"யா அல்லாஹ்! முஸ்லிமான சகோதரர்களிடையே ஒற்றுமையே கொடு "யா அல்லாஹ்!

"இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகிறது.

(இப்படிக் கூறும்போது) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள்.
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹுல் புகாரி 2446

"சகோதரர்களே! சற்று சிந்தித்துப் பாருங்கள் நமது சகோதரர்கள் சிறையில் ஒரு வருடம் அல்ல இரண்டு வருடம் அல்ல 14 வருடம் சிறையில் தன் தாய்யயும், தகப்பனையும், மனைவியையும், பெற்ற புள்ளையையும் பிரிந்து அவர்கள் படும் கஷ்டத்தை சொல்லி மாளாது.

சகோதரர்களே! தயவு செய்து இயக்கங்கள் பாராமல் நமது சகோதரர்களை விடுதலை செய்ய ஒன்று சேருங்கள்.

இன்ஷா அல்லாஹ் அவர்கள் விடுதலைக்காக துஆ செய்து கொண்ட இருங்கள்.

"இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹுல் புகாரி 2442

No comments:

Post a Comment