உங்கள் தேர்வு! (கோபம்)
ரஹ் அலி, M.S.D..உடன்குடி



(இறைவன் மீது பயபக்தியுடையோர்தங்களின் கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள்மனிதர்களின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள்அல்லாஹ்இத்தகைய நல்லோர்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3:134)

பொதுவாக இந்த உலகில் வாழும் நாம் ஒவ்வொருவருமேவிரும்பினாலும்விரும்பா விட்டாலும்பிற மனிதரோடு இணைந்தே வாழ வேண்டிய நிலையில்இருக்கிறோம்அந்தப் பிற மனிதன்நமது கணவனாகமனைவியாகநண்பனாக உறவினராகசகபணியாளனாகமாற்று மதத்தைச் சார்ந்தவர்களாகஇப்படிபல்வேறு வகையினராக இருக்கலாம்அவர்கள் அனைவருமேநல்லவர்களாக இருந்திடுவதில்லைஅவர்களில் ஒருசிலர் தீயவர்களாகவும் இருப்பார்கள்.அவர்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும்போதுஅவமானப்படுத்தும் போது ஆத்திரம் வரும்பழிவாங்க வேண்டும் என்று நமது உள்ளம் ஆர்ப்பரிக்கும்.அதுதான் இயற்கையும் கூட.

ஆனால்… உலகில் ஒவ்வொருவருமே இப்படி பழிவாங்கும் எண்ணத்தோடு அலைந்தால் அல்லது திருப்பித்தாக்க ஆரம்பித்துவிட்டால்உலகில்உடலாலும்-மனதாலும் ஊனமுற்றவர்களே நிறைந்து காணப்படுவார்கள்உலகில் ஏற்படும்அத்தனை பிரச்சனைகளுக்கும் அடித்தளம் என்ன வென்றுநீங்கள் யோசித்துப் பார்த்தால்சகிப்புத் தன்மை இல்லாததுதான் முக்கிய காரணம் என்பதை நாம் உணரலாம்எனவே தான்மேற்கண்ட இறைவசனத்தின்மூலம் இஸ்லாம் சகிப் புத் தன்மையை இறை நம்பிக்கையாளனின் பண்புகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறதுகோபம் கூடாது என்று கூறவில்லை மாறாககோபத்தை மென்று விழுங்கி விடுமாறு வலியுறுத்துகிறது.

கோபப்படும் மனிதர்கள் ஒவ்வொரு வரும் கொஞ்சம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்ஏனெனில் நடைமுறை வாழ்வில் உப்புக்கல்லுக்கும்பெறாதசின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நாம் கோபப்பட்டு நம் உடலையும் மனதையும் வருத்திக் கொள்கிறோம்ஒரு வகையில் பார்த்தால் கோபம்என்பது கூட தற்காலிகமான ஒரு பைத்தியக்காரத்தனம்தான்கோபத்தின் உச்சகட்ட நிலையை அடைந்த ஒருவன்அதன் தொடர்ச்சியாக பல்வேறுவகையான முட்டாள்த் தனமான செயல்களில் ஈடுபடுவான். (.ம்தட்டியவுடன் கதவு திறக்கவில்லை என்றால்… உடனே நாம் கதவையே திட்ட ஆரம்பித்துவிடுவோம்இன்னும் சிலர் அந்தக் கதவையே எட்டி உதைப்பதும் கூட உண்டுஇது வெல்லாம் கோபம் என்ற பைத்தியக் காரத்தனத்தின் வெளிப்பாடு.

கோபத்தின் மூலம்நன்மையாதீமையாஎன்று சிந்தித்துப் பார்த்தால்…. நன்மையை விட தீமையே நிறைந்து காணப்படும்சே… அவசரப்பட்டுவிட்டோமே… அந்த நேரத்தில் நாம் ஏன் அப்படி நடந்து கொண்டோம்இந்தக் கேள்வியைத் தாண்டி வராத மனிதர்களே யாரும் இருக்க முடியாது.கோபத்தோடு ஒருவன் இடத்திலிருந்து எழுகிறான் என்றால் … அவன் நஷ்டத்தோடுதான் உட்கார வேண்டியது ஏற்படும்கோபத்தில் ஒருவனைப்பழிவாங்குவதைவிடஅவனை மன்னித்து விடுவதில் நமக்குப் பல்வேறு பயன்கள் உண்டு என்பதை முதலில் புரிந்துகொள் வேண்டும்.

நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால்நபியேதீமையைநீங்கள் நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள்.  அவ்வாறாயின்உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையானமிக்க நெருங்கிய நண்பனைப் போல் காணபீர்கள். (41:34)

ஒருவனை மன்னிப்பதின் மூலம் அவனுடைய அன்புநன்றி உணர்வு போன்றவற்றை இலவச இணைப்பாகவும் பெற முடியும்இதற்கு மாற்றமாக நாம்கோபப்பட்டால் அதனால் நம்முடைய எனர்ஜி அதிக அளவில் செலவாகிறதுஉடல் மற்றும் மன அமைதி கெடுகிறது என்பது மாத்திரமல்லஎதிராளியின்தொடர் கோபம் மற்றும் பகைமைக்கும் ஆளாகிறோம்கோபத்தில் ஆத்திரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுவதின் மூலம் எதிரிகளில் ஒருவனைஅதிகமாக்குவது அறிவுடமையாஇல்லை பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை மூலம் புதிதாக ஒரு நண்பனை அடைது அறிவுடமையாஎன்பதை நீங்களேசிந்தித்து முடிவு செய்து கொள்ளுங்கள்.

மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் நெறிநூலாகிய அல்குர்ஆன் கூறுகிறதுநிலைகுலையாது நின்று மன்னிக்கும் மாண்புடையோர்நிச்சயமாக இது உறுதிபடைத்த நெஞ்சினரின் பணியாகவன்றோ உள்ளது? (42:43)

எனவேஅவர்களை மன்னித்துபுறக்கணித்து விடுவீராகநிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான். (5:13)
நபி(ஸல்அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்ஒருவன் உங்களை அவமானப்படுத்தினால்ஏளனம் செய்தால்குறை கண்டால்பலருக்கு மத்தியில்மானபங்கப்படுத்தினால்அதைப் பொறுத்துக் கொள்ளுங்கள்அதற்குப் பதில் தரும் வகையில் நீங்களும் அவனை ஏசவோஅவமானப்படுத்தவோவேண்டாம்ஏனென்றால் அவன் உங்களுக்கு எதிராகப் பேசிய அந்த வார்த்தையே-செய்த அந்தச் செயலே அவனை அவமானப்படுத்தப் போதுமானஒன்றாகும். (அபூதாவூத்)
அதெப்படி…. ஒருவன் நம்மை அவமானப்படுத்தும் போது நாம் மட்டும் சும்மா வாயைப் பொத்திக் கொண்டு அமைதி காப்பதுநாக்கைப் புடுங்கிக் கொள்கிறமாதிரி நாலு கேள்வி கேட்டால் தானேமனது ஆறும்என்று நீங்கள் கேட்கலாம்… உங்கள் மனதை ஆறுதலாக்க கூடிய இந்த நபி மொழியைக் கொஞ்சம்சிந்தியுங்கள்!

ஒருவன் இன்னொருவனைத் திட்டுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்உடனே அது குறிபார்த்து எறியப்பட்ட அம்புபோல நேரே எதிராளியைப் போய்தாக்கி விடுவதில்லைஅந்த வார்த்தை சிலபல இடங்களுக்குப் பயணப் படுகிறதுமுதலாவதாக அது வானத்தின் பக்கம் செல்கிறதுஆனால் வானத்தின்கதவுகள் மூடப் பட்டிருக்கும்உடனே அது இந்த பூமிக்கு மீண்டும் திரும்புகிறதுஇங்கே பூமியின் கதவுகளும் மூடப்பட்டு விடும்எனவே அந்த வார்த்தைஇங்கும் அங்குமாக இடம் தேடி அலையும்எங்கேயும் அதற்கு இடம் கிடைக்காதுஇதற்குப் பின் தான் அது எதிராளியிடம் செல்லும்சென்ற உடனேயே அதுஅவனைத் தாக்கி விடுவதில்லைஅதற்கு அவன் உரித்தானவனா என்று கொஞ்ச நேரம் நின்று யோசிக்கும்உரித்தானவன் என்றால் அது அவனைச்சென்றடையும்இல்லையயன்றால் …. சுவற்றில் எறியப்பட்ட பந்துபோல் எறிந்தவன் மீதே திரும்ப வந்து பாயும்நபி(ஸல்அவர்கள் சொன்ன தெளிவானஅந்த செய்தியானது அபூதாவூத் என்ற நபி மொழி நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

நம்மீது எறியப்பட்ட சொல்லம்புகள்நமக்கானது இல்லை என்கிற போது அதை நினைத்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்அதற்காக கோபப்பட்டு நம்எனர்ஜியை நாம் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்இத்தகைய மனோநிலைநம் வீட்டில்சமூகத்தில்மக்கள் தொடர்பில் வந்து விட்டால் பிரச்சனைகள்தோன்றுமாகுழப்பங்கள் உருவாகுமாசிந்தியுங்கள்?

நமக்குத் துன்பம் தருபவர்களைத் தேடிக் கண்டு பிடித்து பழி வாங்க வேண்டும் என்று நினைப்பது ஒரு நல்ல முஸ்லிமுக்குரிய அடையாளம் அல்லஒரு நாய்கடித்து விட்டது என்பதற்காக அதைத் தேடிக் கண்டு பிடித்து கடிக்கவா செய்கிறோம்அப்படிச் செய்பவன் அறிவாளியாக

No comments:

Post a Comment