நீ ஆண்மகனா ?


நீ ஆண்மகனா ?
(பீ.எம். கமால், கடையநல்லூர்)
பெண் வீட்டில் கை நீட்டிப்
பெறுகின்ற பேர்களே !
நீங்கள் ஆண்களா என்று
ஆராய்ந்து பாருங்கள் !
பெண் வீட்டில்
கேட்டுப் பெறுவது
கேவலம் அல்லவா ?
பிச்சைக் காரனின்
பிழைப்பது வல்லவா ?
கரும்பு தின்பதற்கு
கைக்கூலி கேட்பவனே !
நீ
ஆண்மகனா ? இல்லை..................!!!
ஆள்பவன்தான்  ஆண்
ஆனால் நீயோ
பிறர் கையை எதிர்பார்க்கும்
பிச்சைக் காரனாயும்
எச்சிலைத் தின்கின்ற
இழிநா  யாகவும்
மாறிப்போன மர்மம்தான் என்ன ?
முடமாகிபோனது உன் 
அறிவுமட்டும் தானா ?
திருமணம் எனபது
வாழ்வின் துவக்கம் !
வர்த்தகத்தின்  துவக்கம் அல்ல   !
திருமணம்    எனபது
வாழ்க்கை ஒப்பந்தம்
வர்த்தக ஒப்பந்தம் அல்ல !
பெண்ணைக் கொடுத்து விட்டால்
பெற்றவர்கள் எல்லோரும்
கண்ணை மூடிக்
கைகட்டி நிற்க வேண்டும்
வெண்ணை எனக்கேட்டால்
நெய் கொண்டு வரவேண்டும்
என்றெல்லாம் நினைப்பது உன்
அயோக்கியத்தனத்தின்
ஆரம்பம் அல்லவா ?
பெண்ணைப்  பெற்றெடுத்த
பெற்றோரே ! இனி இந்தத் 
திண்ணைச் சோம்பேறி
திருட்டுப் பயல்களிடம்
இஸ்லாத்தைப் பற்றி
இதமாகச் சொல்லுங்கள் !
கைக்கூலி பேசும்
கல்யாணத் தரகர்களை
கண்டதும் சுடுவதற்கு
கட்டாயம் நாட்டில்
சட்டம் இயற்றுங்கள் !


Thanks to...
MUSTAFA KAMAL 

No comments:

Post a Comment