ஜாதிகள் இல்லையடி பாப்பா !



(பீ. எம். கமால் , கடையநல்லூர்)
 
செல்வமும் செல்வாக்கும்
சேர்ந்துவிட்டால்
ஜாதிகள் இல்லையடி பாப்பா !
 
கையிலே காசிருந்தால்
உயர்ந்த ஜாதி !
பையில் பணம்
இல்லைஎன்றால்
தாழ்ந்த ஜாதி !
 
தாழ்ந்த சாதிக்காரனிடம்
பதவி பணம் இருந்தால்
உயர் ஜாதிக்காரன்
ஓடிவந்து கால்களிலே
சாஷ்டாங்கம் பண்ணும்போது
ஜாதிகள் இல்லையடி பாப்பா !
 
கடவுளுக்குப் பணிய
மறுப்பவனும்கூட
காசிருப்பவன் காலில்
கண்மூடி விழுகின்றான் !
ஜாதிகள் இல்லையடி பாப்பா !
உன் கையில் காசிருந்தால்
ஜாதிகள் இல்லையடி பாப்பா !

No comments:

Post a Comment