QRGenerator {

    protected $size;
    protected $data;
    protected $encoding;
    protected $errorCorrectionLevel;
    protected $marginInRows;
    protected $debug;

    public function __construct($data='http://www.phpgang.com',$size='300',$encoding='UTF-8',$errorCorrectionLevel='L',$marginInRows=4,$debug=false) {

        $this->data=urlencode($data);
        $this->size=($size>100 && $size<800 300="" :="" nbsp="" p="" size="">        $this->encoding=($encoding == 'Shift_JIS' || $encoding == 'ISO-8859-1' || $encoding == 'UTF-8') ? $encoding : 'UTF-8';
        $this->errorCorrectionLevel=($errorCorrectionLevel == 'L' || $errorCorrectionLevel == 'M' || $errorCorrectionLevel == 'Q' || $errorCorrectionLevel == 'H') ?  $errorCorrectionLevel : 'L';
        $this->marginInRows=($marginInRows>0 && $marginInRows<10 margininrows:4="" nbsp="" p="">        $this->debug = ($debug==true)? true:false;  
    }
public function generate(){

        $QRLink = "https://chart.googleapis.com/chart?cht=qr&chs=".$this->size."x".$this->size.                            "&chl=" . $this->data .
                   "&choe=" . $this->encoding .
                   "&chld=" . $this->errorCorrectionLevel . "|" . $this->marginInRows;
        if ($this->debug) echo   $QRLink;        
        return $QRLink;
    }
?>
Example 1: Without data it will generate QR code
$ex1 = new QRGenerator();

?>

Babari Masjid

இறைவன் முன் எல்லாம் மனிதர்களும் சமம்